Wednesday, 28 September 2016

 ' பணமே வேண்டாம்...போட்டி போட வாங்க...!'  -விஜயகாந்தின் வேட்டை


உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். 
தமிழக அரசியல் கட்சிகள் சுதாரித்து எழுவதற்குள், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது அ.தி.மு.க. இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது தி.மு.க. அதேபோல், மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடும் வெளியிடப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் தே.மு.தி.க என்ற கட்சியே இருப்பதுபோல் தெரியவில்லை. " கட்சித் தலைமை எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், போட்டியிடுங்கள் என்று வற்புறுத்தாமல் இருந்தால்போதும்" என ஆதங்கப்படுகிறார் கொங்கு மண்டல தே.மு.தி.க நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம், 
" கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான ஓட்டுக்களை தே.மு.தி.க குவித்தது. கவுன்சிலர் இடங்களுக்குப் போட்டியிடுவதில் பெரிய தகராறே வெடித்தது. அந்தளவுக்குக் கட்சி பலமாக இருந்தது. ' தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜயகாந்த். ஆனால், அதற்குரிய வேட்பாளர்கள் கிடைக்காமல் தடுமாறி வருகிறோம். நேற்று தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எங்களிடம், ' நாளை மாலைக்குள் விருப்பமனு கொடுத்தவர்கள் பட்டியலை அனுப்பிவிடுங்கள். தி.மு.க முழுப் பட்டியலையும் வெளியிடுவதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும்' எனக் கட்டாயப்படுத்தினார். அதற்கு நாங்கள், ' மனு கொடுத்தவர்கள்கூட போட்டியிடத் தயங்குகிறார்கள். பலபேர் விருப்பமனுவுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்த முடியவில்லை' எனச் சொன்னோம். ' விருப்பமனுவுக்குப் பணமே வாங்க வேண்டாம். எப்படியாவது பட்டியலைத் தயாரித்து அனுப்பிவிடுங்கள். கேப்டன் அவசரப்படுத்துகிறார்' எனக் கேட்டுக் கொண்டார். 
இந்தளவுக்குக் கட்சியின் வளர்ச்சி அதல பாதாளத்திற்குப் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க கூடாரத்திற்குச் சென்றுவிட்டனர். இப்போது பார்த்தசாரதியும் இளங்கோவனும் மட்டுமே கட்சிப் பணியை கவனிக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கேப்டன் கவலைப்படுவதாக இல்லை. பிரேமலதாவோ, ' கட்சியை விட்டுப் போகிறவர்கள் போகட்டும். நம்மைச் சுற்றி நல்லவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது' என கேப்டனிடம் பேசியிருக்கிறார். அவரும், ' உண்மைதான். நாம் பதவியில் உட்கார்ந்துவிட்டால், நம்மைத் தேடி அனைவரும் வந்துவிடுவார்கள்' என விவரித்திருக்கிறார். உண்மையில், தமிழ்நாட்டில் நிலைமை தெரியாமல் இவர்கள் பேசிக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. 
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா முப்பது பேர் மட்டுமே போட்டியிட மனு கொடுத்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் மனுவை வாபஸ் வாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. மாநகராட்சிகளின் 900 கவுன்சிலர் பதவிகளும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இவற்றில், 25 சதவீத அளவுக்கு மட்டுமே, எங்களால் வேட்பாளர்களை அறிவிக்க முடியும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சமபலத்தில் இருக்கின்றன. தே.மு.தி.க என்ற கட்சி இருப்பதையே மக்கள் மறந்து வருகிறார்கள். அதை உணர்ந்து கொண்டு கட்சியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தலைமை ஈடுபடவில்லை. மாநகராட்சிகளின் அனைத்து வார்டுகளுக்கும் போட்டியிடுவதற்கு ஆட்கள் இல்லை. ' போட்டியிடுவற்கு யார் வந்தாலும் சீட் கொடுத்துவிடுங்கள்' என்கின்றனர். அப்படி யாராவது விருப்பப்பட்டு வருகிறார்களா எனத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்றார் நொந்துபோய்.

உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.


உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புகாரளிக்க  கீழ்காணும் தொலைபேசி எண்களில் தொடர்புக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1800 425 7072
1800 425 7073
1800 425 7074
044- 23635011
044- 23635010
ஃபேக்ஸ் எண்கள்
044- 23631014
044- 23631024
044- 23631074
#TNElection2016 | #தேர்தல்2016

கோட்டைப்பட்டினம், மல்லிப்பட்டினம் மீனவர்கள் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிக்க அதிரடி முடிவு.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 300க்கும் அதிகமான விசைப்படகுகள் மூலம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்படித்து வருகின்றனர். இந்த மீனவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே மீன்கள் இறால், நண்டு உள்ளிட்டவை குறைவாகவே கிடைத்து வருகிறது. இதற்கு தகுந்த விலை கிடைக்கவில்லை. மேலும் அரசு தரும் மானிய டீசல் போதவில்லை.
மானிய டீசலை அதிகரித்தால் மீனவர்களுக்கு ஏற்படும் ஓரளவு நஷ்டத்தை தவிர்க்கலாம். மானிய டீசலை உயர்த்தி தர வேண்டும், இலங்கையில் உள்ள படகுகளை மீட்டு தர போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி மீனவர்கள் இன்று 6வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
320 விசைபடகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவ பிரதிநிதிகள் கூறுகையில், மீனவரத்து இல்லை. மானிய டீசல் போதவில்லை. பெரும்பாலான மீனவர்களின் படகுகள்் இலங்கையில் உள்ளது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு மீனவர்கள் நஷ்டத்தில் உள்ளோம். மானிய டீசலை உயர்த்த வேண்டும். படகுகளை மீட்டு தரவேண்டும். இல்லைஎன்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.
சேதுபாவாசத்திரம்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் துறைமுகம் அமைக்க, மீனவர்கள் விட்டுக்கொடுத்த இடத்துக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மல்லிப்பட்டிணம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், இந்திய கடலோர கப்பல் படை முகாம் இயங்கி வரும் கட்டிடம் காலி செய்ய இருப்பதால் அந்த கட்டிடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும்.
விசைப்படகுக்கு மாதம் ஒன்றுக்கு விற்பனைவரி நீக்கம் செய்யப்பட்ட டீசல் 1,500 லிட்டரை 3,000 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்ட பகுதி நாட்டுப்படகு, பைபர் கிளாஸ் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று 6வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தாஜூதீன் கூறும்போது, இதே நிலை நீடித்தால் வரும் 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் உள்ளாட்சி தேர்தலை மீனவர்கள் புறக்கணிப்போம் என்றார்

Tuesday, 27 September 2016

சவுதி அரேபியா: வர்த்தக சந்தையை காப்பாற்ற 20 பில்லியன் ரியால் முதலீடு..!


ரியாத்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்நாட்டு வணிக வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் போதிய நிதி இல்லாத காரணத்தால் பல வர்த்தக நிறுவனங்கள் முடங்கி விடும் அபாயம் நிலவுகிறது. 
இப்பிரச்சனைகளைக் களையும் வகையில் சவுதி அரேபிய நாட்டின் மத்திய வங்கி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.! 
நிதிப்பற்றாக்குறை 
 சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்த காரணத்தினால் இந்நாட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக வங்கிகளிடமும் போதிய அளவிலான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வணிக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைத் தாறுமாறாக உயர்த்தி வருகிறது.
 சவுதி வர்த்தகச் சந்தை  
ஏற்கனவே கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் பாதிப்பின் மூலம் அதிகளவிலான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்திருக்கும் சவுதி அரேபிய நாட்டு நிறுவனங்கள், நிதி உதவி அளிக்க வேண்டிய வணிக வங்கிகளும் அதிக வட்டியை விதிக்கத் துவங்கியுள்ளதால் ஒட்டுமொத்த வர்த்தகச் சந்தையே சரிவு பாதையை நோக்கிச் செல்ல துவங்கியுள்ளது.  
முதலீடு 
 இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன்னரே களைய வேண்டும் என முடிவு செய்த சவுதி அரேபிய நாட்டின் மத்திய வங்கி, இந்நாட்டின் வங்கிகளில் சுமார் 20 பில்லியன் ரியால் அதாவது 5.3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் நாணய சந்தையை ஈர்க்கும் விதிமாகப் புதிதாக இரண்டு முதலீட்டுத் திட்டத்தையும் அறிவிக்க முடிவு செய்துள்ளது.  
நிதிநிலை  
வங்கிகளில் அரசு சார்பில் 20 பில்லியன் ரியால் முதலீடு செய்வதன் மூலம் நாட்டில் நிதிநிலை மேம்படும் என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்த வங்கியில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்போகிறது என மத்திய வங்கி தெரிவிக்கவில்லை. இதனுடன் 7- 28 நாள் கொண்ட முதலீட்டுப் பத்திரத்தையும் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
     டெப்பாசிட்  
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தகம் கச்சா எண்ணெய். கடந்த சில மாதங்களாகச் சர்வதேச சந்தையில் இதன் விலை அதிகளவில் குறைந்து வங்கிகளில் டெப்பாசிட் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் சவுதி வங்கிகளில் டெப்பாசிட் அளவு சுமார் 3.3 சதவீதம் குறைந்துள்ளது.  
வட்டி விகிதம்  
அனைத்து வழிகளிலும் இருந்து நிதி வரவு குறைந்த காரணத்தினால் கடந்த 15 மாதங்களில் இந்நாட்டின் வங்கிகளில் வட்டி விகிதம் சுமார் 1.5 சதவீத அதிகரித்துள்ளது. போராட்டம் நாணய மதிப்பு, வர்த்தகச் சந்தை, நிதி நிலை, பணப்புழக்கம் ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இந்நாட்டு அரசு தொடர்ந்து போராடி வந்தனர். தற்போது இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை பிரச்சனையைக் களையவே இந்த 20 பில்லியன் ரியால் முதலீடு செய்வதை இறுதிக்கட்ட முடிவாக மத்திய வங்கி ஏற்றுள்ளது.  
ரியால் நாணய மதிப்பு..  
இந்தியா ரூபாய்க்கு எதிரான சவுதி ரியால் நாணய மதிப்பு 17.78 ரூபாய். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் எளிமையான நாணய பரிமாற்ற சேவைகளை பெற இதை கிளிக் செய்யவும்.  
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
  இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 0.04 சதவீதம் உயர்ந்து 44.52 டாலராக உள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.03 சதவீதம் உயர்ந்து 45.92 டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை எதிர்கொள்ளும் தஞ்சை, திண்டுக்கல்!


தஞ்சை: நகராட்சியாக இருந்த தஞ்சாவூர், மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை எதிர்கொள்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பதவி பொதுவானதாகும். மேலும் திண்டுக்கல்லும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை சந்திக்கிறது. பொதுப்பிரிவில் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி தற்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தல் நடத்தப்படுவதால் இரு மாவட்டங்களிலும் தேர்தல் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூரில் 51 வார்டுகளும், திண்டுக்கல்லில் 45 வார்டுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, 26 September 2016

கோவையில் வழிப்பறி - காவலர்கள் கைது


கோவை அருகே கேரள நகை வியாபாரியின் ஊழியர்களிடம் ரூ. 3.93 கோடி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பரமத்தி காவல்நிலைய காவலர் பழனிவேல் , தென்னிலை காவல்நிலைய காவலர் அர்ஜூனன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே இந்த வழக்கில்,  காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர்  சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் தர்மேந்திரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதத்தை வேரருக்கு வேண்டும் ஐ .நா வில் சுஸ்மா சுவராஜ் பேச்சு...!


தீவிரவாதத்தை வேரருக்கு வேண்டும் ஐ .நா வில் சுஸ்மா சுவராஜ் பேச்சு...!
தீவிரவாதிகளை உருவாக்கும் தீவிரவாத இயக்கங்களை கண்டறிந்து தீவிரவாதத்தை வேறோடு அறுக்க வேண்டும் என்று ஐ.நாவில் சுஸ்மா சுவராஜ் பேசியுள்ளார்.
தீவிரவாதத்தின் புகழிடமே RSS தான் என்பது உலகறிந்த விடயம். அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனம் ஒரு சர்வே வெளியிட்டது. அதில் இந்தியாவின் முதல் தீவிரவாத இயக்கம் RSS தான் என்று.
எல்லாம் தெரிந்த சுஸ்மாவுக்கு இது தெரியாமல் போய்விட்டது போலும்.
RSS ஐ ஒழித்தால் இந்தியா அமைதி பூங்காவாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
வீரவசனம் பேசிய சுஸ்மா இந்தியா திரும்பியதும் முதலில் செய்ய வேண்டிய பணி RSS ஐ ஒழிப்பதாகவே இருக்க வேண்டும் செய்வாரா?

​கோவை வன்முறை தொடர்பாக 801 பேர் மீது வழக்குப்பதிவு - 305 பேர் சிறையில் அடைப்பு


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 305 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 
இதில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் துடியலூர் பகுதியில் இரு கடைகள் மற்றும் காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. 
இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக நகரப்பகுதியில் 145 பேரும், புறநகர் பகுதியில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் திருச்சி, சேலம் மற்றும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Saturday, 24 September 2016

வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள்,. ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் அதிரடி.


ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம், தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதால் பல தனியார் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், ஜியோவுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது.
 ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனம் பல திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில், வரும் புத்தாண்டு முதல் வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள் உட்பட பல திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் கூறி உள்ளார். 
இந்த திட்டங்கள் ஜியோவை விட மிக குறைவான விலையாக இருக்கும் என்றும் பி.எஸ்.என்.எல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ரேஷன் கடைகளில் இனி காகித ரசீதுக்கு குட்பை!: அக்., 1 முதல் மொபைல் போனில் பட்டியல்!


ரேஷன் கடைகளில், அக்டோபர், 1 முதல், காகித ரசீது போடும் நிலை இருக்காது; அதற்கு பதில், நவீன கருவியில் ரசீது போடும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால், ரேஷன் கார்டுதாரர்களின், மொபைல் போனிலேயே, எஸ்.எம்.எஸ்., தகவலாக ரசீது கிடைத்து விடும்.
தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. தற்போது, ரேஷனில் வாங்கும் பொருட்களுக்கு, காகிதத் தில், ரசீது தரப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில், பலர் ரேஷன் பொருட்கள் வாங்கு வது இல்லை. 
எஸ்.எம்.எஸ்., தகவல்
அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் 
சேர்ந்து, கடை ஊழியர்கள் பொருட்களை வினியோ கம் செய்தது போல, போலி ரசீது தயாரித்து, கள்ளச்சந்தையில் விற்கின்றனர். 
இந்த முறைகேட்டை தடுக்க, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில்,'ஆதார்' அடையாள அட்டை, 'ஸ்கேன்' செய்யப்படுகிறது.
இந்நிலையில், அக்., 1 முதல், காகித ரசீதுக்கு பதில், 'பாயின் ஆப் சேல்' கருவியில், ரசீது போடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டில் உள்ள, குடும்ப தலைவரின் மொபைல் போன் எண் பெறப் படுகிறது. 
அதனால், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், பொருட்களை வாங்கிய தற்கான ரசீது போட்ட உடன், அந்த விபர பட்டியல், ரேஷன் கார்டு தாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., தகவலாக சென்று விடும்.
முறைகேட்டைதடுக்ககடைக்கு வந்த பொருட்கள், மக்களுக்கு வழங்கிய பொருட்கள் என, அனைத்து விபரங்களும், அந்தக் கருவியில் பதிவாகும்; 
இந்த விபரங்கள் கட்டுப்பாட்டு அறையிலும் பதிவாகும் என்பதால், முறைகேட்டை தடுக்க முடியும். தமிழகம் முழுவதும், இந்த முன்னோடி திட்டம், அக்., 1 முதல் செயல்
பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். 
மீண்டும் பயிற்சி
சென்னையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, இம்மாத துவக்கத்தில் தான், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டது. கருவியை பயன்படுத்துவது குறித்து ஊழியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. 
இதில், ஆதார் அட்டை, 'ஸ்கேன்' செய்யும் பணி இன்னும் முழுமை பெறவில்லை. அதனால், சென்னையை சுற்றிய மாவட்டங்களில், இத்திட்டத்தை, நவ., 1 முதல், செயல்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சிக்கன் 65 தெரியும். முட்டை 65 செய்வது எப்படி தெரியுமா?


தேவையான பொருட்கள் :
முட்டை - 4
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
சோள மாவு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை :
* முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். (ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்)
* சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.
* இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
* வேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். 
* சூப்பரான எக் 65 ரெடி.

கோவையில் இயல்பு நிலை திரும்புகிறது…! கலவரத்திற்கு காரணமான 108 பேர் கைது!!


கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று வன்முறையில் ஈடுபட்ட 108 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர்  சசிகுமார் என்பவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டு சில வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும் சில வழிபாட்டுத்தலங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கோவை கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 108 பேரை போலீஸார் இன்று கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோவையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, 22 September 2016

ஆன்லைன் முறைக்கு மாறிய ரேஷன் கடைகள்! ஆனாலும் குறையும் எடை! பெருச்சாளிகள் மீதுபுகார்!  


ரேசன் கடைகளில் எப்போது சரியான எடைக்கு பொருட்கள் கிடைக்கின்றதோ, அப்போது தான் தமிழகம் ஊழலில்லாத மாநிலம் என்ற அந்தஸ்தை பெறும் என்று சொன்னால் அது மிகையாகாது. 5 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் 3.50 லிட்டர் தான் இருக்கும். 5 கிலோ அரிசி வாங்கினால் 4 கிலோ தான் இருக்கும்.
இப்படி பல பொருட்களும் எடை குறைவாகவே இன்றும் வழங்கப்படுகின்றன. அதிகாரிகளின் ஊழல் ஒருபுறம், ரேசன் கடை ஊழியர்களின் முறைகேடு மற்றொரு புறம் என மக்களை சுரண்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண தற்போது கோவை உள்ளிட்ட இடங்களில் ரேசன் கடைகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. விற்பனையில் டிவைஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளுக்கு ‘பாயிண்ட் ஆப் சேல்ஸ்’ என்னும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் வந்த உடன் அப்டேட் செய்யப்படும்.
குடும்ப அட்டை தாரர்கள் பொருட்களை வாங்கியதாக கருவியில் அவர்களது எண்ணுடன் பதிவு செய்யப்பட்டால், அந்த விபரம் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக செல்வதுடன், அந்த கருவியிலும் இருப்பு குறைந்து விடும். இந்த முறையில் உள்ள பிரச்சனை என்னவென்றால், ரேசன்கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும் போதே நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாகத்தான் அனுப்பப்படுகிறதாம். துவரம் பருப்பு என்றால் 50 கிலோவிற்கு 48 கிலோ தான் இருக்குமாம். சாக்கின் எடையான 650 கிராமையும் கழிப்பதில்லையாம்.
அதே போல் ரேசன் கடைகளில் உள்ள பெருச்சாளிகள் சாப்பிட்டது போக, பொதுமக்களுக்கு வழங்கும் போது, பற்றாக்குறை ஏற்படுகிறதாம். இதனால் கருவியின் கணக்குப்படி, சில கிலோக்கள் இருப்பு இருக்குமாம். இதனால் ரேசன் கடை ஊழியர்கள் நடவடிக்கையை சந்திக்க வேண்டியதாக உள்ளதாம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேசன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
http://liveday.in/tamilnadu-live-headline-news/tamil-nadu-public-distribution-system/

உள்ளாட்சித் தேர்தல் – பர்தா அணிந்து முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க கூடுதல் பெண் ஊழியர்கள் நியமனம்! 


உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணியாளர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பர்தா அணியும் பெண்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் கூடுதலாக பெண் ஊழியர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
 எதாவது அரசியல் கட்சிக்கு ஆதரவாக நடப்பவராக அறியப்படும் அரசு ஊழியர்கள், முந்தைய தேர்தல்களில் விதிமீறலில் ஈடுபட்ட ஊழியர்கள், வேட்பாளர்களின் உறவினர்கள், ஆகியோரை தேர்தல் பணியில் ஈடுபத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக வாக்காளர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் அதிகம் இருக்கும் வாக்குச்சவாடிகளில் ஒன்று அல்லது 2 பெண் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஒரே துறையைச் சேர்ந்த ஊழியர்களை ஒரே வாக்குச் சாவடியில் நியமித்தால் அவர்கள் சமரசம் செய்து கொண்டு, சாதகமாக நடக்க வாய்ப்புள்ளதால் அவ்வாறு நடக்காதவாறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://liveday.in/general/tamilnadu-local-body-elections-preparations/

முஸ்லிம் மதத்தை காரணமாக கூறி அகதிகளை திருப்பியனுப்ப முடியாது: ஒபாமா திட்டவட்டம்.


‘அமெரிக்காவுக்குள் தஞ்சம் புக வரும் அகதிகளை மத அடிப்படையில் நோக்க முடியாது. ஒருவர் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே அவரை அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் திருப்பியனுப்ப முடியாது’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
ஐநா பொதுச் சபையின், 71-வது கூட்டத்தொடரின் இடையே, சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் அகதிகள் தொடர்பான மாநாடு, அமெரிக்கா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, 
‘அண்மைக்காலங்களில் சர்வதேச அளவில் 6.5 கோடி பேர் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். 2-ம் உலகப் போருக்குப் பிறகு, தற்போது அதிக அளவில் மக்கள் அகதிகளாகியுள்ளனர். 
இவர்களில் 2.1 கோடி பேர், சொந்த மண்ணையும், உறவுகளையும் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உடுத்த உடையை மட்டும் சுமந்துகொண்டு நாட்டைவிட்டு வெளியேறியவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலைமையில் நம்மிடம் தஞ்சம் புக வருவோரை, அவர்களின் மதத்தைப் பார்த்து நாம் அனுமதிக்க முடியாது. உதாரணமாக, ஒருவர் முஸ்லிம் என்பதற்காகவே, அவருக்கு தஞ்சமளிக்க முடியாது எனக் கூறிவிட முடியாது. அப்படிச் செய்தால், நம்மைப் போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற தீவிரவாதிகளின் பிரச்சாரம் உண்மையாகிவிடும்.
மாறாக, வேற்றுமையில் ஒற்றுமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கும் போது, கடுமையான சோதனை நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதன் மூலம் போலியானவர்களை தடுத்துநிறுத்தலாம்.
அமெரிக்கா மீது பற்றுள்ள, கடினமாக உழைக்கக் கூடிய பல அகதிகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். தொழில்துறையிலும் சாதித்து வருகின்றனர். அகதிகள் நாட்டை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு’ என்றார்.
அகதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வித்திடும் என, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் கடந்த ஓராண்டு காலமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், இவ்விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஒபாமா பேசியுள்ளார்.
ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்

சவூதி அரேபியாவில் புதிய சட்டம் :

சவூதி அரேபியாவில் புதிய சட்டம் :

சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியல் இந்த விபரங்கள் பின்வருமாறு:
1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.
✔மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்
2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.
✔மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.
✔மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் ‘வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்
8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.
✔மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.
9. ஹஜ் ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.
✔மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.
10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது – பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் ‘கஃபாலத் – ஸ்பான்ஸர்ஷிப்’ மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.
✔மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது
11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.
✔மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்
12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.
✔மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.
13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.
✔மீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்
✔மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.
15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.
✔மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை
16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்…
✔ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.
17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்....

Wednesday, 21 September 2016

அதிகமான வாட்ஸ் அப் குரூப்பில் உறுப்பினராக இருக்கிறீர்களா...?நோட்டிஃபிகேசன் தொந்தரவில் இருந்து தப்பிக்க மியூட் செய்து வைத்திருக்கிறீர்களா..?


     அதிகமான வாட்ஸ் அப் குரூப்பில் உறுப்பினராக இருக்கிறீர்களா...?
நோட்டிஃபிகேசன் தொந்தரவில் இருந்து தப்பிக்க  மியூட் செய்து வைத்திருக்கிறீர்களா..?
அதிகமான வாட்ஸ் அப் குரூப்பில் உறுப்பினராக இருக்கிறீர்களா...?
நோட்டிஃபிகேசன் தொந்தரவில் இருந்து தப்பிக்க  மியூட் செய்து வைத்திருக்கிறீர்களா..?
இனி ஒருபோதும் தப்பிக்க முடியாது நீங்கள்...?
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்று வாட்ஸ் அப்பிலும் டேக் (Tag) வசதி வந்துவிட்டது.
உங்களை டேக் செய்து வாட்ஸ் அப் குரூப்பில் யாரேனும் மெசேஜ் செய்தால், இனி உங்களுக்கு நோட்டிபிகேஷனில் வந்துவிடும்.
ஒருவேளை, பரபரப்பான சூழலில் இருக்கும் போது, குரூப்பில் உங்களிடம் யாரேனும் ஏதேனும் சொல்லி இருந்தால் அது உங்கள் கவனத்திற்கு வராமலே கூட போகலாம்.. அதனை தவிர்க்க இந்த டேக் வசதி பெரிதாக பயன்படும்.
இந்த வசதியை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?
1. குரூப்பில் நுழைந்து, செய்தி பெட்டியில் @ குறியீட்டை எழுதுங்கள்.. குரூப் உறுப்பினர்களின் பெயர் அல்லது எண்கள் வரிசையாக தோன்றும்
2. யாரை குறியிட விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை தேர்வு செய்யுங்கள்
3. அந்த செய்தியை Send அழுத்தி, அனுப்புங்கள்
4. குறியிட்ட நபருக்கு அந்த செய்தி நோட்டிபிகேஷனில் காண்பிக்கும்.
குறிப்பு: இந்த டேக் வசதி வாட்ஸ் அப் வெர்சன் 2.16.272 ல் மட்டுமே கிடைக்கும்

பொது சிவில் சட்டம் மத நல்லிணக்கத்தை கெடுக்கும்!

     
      பொது சிவில் சட்டம் மத நல்லிணக்கத்தை கெடுக்கும்!
- மவ்லவி. பீஜே அவர்களின்
பொது சிவில் சட்டம் குறித்த கருத்து பற்றி
"தி ஹிந்து தமிழ்" நாளிதழில் வந்திருக்கும் சிறப்பு செய்தி...
நன்றி: "தி ஹிந்து தமிழ் 19/09/2016"

முஹம்மத் நபி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானவர் : ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன்.....!!

   
    முஹம்மத் நபி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானவர் என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது...
மகாத்மா காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
இந்திரா காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
ராஜீவ் காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
பகவத் சிங்கை தூக்கில் ஏற்றியது முஸ்லிம்கள் இல்லை,
சுதந்திரத்திற்கு பாடுபட்ட எந்த தலைவர்களையும் முஸ்லிம்கள் கொள்ளவில்லை, மாறாக இந்திய விடுதலைக்கு தனது சமூகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தவர்கள் முஸ்லிம்கள். அப்படியிருக்கையில் அவர்களை எப்படி தீவிரவாதி என்று அழைக்கிறார்கள்.
தாகித்தவருக்கு தண்ணீர் தருவது இஸ்லாம், இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவுவது இஸ்லாம், பசித்தவருக்கு உணவளிப்பது இஸ்லாம், அன்பு, தியாகத்தை போதிப்பது இஸ்லாம், சுயநலத்தோடு இருக்காதே என்று சொல்வது இஸ்லாம்,
அப்பாவிகளை கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது.
இந்த நாடு பகத்சிங்கின் நாடு, இது காந்திஜியின் நாடு, இது அசரப்குல்லாவின் நாடு, இது வீரன் அப்துல் ஹமீதின் நாடு.
நாம் அசரப்குல்லா மற்றும் மாவீரன் அப்துல் ஹமீதின் தியாகத்தை புறம்தள்ளிவிட முடியுமா ? முடியாது இது அனைவருக்குமான நாடு.
இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போக சொல்லும் மூடர்களிடம் இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டுபற்றை நிருப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு முஸ்லிம் நிச்சியமாக தனது இந்திய திருநாட்டை நேசிக்கும் தேசபற்றாளனாகதான் இருப்பான்.
இந்த உலகமும் அனைவருக்குமானது. கங்கை நதி அனைவருக்குமானது, முஹம்மது நபியும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானவர்.
இறுதியாக இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூடர்களுக்கு சொல்லிகொள்கிறேன், இந்திய இஸ்லாமியர்களை பாக்கிஸ்தான் போக சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை, அப்படி பாகிஸ்தான் போக வேண்டும் என்றால் நீங்கள் செல்லுங்கள்.
மேற்கண்டவாறு ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கத்தார் புதிய தொழிலாளர் சட்டம் பற்றிய 12 அம்சங்கள்!

  
   கத்தார் புதிய தொழிலாளர் சட்டம் பற்றிய 12 அம்சங்கள்!
1. புதிய சட்டம் இந்த ஆண்டு (2016) டிசம்பரில் இருந்து செயல்படுத்தப்படும்.
2. புதிய சட்டத்தின்படி தொழிலாளர் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் இருப்பார். (Sponsor முறை நீக்கப்படும்)
3. Cancel செய்து நாடு சென்றால் 2 ஆண்டுகள் தடை இனி இல்லை.
4. புதிய நிறுனவத்தில் தொழில் பெற பழைய நிறுவனத்தின் NOC தேவை இல்லை.
5. Cancel செய்து நாடு சென்றால் புதிய விசா ஒன்றை பெற்று மீண்டும் மறுநாளே கத்தார் செல்ல முடியும்.
6. நாடு செல்வதட்கு, வேலை புரியும் நிறுவனத்தில் இருந்தது Exit Permit தேவை இல்லை.
7. நாடு செல்ல 3 தினங்களுக்கு முன்பு வேலை புரியும் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் மற்றும் Metrash 2 எனும் மொபைல் அப்ளிகேஷன் ஊடக Exit Permit விண்ணப்பிக்க வேண்டும்.
8. அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த ஆண்டு (2016) இறுதியில் புதிய தொழிலாளர் ஒப்பந்தம் மாற்றப்படும்.
9. பழைய ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்ந்த திகதியில் இருந்தே ஒப்பந்த காலம் கணக்கிடப்படும்.
10. தொழில் ஒப்பந்தங்கள் கத்தார் தொழிலாளர் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
11. உங்கள் ஒப்பந்தம் கால எல்லை இல்லாமல் இருப்பின் 5 வருடத்திற்கு பின்னே புதிய தொழில் ஒன்றை பெற முடியும்.
12. உங்கள் ஒப்பந்தம் கால எல்லை குறிப்பிட்டு இருந்தால் குறிப்பிட்ட ஒப்பந்தம் நிறைவடைந்ததும் NOC இல்லாமல் புதிய வேலை ஒன்றை பெற முடியும்.

சவுதி அரேபிய விமானத்தில் தவறுதலாக விமானக் கடத்தல் அலாரத்தை அழுத்திய பைலட் ! ஏர்போர்டில் பரபரப்பு!

  

    சவுதி அரேபியன் ஏர் லைன்ஸ் விமானம் 872 என்ற விமானம் ஜித்தாவில் இருந்து இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியது. அப்போது விமான பைலட் தவறுதலாக விமான கடத்தலின் போது பயன்படுத்தும் எச்சரிக்கை அலாரத்தை பயன்படுத்தி விட்டார். 
இதை தொடர்ந்து மணிலா விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை செய்தனர்.பின்னர் எந்த மிரட்டலும் இல்லை என தெரியவந்தது. இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கபட்டனர். இந்த தவறால் 2 மணி நேரம் பயணிகள் விமானத்திலேயே இருக்க நேரிட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பைலட் தவறுதலாக அவசர அழைப்பு மணியை அழுத்தி விட்டார். என மணிலா போலீஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தஞ்சாவூர், வேலூர், சேலம், மதுரை ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகிறது .


      3வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தின் தஞ்சாவூர், வேலூர், சேலம், மதுரை ஆகிய 4 நகரங்களும், மகராஷ்டிராவில் 5 நகரங்கள், கர்நாடகாவில் 4 நகரங்கள், உத்தரபிரதேசத்தில் 3 நகரங்கள், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 நகரங்கள் என மொத்தம் 27 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகிறது.

Tuesday, 20 September 2016

சவூதியில் செல்ஃபோன் கடைகள் அடைப்பு:இந்தியர்கள் வேலையிழப்பு!


ஜித்தா (20 செப் 2016): சவூதியில் செல்ஃபோன் கடைகளில் வெளிநாட்டினர் வேலை செய்யக்கூடாது என்ற உத்தரவை அடுத்து பல இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர்.
சவூதியில் செல்ஃபோன் கடைகளில் சவூதி குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று சவூதி தொழிலாளர் அமைச்சக உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதியிலிருந்து இந்த புதிய விதிமுறை அமுலுக்கு வந்தது.
இந்த நிலையில் முழுக்க வெளிநாட்டினர் மட்டுமே வைத்திருந்த ஆயிரக்கணக்காண செல்ஃபோன் கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
இதனிடையே விதிமுறையை மீறி செல்ஃபோன் கடைகளில் பணிபுரிந்த வெளிநாட்டினர் தொழிலாளர் அமைச்சக அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, இந்திய ரூபாய்.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரசு எச்சரிக்கை!


ஜித்தா (19 செப் 2016): ஹஜ் யாத்ரீகர்கள் சட்டவிரோதமாக சவூதியில் தங்க எத்தனித்தால் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சவூதி குடியிருப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஹஜ் நிறைவடைந்த நிலையில், ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஹஜ் விசாவில் சவூதி வந்தவர்கள் ஹஜ் விசா காலாவதியாதவற்குள் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று சவூதி குடியிருப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு திரும்பி செல்லாமல் சவூதியிலேயே தங்க எத்தனித்தால் அவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்றும் அவர்களுக்கு உதவி புரிபவர்களும் கடும் தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்றும் சவூதி குடியிருப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அதேவேளை ஹஜ் விசாவில் சவூதி வந்தவர்கள் மக்கா, மதீனா தவிர வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உம்ரா வருடாந்திர அனுமதியை 10 மாதங்களாக நீட்டிக்க பரிசீலணை!


சவூதி அரேபியா, செப்-18
ஹஜ் யாத்திரைக்கு அடுத்து அதிகமாக புனித கஃபாவிற்கு விஜயம் செய்து முஸ்லீம்கள் நிறைவேற்றி வரும் வணக்க வழிபாடுகளில் ஒன்று உம்ராவாகும். இந்த உம்ரா பயணத்திற்கான அனுமதி தற்போது ஹிஜ்ரி வருடத்தில் ஸபர் மாதம் துவங்கி ரமலான் மாதம் வரையிலான 8 மாத காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
2030 எனும் தூர நோக்கு வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டு வரும் வருடத்திற்கு 8 மில்லியன் உம்ரா விசாக்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 30 மில்லியன் விசாக்கள் என்ற அளவை 2030 ஆம் ஆண்டிற்குள் எட்ட திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே, இனி முஹர்ரம் மாதமும் ஷவ்வால் மாதமும் கூடுதலாக உம்ரா சீசனில் சேர்க்கப்பட்டு 10 மாதங்களால் அதிகரித்திட திட்டங்கள் பரிசீலணை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்புடைய பொருட்களையும் ஆவணங்களையும் சேகரித்து பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் நடவடிக்கைகளுக்காக 'உலகின் பிரம்மாண்ட மியூசியம்' ஒன்றை மக்கா நகரில் எழுப்பும் ஆரம்பகட்ட வேலைகளை மக்கமாநகர சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகத்துடன் இணைந்து செய்து வருகிறது.
Source: Arab News

Sunday, 18 September 2016

பள்ளிவாசல், தர்க்காக்களை பழுதுபார்க்க மற்றும் சீரமைக்க தொகுப்பு நிதி உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.


கிறிஸ்துவ தேவாலய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு மானியமாக ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினரின் நலனை காக்கவும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தமது தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செய்து வருவதாக குறிப்பிட்டார். 
தேர்தல் அறிக்கையில் தேவாலயங்களுக்கு பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதன்படி தேவாலயங்களுக்கு பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிகளுக்காக மூன்று லட்சம் ருபாய் வரை மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். .
இதற்கென இந்தாண்டு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். 
இதே போல் பள்ளிவாசல் மற்றும் தர்க்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புகளை மேற்கொள்வதற்காக ஒரு தொகுப்பு நிதி உருவாக்கப்படும் எனவும், இந்த தொகுப்புக்கு நிதி 3 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். 

ராம்குமார் வாயில் எந்தவித காயங்களும் இல்லை : டாக்டர் செய்யது அப்துல் காதர் அறிக்கை.....!!


மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமார் மரணம் குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் செய்யது அப்துல் காதர் கொடுத்துள்ள அறிக்கையில்....
ராம்குமாரின் வாயில் எந்தவித காயங்களும் இல்லை, ராம்குமாரின்  இடது கண்ணிலும், இடது கையிலும், இடது மார்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காயங்களுக்கு பிறரின் தாக்குதலே காரணம் என்றும்,
ராம்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பால் குடிப்பது கூட பசு வதை தானாம்...


      பசுவை பாதுகாப்பதாக கூறி, இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தேறி சர்ச்சைக்குள்ளானதையெல்லாம் அறிந்திருப்போம்....
இந்த நிலையில், பால் குடிப்பது கூட பசு வதை தான் என்று டெல்லியை சேர்ந்த இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு சொல்கிறது..
பாலுக்காக பசுக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அதனை தடுக்க பாலுக்கு எதிராக பரப்புரை செய்ய உள்ளதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பாலின் தேவை அதிகரித்திருப்பதால், அதற்காக பசுக்கள் பெருமளவு வதைக்கப்படுவதாக கூறுகிறது அந்த அமைப்பு.
குறிப்பாக, ஆண் கன்றுகள் இறைச்சிக்காக அனுப்பப்படுவதாகவும், பெண் கன்றுகள் பாலுக்காக வளர்க்கப்படுவதாகவும் கூறும் விலங்கு அமைப்பு, பசுக்களுக்கு செயற்கையாக ஹார்மோன்கள் செலுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.
பொதுவாக ஒரு விலங்கின் பாலை மற்ற விலங்குகள் குடிப்பதில்லை என்ற போது, மனிதன் மட்டும் ஏன் மாறாக செயல்படுவதாகவும் விலங்கு அமைப்பு கேள்வி எழுப்புகிறது.
பசும்பால் அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், விலங்குகள் அமைப்பு ஒன்று அதனை பசு வதையாக முறையிடுவது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

பக்ரித் பண்டிகையின் போது ஒட்டகம் அறுப்பதை தடை செய்ய வேண்டும் என உத்திரபிரதேசத்தை சேர்ந்த காவி சிந்தனை கொண்ட வக்கீல் ரஞ்சனா அஹ்ரி கோத்ரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

மதவழிபாட்டு உரிமையை தடுக்க இயலாது...!

பக்ரித் பண்டிகையின் போது ஒட்டகம் அறுப்பதை தடை செய்ய வேண்டும் என உத்திரபிரதேசத்தை சேர்ந்த காவி சிந்தனை கொண்ட வக்கீல் ரஞ்சனா அஹ்ரி கோத்ரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மதவழிபாட்டு உரிமையை தடுக்க சட்டத்தில் இடமில்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஆனால் தமிழகத்தில் ஒட்டகம் அறுக்க தடை...!
நீதி சட்டத்தின் அடிப்படையிலா அல்லது கூட்டு மனசாட்சியின் அடிப்படையிலா?
தமிழக காவல்துறையினரின் கவனத்திற்கு...
ஒட்டக அறுப்பு சம்பந்தமாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மதவழிபாட்டு உரிமையை தடுக்க சட்டத்தில் இடமில்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஆனால் தமிழகத்தில் ஒட்டகம் அறுக்க தடை...!
நீதி சட்டத்தின் அடிப்படையிலா அல்லது கூட்டு மனசாட்சியின் அடிப்படையிலா?
தமிழக காவல்துறையினரின் கவனத்திற்கு...
ஒட்டக அறுப்பு சம்பந்தமாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

Friday, 16 September 2016

இஸ்லாத்தை தழுவி ஹஜ் கடமையை நிறைவேற்றிய இங்கிலாந்து தூதர் !

         

      சவூதி அரேபியா, செப்.16
மேற்கத்திய நாடுகளில் யூத, கிருஸ்தவ சதிகளால் இஸ்லாம் தூற்றப்பட்டும் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டும் வரும் நிலையில் அத்தகைய சதிகார கும்பலுக்கு மரண அடி தரும் வகையில் அதே மேற்கத்திய நாட்டு பிரபலம் ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளார்.
சவுதி அரேபியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் சைமன் காலிஸ் அவர்கள் இஸ்லாத்தை தழுவி தனது மனைவியுடன் இந்த வருட ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

பிரிட்டனிலிருந்து வந்த 19,000 ஹஜ் யாத்ரீகர்களுடன் அவரும் தம் கடமையை நிறைவேற்றியதை பிரிட்டனுக்கான ஹஜ் கவுன்சில் மனமுவந்து வரவேற்றுள்ளது.
மேலும் சவுதி இளவரசி பாஸ்மாஹ் பின்த் சவூது அவர்களும் டிவிட்டர் வழியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக இஸ்லாமிய உலகில் பல்வேறு அரசு பொறுப்புக்களை சுமந்து வாழ்வை கழித்துள்ள சைமன் காலிஸ் அவர்கள் அரபி மொழியை முறையாக பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Arab News

2070 இல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!



   அமெரிக்கா ஆய்வு மையம் தகவல்!
2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்றும், 2070ல் உலக அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் 'ஆய்வு' முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள ப்யூ (Pew) ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் 'உலக மதங்களின் எதிர்காலம்' என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்றாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இந்தியாவில்தான் வசிப்பார்கள் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, இந்தோனேஷியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
2050 வாக்கில் ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருமடங்காகியிருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
புத்த மதத்தைப் பொறுத்தவரை, 2010ல் எந்த எண்ணிக்கையில் இருந்ததோ, அதே எண்ணிக்கை நீடிக்கும்.
உலகில், ஒவ்வொரு மதத்திலும் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை, எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள், அவர்களுடைய வயது, பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சர்வதேச அளவில் இடம்பெயர்தல், மதமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக ப்யூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2050 ஆம் ஆண்டு அமெரிக்காவை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் உருவெடுக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்
PEW RESEARCH CENTER அறிவிப்பு
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க முஸ்லிம்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு சொல்ல தக்க விதத்தில் இருக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுத்துள்ளது.
மேலும் ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தின் வளர்ச்சி அமெரிக்காவில் விரைவாகி கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் உருவெடுத்து விடும். அமெரிக்காவின் சிறுபாண்மை மதங்களில் ஒன்றாக கிருத்துவம் சுருங்கி விடும் என்று வாஷிங்டெனில் இயங்கும் ஆய்வு நிறுவனம் PEW RESEARCH CENTER தனது ஆய்வு ஒன்றில் குறிப்பிட்டிருப்பது அமெரிக்கர்களிடையே பரபரப்பை உருவாக்கி இருக்கறது.
இறை மறுப்பாளர்கள் சத்தியத்தின் ஒளியை தாங்கள் வாய்களால் ஊதி அணைக்க முயல்கின்றனர் இறைமறுப்பாளர்கள் விரும்பவில்லை என்றாலும் இறைவன் தனது மார்கத்தை முழுமையாக்கியே தீருவான்என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும்விதமாக இந்த ஆய்வு அமைகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

*காவிரி 10 உண்மைகள்*

*காவிரி 10 உண்மைகள்*

உண்மை 1: தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவச் சாகுபடி. இதில் குறுவை 4 லட்சம் ஏக்கர்; சம்பா 8 லட்சம் ஏக்கர்; தாளடி 4 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். இந்த மூன்று பருவங்களில் குறுவைப் பருவம்தான் நல்ல விளைச்சல் தரும். தவிர, குறுவைச் சாகுபடி இல்லாமல் போனால், 17.36 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கிப்போவார்கள். 
உண்மை 2: காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், அதைவைத்து 2,000 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சாகுபடி செய்து வருவது தமிழக விவசாயிகள்தான். நதி நீர் உரிமையைப் பொறுத்த அளவில், அது உற்பத்தியாகும் இடத்தை வைத்துத் தீர்மானிக்கப்படுவது இல்லை. பாரம்பரியமாக அதைப் பயன்படுத்தி வருவோருக்கே முதல் உரிமை. இது சர்வதேச அளவிலான நடைமுறை. 
உண்மை 3: தமிழகத்தில் கரிகாலன் கட்டிய கல்லணை, அதற்குப் பின் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மேலணை, கீழணை நீங்கலாக, காவிரியில் 1924 வரை அணைகள் எதுவும் கிடையாது. இங்கு மேட்டூர் அணையைக் கட்டும்போது, இன்றைய கர்நாடகத்தின் முதல் அணையான கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டிக்கொள்ள மைசூர் மன்னருக்கு ஆங்கிலேய அரசு அனுமதி அளித்தது. கர்நாடகம் நெல் சாகுபடியை ஆரம்பித்ததும் காவிரி அரசியலை ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான். கிருஷ்ணராஜசாகர் அணை நீங்கலாக கர்நாடகம் காவிரியில் கட்டிய அனைத்து அணைகளும் சட்டத்துக்குப் புறம்பானவை. அதாவது, மத்திய அரசின் அனுமதி பெறாதவை. ஒரு மாநில அரசு இப்படி முறைகேடாக நடந்துகொண்டால், அந்த அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. கர்நாடகத்தின் இந்த முறைகேடு அரசியலை முதலில் தொடக்கிவைத்தது காங்கிரஸ் அரசு. 
உண்மை 4: 1901-ல் அன்றைய மைசூர் மாகாணத்தின் சாகுபடிப் பரப்பு - 1.11 லட்சம் ஏக்கர். 1970-ல் கர்நாடகத்தின் சாகுபடிப் பரப்பு - 6.83 லட்சம் ஏக்கர். 1991-ல் நடுவர் மன்றத்தில் தன்னுடைய சாகுபடிப் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர் என்று சொன்னது கர்நாடக அரசு. இதற்கு மேல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது; தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் தீவிரமாகும் என்று கர்நாடகத்துக்குக் கட்டுப்பாடு விதித்தது நடுவர் மன்றம். ஆனால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு அதே நடுவர் மன்றம் 18.85 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் ஒதுக்கியது. இப்போது தன்னுடைய பாசனப் பரப்பை 23.85 லட்சம் ஏக்கராக விரிவாக்கியுள்ளது கர்நாடகம். மேட்டூர் அணை பயன்பாட்டுக்கு வந்த 1934-ல் தொடங்கி 1970 வரை ஆண்டு தோறும் அணைக்கு வந்த சராசரி நீரின் அளவு 378 டி.எம்.சி. காவிரி நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு இதை 205 டி.எம்.சி. ஆக்கியது; இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி. ஆக்கியது. 
உண்மை 5: காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாக் காலங்களிலும் சேர்ந்தே செயல்படுகின்றன. மாநில நலனே அங்கு பிரதானம். தமிழகத்திலோ நேர் எதிர்நிலை. காவிரிப் பிரச்னையில் ராஜதந்திரரீதியாக ஒரு வரலாற்றுத் தவறைத் தமிழகம் செய்தது. காவிரிப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது, 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்திரா காந்தியுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, அவருடைய சமரசத்தை ஏற்று பேச்சுவார்த்தைக்காக அந்த வழக்கைத் திரும்பப் பெற்றார் கருணாநிதி. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா மூவருமே காவிரியை அரசியல்ரீதியாகவே அணுகினார்கள். 
உண்மை 6: இதற்கிடையே 1983-ல் காவிரி விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடித்து, 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தபோது, மீண்டும் உச்ச நீதிமன்றப் படியேறி தன்னையும் அந்த வழக்கில் இணைத்துக்கொண்டது தமிழகம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி, 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பின் இறுதித் தீர்ப்பை வழங்கியது நடுவர் மன்றம். காவிரியின் ஒட்டுமொத்த நீரோட்டத்தை 740 டி.எம்.சி. எனக் கணக் கிட்டு அதில், தமிழகம் 562 டி.எம்.சி., கர்நாடகம் 465 டி.எம்.சி., கேரளம் 92.9 டி.எம்.சி., புதுவை 9.24 டி.எம்.சி. கேட்டன. இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டி.எம்.சி., கடலில் கலக்கும் அளவு 4 டி.எம்.சி. என ஒதுக்கீடு செய்தது நடுவர் மன்றம். தமிழகத்துக்கு இது சேதம் தரும் தீர்ப்பு. எனினும், இரு தரப்பு விவசாயிகளின் நலன்களையும் ஒப்பிட்டு, அரை மனதோடு ஏற்க வேண்டிய நிலை. ஆனால், இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குப் போனது கர்நாடகம். வேறு வழி இல்லாமல் தமிழகமும் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. இந்த முறையீடுகள் ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. 
உண்மை 7: காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் இருந்தன. ஊருக்கு ஊர் கோட்டகம் எனப்படும் நீர்ப்பிடிப்புப் பகுதி இருந்தது. குடிமராமத்து முறை வழக்கொழிந்த பின், படிப்படியாக இவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்தன. அரசு ஆழ் குழாய் விவசாயத்தை ஆதரித்தது. இதனால், நாலைந்து அடிக்குள் பிள்ளைக்கேணி தோண்டி விவசாயம் செய்த இடங்களில், இன்றைக்கு நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழே போய்விட்டது. இந்த நீர்நிலைகளை மீட்டுருவாக்குவதுடன் காவிரி நீர்ப் பாதையைப் புனரமைத்துக் கட்டுக்கோப்பாக்கி, மழைக் காலங்களில் உபரியாகக் கிடைக்கும் நீரைத் தேக்கிவைக்க கதவணைகள் கட்டினால், சுமார் 50 டி.எம்.சி. வரை நீராதாரத்தை உருவாக்க முடியும். 1980-களில் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 1,000 கோடி ஆகலாம் என்று சொன்னது உலக வங்கி. இன்றைக்கு ரூ. 10,000 கோடி ஆகலாம். ஆனால், தமிழக அரசு அதை இன்றுவரை பொருட்படுத்தவே இல்லை. 
உண்மை 8: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆணையத்தின் வழிமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு... இப்படி எதையும் கர்நாடகம் இதுவரை மதித்தது இல்லை. தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என்று கூறாத கர்நாடக முதல்வர்களே வரலாற்றில் இல்லை. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா தளம் ஆகிய தேசியக் கட்சிகளே கர்நாடகத்தையும் ஆண்டன; ஆள்கின்றன. 
உண்மை 9: உலகில் எத்தனையோ நாடுகள் நதி நீரை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்கின்றன. தண்ணீருக்கு அலையும் சூழலில் உள்ள பரம்பரை வைரிகளான இஸ்ரேலும் பாலஸ்தீனமும்கூட நியாயமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்திய அரசால் பாகிஸ்தானுடன் சுமுகமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், உள்நாட்டுக்குள் பகிர்ந்தளிக்க முடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்ட விவசாயிகள் பல முறை வறட்சியிலும் பஞ்சத்திலும் அடிபட்டனர். நாட்டுக்கே உணவு கொடுத்தவர்கள் கஞ்சித் தொட்டியில் கஞ்சி வாங்கிக் குடிக்கும் நிலைக்கும் வயல்களில் எலிகளைப் பிடித்துத் தின்னும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டனர். ஆனால், மத்திய அரசு துளியும் அலட்டிக்கொள்ள வில்லை. இயற்கைக்கு முரணான நதி நீர் இணைப்புபற்றி நம்முடைய ஆட்சியாளர் கள் நிறையப் பேசுகின்றனர். ஆனால், நதிகளை தேசிய உடைமையாக்கி - அதாவது, நதி நீர்ப் பங்கீடு உள்ளிட்ட சகல உரிமைகளையும் மத்திய அரசே நிர்வகிக்க - எவரும் குரல் கொடுக்கவில்லை. 
உண்மை 10: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு... துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கின்றோம்..!
http://eluthu.com/kavithai/304934.html

Wednesday, 14 September 2016

இனி பாஸ்போர்ட் பெறுவது மிகவும் சுலபம்: வந்துவிட்டது மொபைல் ஆப்.


      பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் எப்பொழுது தான் பொலிஸ் விசாரணை வரும் என காத்திருந்து மிகவும் வருத்தப்படுவார்கள்.
இவர்களுக்காவே பொலிஸ் விசாரணையை விரைவாக முடிக்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது, எம்பாஸ்போர்ட் பொலிஸ் ஆப்( mpassport police app) என்ற இந்த அப்ளிகேஷன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளோம்.
இந்த செயலியின் மூலம், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிதாகும் என தெரிவித்தார்.
மேலும், இந்த புதிய திட்டம் கடலுார், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள 230 காவல்நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணிக்கு செல்லும் மக்களின் வசதிக்காக ஸ்மார்ட் போன் மூலம் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் வசதி அறிமுகம்

சென்னை: 

      ஸ்மார்ட் போன் மூலம் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், நவீன கருவி மூலம் ஆதார் எண் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு ஆதார் அட்டையை எடுத்து சென்று காண்பித்தால் குடும்ப உறுப்பினர்கள் விவரம், சிலிண்டரின் எண்ணிக்கை, செல்போன் எண் போன்ற அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பதிவு செய்து கொள்கிறார்கள். இந்த தகவல் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே மின்னணு ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்ட்) வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களிடம் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெறப்பட்டு, வருகிற ஜனவரி மாதம் முதல் மின்னணு ரேஷன் கார்டு மூலமே பொருட்கள் வழங்கவும் அரசு திட்டமிட்டு பணிகளை வேகப்படுத்தி வருகிறது. தற்போது, ரேஷன் கடைக்கு நேரில் சென்று ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களிடம் உள்ள செல்போன் மூலமே (ஸ்மார்ட் போனில் மட்டும் இந்த வசதி உள்ளது) ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆதார் எண் வழங்காதவர்கள் அல்லது ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நிற்க நேரம் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள் ளது. அவர்களுக்கு ஸ்மார்ட் போனில் விவரங்களை பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் எளிதாக இருக்கும். இந்த செயலியின் மூலம் ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே கண்காணிக்க முடியும் என்றார்.
ஆதார் எண்ணை பதிவு செய்யும் வழிமுறை
ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஆப்ஸ்சில் TNEPDS என்ற இலவச செயலியை பதவிறக்கம் செய்தால், அது அவர்களின் ஸ்மார்ட் போன் ஸ்கிரினில் வந்துவிடும். இதேபோல் QR CODE ஸ்கேன் செயலியையும் பதிவிறக்கம் செய்யலாம். பதவிறக்கம் செய்த பின்னர் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப தலைவரின் செல்போன் எண்ணை செயலியில் உள்ளீடு செய்தால், உடனே ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் மூலம் செல்போனுக்கு வரும். அந்த எண்களை பதிவு செய்தால் செயலி திறக்கப்படும். அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய வசதியாக கேமரா ஆன் ஆகும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR CODE ஸ்கேன் செய்யப்பட்டு ஆதார் எண் திரையில் தோன்றும்.
உடனே நாம் `சமர்ப்பி’’ என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். மேலும் பதிவான ஆதார் எண் அதில் தோன்றும். முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேஷன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இது மிக எளிதாகத்தான் இருக்கும். விரைவாகவும் பதிவு செய்யப்பட்டு விடும்

ஜியோவுக்கு போட்டி: இணைகின்றன ரிலையன்ஸ் - ஏர்செல் நிறுவனங்கள்.


புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணையபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முகேஷ் அம்பானி அறிவித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ திட்டம் தொலை தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இது வோடோபோன், ஏர்டெல், ஏர்செல் உள்ளிட்ட பிற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி உள்ளது.
இந்நிலையில் இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அளவில் ஏர்செல் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் அந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு சுமார் 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதேசமயம், இரு நிறுவனங்களுக்கும் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரு நிறுவனங்கள் இணைந்தால் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக மாறும். இது இந்திய தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாகும்.
தற்போது வோடோபோன் நிறுவனத்திற்கு 20 கோடி வாடிக்கையாளர்களும் ஐடியா நிறுவனத்திற்கு 17.5 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஐடியா நிறுவனமும் வருங்காலத்தில் வேறு ஒரு நிறுவனத்துடன் இணைய போவதாகவும் சொல்லப்படுகிறது

கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி!


கர்நடகா வன்முறையில் உயிர் பிழைத்து தப்பித்து வந்த தமிழக முஸ்லிம் குடும்பம் அவர்களது வாடகை ஓட்டும் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது . 
தருமபுரி: கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியைச் சேர்ந்த நவாஸ்பாஷா என்பவர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நவாஸ் பாஷா என்பவர் இன்று அம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நவாஸ் பாஷா கூறியதாவது:
தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார்.
அவரை பார்ப்பதற்காக கடந்த 11-ந் தேதி உறவினர்களுடன் நானும் சென்றிருந்தேன்.
மறுநாள் நாங்கள் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தோம்.காரில் என்னுடன் சேர்த்து மொத்தமாக
3 ஆண்கள் 4 பெண்கள் 3 குழந்தைகள் இருந்னர்.
அப்போது மாண்டியாவின் எட்ஜிகரை என்ற புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் எங்கள் காரான சுமோ வாகணம் மாலை 3:15 மணியளவில் வந்துகொண்டிருந்தது.
திடீரென ஒரு கும்பல் நாங்கள் வந்த காரின் தமிழக பதிவு எண்ணை
(வாகண எண் TN30 AQ5689) பார்த்துவிட்டு அப்படியே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தனர்.இதனால் பதறியடித்து நாங்கள் வெளியேறி அருகே இருந்த காட்டுக்குள் ஓடினோம்.
பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ரயில் மூலம் தப்பித்து சொந்த ஊர் திரும்பியுள்ளோம். நாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு நவாஸ் பாஷா கூறினார்.

Tuesday, 13 September 2016

உதவிக் கரம் நீட்டும் கர்நாடக தமிழ்ச்சங்கங்கள்..!

உதவிக் கரம் நீட்டும் கர்நாடக தமிழ்ச்சங்கங்கள்..!

கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களால் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் களம் இறங்கியுள்ளன.
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்,  ஆபத்து ஏற்பட்டாலும் அது எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் உடனே தொலைபேசி எண் 100-க்கு தொடர்பு கொள்ளவும் தமிழ்ச்சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.
அதேபோல், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகளின் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்
கு.புகழேந்தி
94480 54831
94489 05831
0821 2343426
பெங்களூர் தமிழ்ச் சங்கம்
லேண்ட் லைன் - 080 25510062
தலைவர், கோ.தாமோதரன் - 98450 33166
தி.கோ.தாமோதரன் - 94494 85903
சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்
தலைவர், ஆறுமுகம் - 90364 74224
துணைத் தலைவர், குமார் - 99643 58993
ஹாசன் தமிழ்ச் சங்கம்
தேவசேனாதிபதி - 94488 45681
அனூர் தமிழ்ச் சங்கம்
தலைவர், அரசப்பன் - 99720 42935
கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்
நல்லசாமி - 98869 18029.
சதாசிவம் - 97319 35325.
கந்தசாமி - 96636 77655.
குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்
வீ.பாலகிருஷ்ணன் - 94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி] 94491 77151.
சாமராஜ நகர் தாலுக்கா தமிழ்ச்சங்கம்
சின்னசாமி - 94485 95956.
ஜெகதீஷ் - 94491 61772.
ஆனந்த் - 90363 94238
தங்கவேல்- 94488 71818
உன்சூர் தமிழ்ச் சங்கம்
சின்னசாமி - 99450 46727.
வேலு - 96204 84120.
முருகன் - 94487 37069.
மணி- 94499 93229.
ஹெக்கட தேவன கோட்டை (ஹெச்டி கோட்) தமிழ்ச் சங்கம்
நகுல்சாமி - 94495 32255.
தேவராஜன் - 94490 02205.
பழனிச்சாமி - 97410 63117.
பெரியசாமி - 99863 30781.
நஞ்சன்கூடு தமிழ்ச் சங்கம்
தலைவர், சீனிவாசன் - 81055 17263

தங்கமகன் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார், ரூ. 10 லட்சம் பரிசு !டிவிட்டரில் எழுந்த கோரிக்கையை ஏற்றார் ஆனந்த் மஹிந்திரா


தங்கமகன் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார், ரூ. 10 லட்சம் பரிசு !
டிவிட்டரில் எழுந்த கோரிக்கையை ஏற்றார் ஆனந்த் மஹிந்திரா
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் ஜீப் ஒன்றை பரிசளித்துள்ளது. மேலும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து மாரியப்பனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக் ஆகியோருக்கு மாநில அரசுகளும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பரிசுத் தொகைகளை அறிவித்தன. மஹிந்திரா கார் நிறுவனம், இவர்கள் இருவருக்கும் Thar ஜீப்பை பரிசாக அளித்தது.
தமிழக வீரர் மாரியப்பன் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில், 'சாக்‌ஷி மாலிக், பி.வி.சிந்து ஆகியோருக்கு கார் கொடுத்ததைப் போல, மாரியப்பனுக்கு ஏன் கொடுக்கவில்லை?' என ஏராளமானோர் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்காக #TharForMariyappan என்ற தனி ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான ட்விட்டுகள் எழுதப்பட்டன.
அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் மாரியப்பனுக்கும்  தார் ஜீப்பை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
அதுமட்டுமின்றி,  தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் தொகையை பரிசாக அளித்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, 'தனக்கு முன்னுள்ள பல்வேறு தடைகளை கடந்து தங்கம் வென்றுள்ளார் மாரியப்பன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரி விவகாரம் : தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அறிவுரை !


காவிரி விவகாரம் தொடர்பான போராட்டங்கள், வன்முறை காட்சிகளை செய்திகளில் பயன்படுத்தும்போது கட்டுப்பாடுடன் ஒளிபரப்ப தொலைக்காட்சி ஊடகங்களுக்கு  மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
உண்மை நிலவரத்தை சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், ஒளிபரப்பும் காட்சிகள் விரும்பத்தகாத செயல்களை தூண்டும் விதமாக அமைந்துவிட கூடாது என்றும்  மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வன்முறைகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் தூண்டுதலுக்கு காரணமாகி பதற்றம் அதிகரிக்கும் என்றும், இதனால், இருமாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை நேரலையாகவோ, கோப்புப் படங்களாகவோ ஒளிபரப்புவதை தவிர்த்து,  காவிரி ஆறு அல்லது பாதுகாப்பு படையினரின் காட்சிகளை ஒளிபரப்பலாம் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், வார்த்தைகளை பயன்படுத்தும்போது கவனமாக கையாள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட ராணுவத்தினர்

மெந்தர்: 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.  மேலும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இந்த வருடம் பதினெட்டு இலட்சம் பேர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளனர்.: சவுதி அமைச்சகம் தகவல்!


ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வயதுவந்த, உடல் நலமும், பணவசதியும் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களின் ஹஜ் பயணமும் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஹஜ் கடமையின் ஒவ்வொரு வழிபாடும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களையும், அவர்களின் மனைவி ஹாஜரா (அலை) அவர்களையும், மகன் இஸ்மாயில் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூருவதாக அமைகின்றது.
ஹஜ் செல்பவர்கள் துல்ஹஜ் பிறை 8ஆம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்த பின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபாவுடைய தினம், மிக சிறப்பான தினமாகும். துல் ஹஜ் பிறை 10ஆம் நாள் சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினா வர வேண்டும்.
10ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள். ஜம்ரத்துல் அக்பாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீச வேண்டும், கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்விற்காக அறுப்பதாகும்.
குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுத்து, குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும்.
11ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். 12ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும்.
12ஆம் நாளும் மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் பின் கல் எறிய வேண்டும். 12ஆம் நாளோடு ஹஜ் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும்.
ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன் வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் வதாவாகும். தவாபுல் வதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும்.
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற இந்த வருடம் ஹஜ் செய்தோர் எண்ணிக்கை 18,62,909 (பதினெட்டு இலட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது). 2012ம் ஆண்டு 31 இலட்சம் பேர் ஹஜ் செய்ததே கடந்த பத்து ஆண்டுகளில் அதிகபட்சம் ஆகும் என சவூதி அரசாங்கம் தங்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தகவல்: சவூதி அரசாங்கம்