தஞ்சை: நகராட்சியாக இருந்த தஞ்சாவூர், மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை எதிர்கொள்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பதவி பொதுவானதாகும். மேலும் திண்டுக்கல்லும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை சந்திக்கிறது. பொதுப்பிரிவில் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி தற்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தல் நடத்தப்படுவதால் இரு மாவட்டங்களிலும் தேர்தல் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூரில் 51 வார்டுகளும், திண்டுக்கல்லில் 45 வார்டுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment