Saturday, 22 October 2016

வேலைவாய்ப்பு செய்திகள்


*வேலைவாய்ப்பு செய்திகள்*இந்த செய்தி நமக்கு பயன்படவில்லை என்றாலும் வேலை தேடும் ஒருவற்கு பயன்படலாம்! forward to all groups.

1. COMPANY NAME : TIETO HIRING SOFTWARE DEVELOPERS
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  3 YEARS
SALARY : 15,000 TO 45,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK :
http://www.freshersliveupdates.com/2016/09/tieto-hiring-software-developers.html?m=1

2. COMPANY NAME : IBM
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  4 YEARS
SALARY : 20,000 -  45,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/ibm-technical-interview-questions.html?m=1

3. COMPANY NAME : RELIANCE INDUSTRIES (JIO) Ltd
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  3 YEARS
SALARY :  1,50,000 – 2,25,000 P.A
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/reliance-industriesjio-ltd-walk-in-any.html?m=1

4. COMPANY NAME : TECH MAHENDRA
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  8 YEARS
SALARY : 20,000 -  40,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/tech-mahindra-hiring-freshers.html?m=1

5. COMPANY NAME : JIO HR SERVICES PVT . LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  8 YEARS
SALARY :  90,000 – 1,25,000 P.A.
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/jio-hr-services-pvt-ltd-walk-in-any.html?m=1

6. COMPANY NAME : ADITYA BIRLA MANAGEMENT CORPORATION PVT LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  2 YEARS
SALARY :  NA
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/aditya-birla-management.html?m=1

7. COMPANY NAME :  PC TECHNOLOGY PVT. LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  4 YEARS
SALARY :  15,000  -  35,000 PM
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/pc-technology-pvt-ltd-walk-in-for.html?m=1

8. COMPANY NAME :  FIRST AMERICAN (India) PVT LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  2 YEARS
SALARY : 1,00,000 – 2,00,000 P.A
LOCATION : ALL OVER TAMILNADU
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/first-american-india-pvt-ltd-walk-in.html?m=1

9. COMPANY NAME :   AMAZON
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : FRESHERS
SALARY : Rs 3 – 4 LPA
LOCATION : ALL OVER INDIA
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/amazon-hiring-software-developer-hiring.html?m=1

10. COMPANY NAME :  ACCENTURE
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE :  0 – 1 Years
SALARY : 15,000 TO 45,000
LOCATION : MUMBAI
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/accenture-walk-in-any-graduate-freshers.html?m=1

11. COMPANY NAME :  TCS
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE :  0 – 1 Years
SALARY : 15,000 TO 45,000
LOCATION : ALL OVER INDIA
LINK:
http://www.freshersliveupdates.com/2016/08/tcs-walk-in-any-graduate-freshers-2016.html?m=1

*இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும்**வேலை வாய்ப்பு செய்திகள்* *இந்த செய்தி நமக்கு பயன்படவில்லை என்றாலும் வேலை தேடும் ஒருவற்கு பயன்படலாம்!*So forward to all groups.

விரைவில் வருகிறது 2,000 நோட்டு

மும்பை: 

ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது. தற்போது அதிகபட்ச மதிப்பாக ஆயிரம் ரூபாய் நோட்டும், இதற்கு அடுத்து 500 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் உள்ளது. கருப்பு பண புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.
இதற்கேற்ப, ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு புழக்கத்தை தடுக்க வேண்டும், இவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2,000 நோட்டை வெளியிட உள்ளது.
மைசூருவில் உள்ள அச்சகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் புழக்கத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 
1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் 10,000 மதிப்பிலான ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிட்டது. ஆனால், இவை முறையே 1946 மற்றும் 1978ம் ஆண்டுகளில் வாபஸ் பெறப்பட்டன.

Wednesday, 19 October 2016

வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்..? கொண்டாடத் தயாராகும் அதிமுக தொண்டர்கள்..!!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு லண்டன் சிறப்பு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் என தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளை பரவிவரும் நிலையில், பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்து பேசும்போது புகைப்படங்களை வெளியிட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது.
மேலும், சிங்கப்பூரிலிருந்து வந்த பெண் டாக்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை சிங்கபூரில் வைத்து சிகிச்சை அளித்தால் பூரண குணமடைய முடியும் என தெரிவித்த நிலையில், அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததாகவும், முதல்வர் ஜெயலலிதா கடல் கடந்து செல்ல விரும்பாதவர் எனவும், அவர் தீபாவளிக்கு வீட்டில் இருந்தால் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறிறித்து அப்போலோ மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமாரிடம் ஆலோசித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், முதல்வரின் வீட்டில் லிப்ட் அமைக்கும் பணியும், அங்கு வைத்து சிகிச்சை அளிக்க ஏதுவாக அப்போலோ மருத்துவமனையிலிருந்து சிகிச்சை கருவிகள் போயஸ் தோட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தீபாவளிக்கு முன் வரும் 27ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் கொண்டாட தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Topics: Online Tamil News

டேட்டா செலவை குறைக்கும் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் குறித்த தகவல்கள்:


உலகில் இன்று அதிக நபர்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பல புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சீனா, இந்தியாவை அடுத்து அதிக நபர்கள் வாழும் நாடு ஃபேஸ்புக் நாடு தான் என்று கூறப்படும் அளவுக்கு அதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் மில்லியன் கணக்கில் அதிகமாகி வருகின்றனர்.
இதேபோல் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனமும் அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள ஒரு புதிய வசதிதான் மெசஞ்சர் லைட். 
ஃபேஸ்புக் உபயோகப்படுத்த இண்டர்நெட் தேவை என்றாலும் டெக்ஸ்டாப்பில் அல்லது ஸ்மார்ட்போனில் இதை பயன்படுத்த கண்டிப்பாக ஓரளவுக்கு ஸ்பீடான நெட்வொர்க் தேவை. ஆனால் ஒருசில நிறுவனங்களில் இது கிடைக்காது. மேலும் பழைய மாடல் போன்களில் என்னதான் ஸ்பீடான நெட்வொர்க் சிம்-ஐ போட்டாலும் ஸ்பீடு கிடைக்காது.
வேகமில்லாத இண்டர்நெட்டில் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட். இந்த மெசஞ்சர் லைட் குறித்த விபரங்க்ளை தற்போது பார்ப்போம்
1. எதை எதை ஷேர் பண்ணலாம்
இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் புகைப்படங்கள், டெக்ஸ்ட் வரிகள் மற்றும் இணையதள லிங்குகளை மட்டுமே ஷேர் செய்ய அனுமதிக்கும். வேறு எதையும் நீங்கள் இதில் ஷேர் செய்ய முடியாது.
2. வாய்ஸ் கால் வசதி இல்லை
ஃபேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வாய்ஸ் கால் வசதி அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சேட் மட்டுமே செய்ய முடியும். வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் இதில் அனுமதி இல்லை. இதனால்தான் குறைந்த வேக இண்டர்நெட் கனெக்ஷனிலும் இது வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3. பிசினஸ் மெசஞ்சரும் இல்லை:
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் பிசினஸ் மெசஞ்சரை அறிமுகம் செய்தது. இந்த வசதி தொழிலதிபர்களுக்கும் பிசினஸ் செய்பவர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்த நிலையில் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட்-ல் இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. 
4. ஆண்ட்ராய்டு போனுக்கு மட்டுமே பயன்படும்:
உலகில் உள்ள பெரும்பாலானோர் ஃபேஸ்புக்கை ஆண்ட்ராய்டு ஆப் மூலமே பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளிவந்த சர்வே ஒன்று தெளிவாக கூறியுள்ளது. எனவே ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் பயன்பாட்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மட்டுமே முதல்கட்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. போக போக இனி வேறு மாடல்களிலும் இது அறிமுகப்படுத்தப்படலாம்
5. இந்தியர்கள் பயன்படுத்த முடியுமா? 
சரி, இந்தியாவில் தான் ஸ்லோவான இண்டர்நெட் கனெக்ஷன் அதிகம் உள்ள இடம். ஆனால் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் வசதியை இப்போதைக்கு இந்தியர்கள் பயன்படுத்த முடியாது. கென்யா, துனிஷியா, மலேசியா, இலங்கை மற்றும் வெனின்சுலா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எப்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த சரியான தகவல் இதுவரை இல்லை எனினும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா - ஏர்டெல் கூட்டணி: சிக்களில் ஜியோ!!



இந்தியாவின் மிகப்பெரிய 
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல் மீண்டும் தொலைதொடர்பு சாதனங்கள் நிறுவனமான நோக்கியாவுடன் கூட்டணி வைக்கிறது.
சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அடுத்த 20 வருடங்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை ஏர்டெல் கைப்பற்றியுள்ளது.
இப்போது ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியில் கடினமான தன்மையை கொடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஏர்டெல்- நோக்கியா கூட்டணி நிகழ்த்தப்பட்டுள்ளது. 
புதிய சேவை வட்டங்கள்:
ஏற்கனவே சேவைகளை வழங்கும் ஆறு வட்டங்களை (மும்பை, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப், கேரளா) தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் குஜராத், பீகார், மற்றும் உ.பி. கிழக்கு ஆகிய 3 புதிய வட்டங்களில் அதன் சேவைகளை விரிவடைய செய்கிறது.
கவரேஜ்:
நாட்டில் இணைய தரவு பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்த கவரேஜ் அனுமதிக்கும் 4ஜி தொழில்நுட்ப விரிவாக்கத்தை நிகழ்த்தி வருகிறது.
வேகமான மொபைல் இணையம்:
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய பயன்படுத்தல் சேவையானது நம் அனைவருக்கும் ஒரு சமமான வேகத்திலான மொபைல் இணைய அணுகலை வழங்க அனுமதிக்கும்.
2ஜி, 3ஜி வலையமைப்பு விரிவாக்கம்: 
மரபுவழி 2ஜி அடிப்படை நிலையங்கள் உட்பட ஏர்டெல் நிறுவனத்தின் எட்டு 3ஜி பிரதேசங்கள் நவீனமயமாக்கப்படும் என்று நோக்கியா குறிப்பிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம்: 
பார்தி ஏர்டெல் நாட்டில் அதன் ஸ்பெக்ட்ரம் தடத்தை விரிவாக்கும் 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை கைப்பற்றியுள்ளது. அதன் இருப்பை அதிகமாக்க உதவும் 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 230 மெகாஹெர்ட்ஸை முழுவதும் பெற மொத்தம் ரூ.14,244 கோடி செலவு செய்துள்ளது.

Tuesday, 18 October 2016

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது முன்னாள் பிரதமர் தேவகவுடா.


மங்களூர், அக்.17 பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடா தெரிவித்தார்.
இதுகுறித்து மங்களூரில் சனிக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நமதுநாட்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டுள்ளனர். எனவே, பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். நான் பிரதமராக இருந்தபோது, மக்களின் குறைகளைத் தீர்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்தினேன். விவசாயிகள் வஞ்சிக்கப்பட் டுள்ளனர்.
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு மக்களிடையே எழுச்சியை உருவாக்க விரைவில் பிரசாரப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினை கைமீறிச் சென்று கொண் டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக அமைதி சீர்குலைந்துள்ளது. அங்கு அமைதி திரும்ப வேண் டியது அவசியமாகும். அதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்

முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு 3 நாள் நோன்பு :


முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் 3 நாட்கள் நோன்பு மேற்கொண்டுள்ளனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 25 பேர் இன்று முதல் 3 நாட்கள் நோன்பு இருந்து வருகின்றனர். மேலும், அப்போலோ மருத்துவமனை முன்பு 20 பள்ளி மாணவர்கள் முதல்வர் குணமடைய வேண்டி திருக்குரான் ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முதல்வர் குணமடைய வேண்டி அதிமுக மகளிரணி சார்பில் அப்போலோ மருத்துவமனை முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல முதல்வர் குணமடையவேண்டி திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் 20க்கும் மேற்பட்டோர்  அப்பல்லோ மருத்துவமனை முன்பு தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினர்.

Monday, 17 October 2016

நாம ருசித்து சாப்பிடும் ஹோட்டல்களில் இப்படிதான் சாம்பார் தயார் செய்கின்றனர்..!?


சிலர் வீட்டில் சாப்பிடுவதை விட ஹோட்டல் சாப்பாடுகளை விரும்பி சாப்பிடுவர்.
அவர்களை கவர்ந்து இழுப்பது ஹோட்டல் சாம்பார் தான். அந்த சாம்பார் எப்படி தயார் செய்கின்றனர் என பார்ப்போமா..!
1.துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
2.வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
3.பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி+தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.பின் அரைத்த விழுது +உப்பு+1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5.பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
6.தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.
7.இந்த சாம்பார்இ ட்லி,தோசை,வெண்பொங்கல்,ஊத்தாப்பம் என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு..!
1.சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
2.சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்….! இவ்வளவுதாங்க..

உடல் எடை குறைய சீரகத் தண்ணீர் குடியுங்கள்!

நாள்தோறும் சீரகத் தண்ணீர் குடித்தால், உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவும்.
அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
இங்கு சீரகத் தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சீரகத் தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தினமும் குடித்து வர வேண்டும்.
சீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்கள் நம் உடலில் எளிதாக நுழைகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
சீரகத் தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாகும்.
சீரகத் தண்ணீரின் மருத்துவ குணம் அறிந்த கேரளத்து மக்களின் அன்றாட குடிநீரே சீரகத் தண்ணீர் தான். இதன் மகத்துவம் அறிந்த நாமும் இன்றிலிருந்து சீரகத் தண்ணீர் குடிப்போம். சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.

Friday, 14 October 2016

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!


    இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாட்டில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும் திடீரென காற்று வீசி இடி, மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் மற்றத்தினால் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வீடுகளுக்கு அருகில் இருக்கும் பெரியமரங்களில் உள்ள பட்ட மரக்கொப்புகளை அகற்றுவதன் மூலமும் பாதுகாப்பை உறுதிப்படுத்திகொள்ள முடியும் என்றும் இடிமின்னல் தாக்கத்தின் வெற்று பிரதேசங்களில் நிற்பதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடும் வரட்சிக்குப் பின்னர் நேற்று பொலநறுவையில் கன மழை பெய்துள்ளது. அதேவேளை இன்று அதிகாலையிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 13 October 2016

திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் - விஜயதரணி MLA கோரிக்கை.....!!

திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் - விஜயதரணி MLA கோரிக்கை.....!!

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவானாக மகிளா காங்கிரஸின் அகில இந்திய பொதுச்செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது...
இஸ்லாமிய இளம் பெண்களின் மணவாழ்க்கை பிடிக்காதபோது விரைவில் தலாக் பெற்று மறுமணம் செய்து கொள்ள முடிகிறது.
இந்து இளம் பெண்களின் மணவாழ்க்கை பிடிக்காதபோது விவாகரத்திற்காக நீதிமன்றம் அலைந்தே சீரழிந்து போய்விடுகிறது.
எனவே திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும்.

சவுதி - ரியாத்தில் சாராயம் கட்சி விற்ற ஐந்து பேர் அதிரடி படையரானால் கைது !!!


சவுதி அரேபியா- ரியாத்தில் சாராயம் காச்சி விற்ற கேரளா மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பலை சவுதி அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டனர். அந் நாட்டில் மதுபானங்கள் தயாரிப்பதும் விற்பதும் குடிப்பதும் பயங்கர குற்றம் 
அந்த நாட்டு சட்டப்படி மூவருக்கு மரண தன்டனையும் (தலை வெட்டு) இருவருக்கு தலா 10 ஆன்டு சிறை தண்டனை. கிடைக்கும் என்று ஏத்தி பார்க்கப்படுகிறது
நண்பர்களே !!!
நாம் நாடு விட்டு நாடு வருவதற்க்கு காரணம் நம்மலுடைய குடும்பங்களின் சூழ்நிலை காரனமாகவும் குடும்ப கஷ்டத்தின் காரனமாகவும் வந்திருக்கிரோம். இருக்க கூடிய காலத்தில் நன்மக்களாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும் இது போல் தங்களுடைய நட்பு வட்டதில் யாராவது செய்தால் தடுத்து நிருத்துங்கள்.
நமக்காக நமது தாய்,தந்தை மனைவி. காத்து கொண்டு இருக்கின்றனர்

இஸ்லாமிய சாம்ராஜ்யமான சவூதி அரேபியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அதிகமானவர்கள் அறிந்த செய்தியே! அதற்கான காரணங்கள்!!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கள்ளக் குழந்தையான ஈரான் நாட்டின் மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத்தடை அகற்றப்பட்ட காரணத்தினால் அவர்களும் சந்தையில் கச்சா எண்ணெய் விற்க ஆரம்பித்து விட்டார்கள் . சவூதி அரேபியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா போன்ற நாடுகள் ஈரானிடம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஈராக் , லிபியா போன்ற நாடுகளில் பொய்யான காரணங்களை கூறி படையெடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்த அமெரிக்காவிடமும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது .
எமன் எல்லையில் ஈரான் ஹூசிஈன்களுக்கு ஆயுத உதவிகளை செய்து சவூதிக்கு எதிராக போரை தூண்டிய காரணத்தினால் நாட்டின் பாதுகாப்பு கருதி போருக்காக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது . .......
இது போன்ற காரணங்களினால் இந்த நாடு நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது . இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக விசிட் விசா , பிஸினஸ் விசா , இக்காமா , போக்குவரத்து விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனை பலரும் மிக கடுமையாக விமர்சிக்கின்றனர் .
அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் வழி முறைகளை சரியாக புரிந்தவர்கள் இஸ்லாமிய ஆட்ச்சியாளர்களை விமர்சனம் செய்யமாட்டார்கள். இவ்வாறு விமர்சனம் செய்வது கவாரிஜ்களின் வழிமுறைக்கு ஒப்பானது.
இந்த நாட்டின் மூலம் தனிமனிதர்களும் , இஸ்லாமிய சமூகமும் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எண்ணிலடங்கா பலன்களை அடைந்துள்ளனர்.
இன்பங்களை அனுபவித்தவர்கள் துன்பத்திலும் பங்கெடுக்க வேண்டும். குறைந்த பட்சம் விமர்சிக்காமல் அமைதி காக்கட்டும் . ஷேக் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ் ) கூறினார்கள் இந்த ந்நாட்டிற்கு எதிரானவர்கள் சத்தியத்திற்கு எதிரானவர்கள் , தவ்ஹீதுக்கு எதிரானவர்கள்.
பதிப்புரிமை: நன்றி: யசீர் ஹமீத்

ரேஷன் - புகார் எண் அறிவிப்பு!!!

ரேஷன்  - புகார் எண் அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத் துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டத்திற்கு 3 தேவைக்கான அரிசி கையில் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், தேவைப்படும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் நியாய விலை அங்காடிகளுக்கு உடனுக்குடன் நகர்வு செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் புகார் அளிக்க வேண்டிய எண்களையும்  அறிவித்துள்ளார்.
044 28592828 , 9445190660, 944519061, 944519062

விரைவில் உங்கள் செல்போன் எண் மாற உள்ளது?


விரைவில் உங்கள் செல்போன் எண் மாற உள்ளது?
➖➖➖➖➖➖➖➖➖➖➖
இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள், விரைவில் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் செல்போன் சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2003ம் ஆண்டில் 10 இலக்க எண்களைக் கொண்ட செல்போன் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
செல்போன் வாடிக்கையாளர்களின் அடிப்படையில் அப்போதைய கணிப்பின்படி இந்த 10 இலக்க எண் என்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க முடிவும் செய்யப்பட்டது.
ஆனால், இந்தியாவில் செல்போன்  சேவையின் அசுர வளர்ச்சியும், வாடிக்கையாளர்களின் அதீத பயன்பாடு காரணமாக, பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் மீறி செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு, ஒருவரே பல எண்களைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது.
இதனால், செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்போன் எண்களை 11 இலக்கங்கள் கொண்டதாக மாற்ற தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
➖தினமனி

Wednesday, 12 October 2016

அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு !

அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு !

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் மீது  IPC153 (a) மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல்படுதல் , 25(1)(a) ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு...
துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பூஜை நடத்திய படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் அளித்த புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை..

ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்ததா ?

ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்ததா ?

முகம், கைகளை தவிர உடலின் மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்தின்படி ஆடை அணிந்துள்ள இந்த சகோதரி நீதித்துறையில் முதல் தரத்தில் வெற்றிப்பெற்று தெலுங்கானா மாநில நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அணிந்துள்ள ஹிஜாப் இவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததா ?
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும் என்பதில் அவர்களின் விருப்பம் ஆகும்.
ஆண் வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்துடன் கலக்கும் போது அடையாளம் காண்பதற்காக அந்த ஆணின் முகம் வெளியில் தெரியவேண்டியது அவசியமான ஒன்றாகும்.
முகம் வெளியில் தெரிய வேண்டும் என்பது அவசியமான ஒன்று என்பதால் ஆண்கள் அனைவரும் முகம் தெரியும் விதமாகவே வெளியில் வருகிறார்கள்.
அதே அந்த ஆணின் வயிறு வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொடை வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
வயிறு, தொடை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அனைத்து மத ஆண்களும் அந்த பகுதிகளை மறைத்தே வெளியில் வருகிறார்கள்.
ஆண்கள் வயிறு, தொடை, தொப்புள் தெரியும் விதமாக வெளியில் வந்தால் அவர்களை சமூகம் பைத்தியக்காரர்கள் என்று அழைக்கும்.
ஒருவேளை ஆண்கள் அந்த பகுதிகளை வெளியில் தெரியும் விதமாக வந்தால் கூட ஆண்களுக்கு வன்புணர்வு போன்ற கொடுமைகள் நிகழாது.
அதேப்போல் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்துடன் கலக்கும் போது அவரை அடையாளம் காண்பதற்காக அவருடைய முகம் தெரியவேண்டியது  அவசியமான ஒன்று...
முகம் வெளியில் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் முகம் தெரியும் விதமாக வெளியில் வரலாம். இஸ்லாம் அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
அதே பெண்ணின் வயிறு வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொடை வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை,
வயிறு, தொடை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை எனும்போது அதை மூடி வருவது தானே சரியான ஒன்றாக இருக்க முடியும் ?
சரியான ஒன்றை முஸ்லிம் பெண்கள் செய்யும்போது அவர்களை ஊக்குவிக்க வேண்டிய சமூகம் இழிவாக பேசுகிறது.
ஆண்கள் அரைகுறையாக வந்தால் பைத்தியக்காரர்கள் எனும் சமூகம் பெண்கள் அரைகுறையாக வந்தால் சூப்பர் என்கிறது. மேலும் பெண்கள் பாலியல் ரீதியாக எண்ணற்ற துன்பங்களை சந்திப்பதையும் காண முடிகிறது.
அதுமட்டுமில்லாமல் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அது அவர்களுக்கான சுதந்திரம் என்று வக்காலத்து வாங்குபவர்கள் முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து வெளியில் வருவதும் அது அவர்களுக்கான சுதந்திரம் என்று வக்காலத்து வாங்க மறுப்பது ஏன் ?
முஸ்லிம் ஆண்களாகிய நாங்கள் முஸ்லிம் பெண்களை ஹிஜாப் அணிய வேண்டும் என்று அடிமைப்படுத்துவதாக சில பெண்ணிய அமைப்புகள் கூறுகிறார்கள்.
நாங்கள் எங்களுடைய குடும்ப பெண்களை ஹிஜாப் இல்லாமல் வெளியில் வாருங்கள் என்றாலும் அவர்கள் ஹிஜாப்புடன் தான் வெளியில் வருவார்களே தவிர ஹிஜாப்  இல்லாமல் வெளியில் வரமாட்டார்கள்.
ஏனென்றால் ஹிஜாப் அணியாத பெண்களை விட ஹிஜாப் அணிந்த பெண்கள் சமூகத்தில் கலக்கும்போது 100 சதவீதம் பாதுகாப்பாகவும், சௌகரியமாக கருதுகிறார்கள்.
அதனால் தான் சில ஐரோப்பிய நாடுகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டவுடன் முஸ்லிம் பெண்கள் பிரம்மாண்டமான தொடர் போராட்டங்களை நடத்தி தடையை ரத்து செய்ய வைத்தனர்.
முகம் தெரியும் அளவுக்கு வெளியில் வரும் ஒரு ஆணால் வெற்றியும், சாதனையும் படைக்க முடியும் என்றால் அதே முகம் தெரியும் அளவுக்கு வெளியில் வரும் ஒரு பெண்ணால் ஏன் வெற்றியும் சாதனையும் படைக்க முடியாது ?
வெற்றி, சாதனை என்பது அறிவு, திறமை, உழைப்பை வைத்து கிடைக்கக்கூடியது. இதற்கும் தொப்புளுக்கும் என்ன சம்பந்தம் ? பைத்தியக்காரத்தனமாக ஆடை அணியக்கூடியவர்கள் முஸ்லிம்களை பார்த்து பைத்தியக்காரர்கள் என்கிறார்கள்.
ஹிஜாப் எந்த வகையிலும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கவில்லை. மாறாக பெண்களின் பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது.
நல்லவர்களுக்கு நல்லுபதேசம் பயனளிக்கும்.

Tuesday, 11 October 2016

ஆண்களே இளநரை என்று கவலையா? இதச் செய்யுங்க மறைந்துவிடும்!


நரைமுடி இன்றைய தலைமுறைகளில் சர்வ சாதரணமாகிவிட்டது. நமது பாட்டிகளுக்கு 60 வயதுகளிலுமே ஒன்றிரண்டு முடிகள்தான் நரைத்தது. இப்போதும் பல முதியவ்ர்களுக்கு முடி கருமையாக இருப்பதை காணலாம்.
இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஷாம்பு உபயோகித்தது இல்லை. இன்று பதினெட்டு ப்ளஸ்களிலேயே நரைமுடியை மறைக்க கலரிங் செய்து கொள்கிறார்கள்.
இவை எத்தகைய அபாயத்தை உண்டு பண்ணும். பலவித நோய்களை தருவதோடு கூந்தல் வளர்ச்சியும் 30 க்கு மேல் மோசமாக இருக்கும்.
இள நரையை தடுக்க கலரிங்க் செய்யத் தேவையில்லை. இந்த நெல்லிகாய் சிரப்பை வாரம் ஒருமுறைஉபயோகியுங்கள். நரை முடி காணாமல் போய்விடும்.
புதிதான நெல்லிக்காயை சுத்தம் செய்து அதனை துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காயை இடித்து அல்லது மிக்ஸியில் போட்டு சாறை எடுத்துக் கொள்ளவும்.

அந்த நெல்லிக்காய் சாறை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நீரில் தேயிலைப் பொடியை போட்டு கொதிக்க வைத்து, வரத் தேநீர் தயார் செய்து, அதனை நெல்லிக்காய்சாறுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் கூந்தலை தனித்தனியான பிரித்து இந்த் சாறினை தடவவும்.. தலையில் ஸ்கால்ப்பில் தடவுங்கள். மிச்சமிருந்தால் நுனிவரை தடவலாம்.

1 மணி நேரம் பிறகு தலை அலசவும். இப்படி வாரம் 1 அல்லது 2 முறை செய்தால் உங்கள் கூந்தலின் நரை போக்கி இளமையாக மிளிரும்.

முதலமைச்சராக ஜெயலலிதா நீடிப்பார்..துறைகள் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றம் !


முதலமைச்சர் #ஜெயலலிதா பொறுப்பில் இருந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கீடு செய்து ஆளுநர் அறிவிப்பு..
மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் என்றும், அவர் பொறுப்பில் இருந்த காவல்துறை, உள்துறை உள்ளிட்டவைகள் கூடுதலாக ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடுகள் தொடரும் என்றும், முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அமைச்சரவை கூட்டங்களுக்கு இனி ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்   என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Jayalalithaa | #OPanneerselvam

ஆப்பிளில் பாயாசம் செய்யலாம். உங்களுக்கு தெரியுமா?


பாயாசத்தில் பழம் போட்டு செய்தால் சுவையாக இருக்கும். ஆப்பிள் கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 
ஆப்பிள் - 2
பால் - 4 கப்,
சர்க்கரை - ஒரு கப்,
கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்),
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
மில்க்மெய்ட் - கால் கப்,
முந்திரி -  தேவைக்கு
வெனிலா எசன்ஸ் -  ஒரு துளி.
செய்முறை : 
* ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
* வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். 
* பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். 
* நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
* இனிப்பான ஆப்பிள் பாயாசம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களைsamayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சூயிங்கம் விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும்.


குழந்தையாக இருக்கும் போது சூயிங்கம் விழுங்கிவிட்டால் வயிறு ஒட்டிக்கொள்ளும், அது சரியாக 7 வருடம் ஆகும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். செரிமானம் ஆகாது என பல விஷயங்கள் கூறுவார்கள். இன்றும் கூட ஒருசிலர் சூயிங்கம் விழுங்கிவிட்டு பயப்படுவதுண்டு. ஆனால், உண்மையில் சூயிங்கம்மை விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என்பதை பற்றி பார்ப்போம்…
நீண்ட நாட்களாக ஒரு புரளியை நீங்கள் கேள்விப்பட்டு வந்திருப்பீர்கள். சிறு வயது முதலே சூயிங்கம்மை விழுங்கினால் அது செரிமானம் ஆகாது, ஒருசில வருடங்கள் அது வயிற்றில் தங்கிவிடும் என்றெல்லாம் கூறுவார்கள். இது முற்றிலுமான பொய். இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் கொண்ட சூயிங்கம் வயிற்றில் செரித்து விடும்.
சூயிங்கமில் இருக்கும் அந்த கம் போன்ற மூலப்பொருள் எளிதாக கரையாது. அது வயிற்றிலேயே ஒட்டிக்கொள்ளும் என கூறுவார்கள். அப்படி இல்லை. மற்ற உணவுகளை காட்டிலும் இது முழுமையாக செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளுமே தவிர வயிற்றிலேயே தங்கிவிடாது.
வயிற்று கோளாறு போன்ற சில உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் சூயிங்கம் விழுங்கினால் பாதகமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படலாம். பெரிய அளவில்… பெரிய அளவில் சூயிங்கம்மை விழுங்கினால் அது பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் சில சமையம் சூயிங்கம்மை விழுங்கும் போது தொண்டையில் அது சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு நிமிடங்கள் சூயிங்கம் மென்றால் வாய் துர்நாற்றம் குறையும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் அதிகம் சூயிங்கம் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்.
தினமும் அதிக நேரம் சூயிங்கம் மெல்வது தாடை எலும்பில் கோளாறுகள் உண்டாக்கலாம். 

Monday, 10 October 2016

குடும்ப வன்முறை - உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.


குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், 'வயதுக்கு வந்த ஆண்கள்' மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற சொல் உள்ளதால், பெண்களும், வயதுக்கு வராதவர்களும் தப்பித்து  வருவதாகவும், எனவே  குடும்ப வன்முறை தொடர்பாக யார் யார் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் இடம் பெற்றுள்ள, 'வயதுக்கு வந்த ஆண்கள்' என்ற வார்த்தை நீக்கப்படுவதாக  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பெண்களை, அவர்களுடைய கணவர் வீட்டில் உள்ள பெண்களும், வயதுக்கு வராதவர்களும் கொடுமைப்படுத்தினால், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இதுவரை ஆண்கள் தண்டிக்கப்பட்டு வந்த நிலையில் மருமகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.
பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் அறிவாளிகளாக வளர்வதற்கு தாயின் மரபணு தான் காரணம்: ஆய்வில் தகவல்.


குழந்தைகள் பிறந்தது முதல் அறிவாளிகளாக வளர்வதும் அல்லது அறிவு குறைந்தவர்களாக மாறுவதும் அவர்களுடைய தாயாரின் மரபணுவை பொருத்துள்ளதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாயாருக்கு X வகை குரோமோசோம் இரண்டு உள்ளதால் அவர்கள் எளிதில் அறிவை உற்பத்தி செய்யும் மரபணுக்களை தங்களுடைய குழந்தைகளுக்கு அனுப்புகின்றனர்.
ஆனால், இந்த X வகை குரோமோசோம் தந்தைக்கு ஒன்று மட்டுமே இருப்பதால் அவர்களால் அறிவை உற்பத்தி செய்யும் மரபணுக்களை குழந்தைகளுக்கு அனுப்ப முடியாது.
அதாவது, குழந்தை அறிவாளியாக வளர்வதும் அல்லது அறிவு குறைந்தவர்களாக வளர்வதும் தாயின் மரபணுவை பொருத்து தான் உள்ளது.
இதில், தந்தை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
எனினும், தந்தை மூலம் அறிவு மரபணுக்கள் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்டாலும் அவை குழந்தைகள் வளர்ச்சி அடையும்போது தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதேசமயம், குழந்தைகள் அறிவாளிகளாக வளர்வதற்கு சுமார் 60 சதவிகிதம் தாயாரின் மரபணு காரணமாக இருந்தாலும் கூட, எஞ்சிய 40 சதவிகிதம் குழந்தை எந்த சூழலில் வளர்கிறது என்பது பொருத்து அமையும் எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு !


நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு !
நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளின் தீர்ப்பு, விசாரணை குறித்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக அவர்களுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், நீதிபதிகளின் தீர்ப்புகள், ஒத்திவைப்புகள், வழக்குகளை விசாரிக்கும் காலம், உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.
இது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் பொருந்தும்.

கொசுக்களை ஒழிக்க வழி இருக்கு!


இன்றளவில் பெருகி வரும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்த நோயின் தாக்கம் மரணம் வரைகூட கொண்டு செல்லும். கொசுக்களை தவிர்க்க கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளை பயன்படுத்தும்போது பாதிப்புகளும் அதிகம். இதற்கு மாற்றாக இயற்கை முறையில் கொசுக்களை விரட்டும் வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
*கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தேங்காய் எண்ணெய் தடவினால் போதுமானது என்று வாட்ஸஅப் வதந்திகள் பரவி வருகின்றன. தேங்காய் எண்ணெயால் ஒரளவு மட்டுமே தாக்குபிடிக்க முடியும்.  மருந்து கடைகளில் கிடைக்கும் நொச்சி எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தடவினால் கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். 
*இதேபோல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டு கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வீசுவது மட்டுமல்ல... கொசுக்களும் நெருங்காது.
*புதினாவை சிறிது நீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளித்தால், இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்து விடும்.
*வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளை கைப்பிடியளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாக பயன்படுத்தலாம். கை, கால், பாதங்களிலும் சிறிதளவு தடவினால், பச்சிலை தைலத்தின் நெடி தாங்காமல் கொசு ஓடிவிடும். மேற்சொன்ன பச்சிலையை உலர வைத்து, அதில் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை என இருவேளைகளிலும் வீட்டுக்கு சாம்பிராணி புகை காட்டலாம். 
*பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் 1:5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் வீட்டில் துளையுள்ள இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.
*கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து எரித்து வீடு முழுக்க காட்டலாம் அல்லது தண்ணீரில் கற்பூரத்தைப் போட்டு வைக்கலாம். இதனால் ஈக்கள் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். ஆனால் கொசுக்களை ஓரளவே கட்டுப்படுத்தலாம்.
*யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. ஆஸ்துமா நோயாளிகள் கொசுவினை விரட்ட புகைபோடுவதை தவிர்ப்பது நல்லது.

Saturday, 8 October 2016

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு:


தனியார் சட்டத்திற்குள் தலையிட வேண்டாம்!
பாஜகவுக்கு முஸ்லிம்கள் எச்சரிக்கை!!
சிறுபான்மை சமுதாயத்தில் பெரும்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற நம் நாட்டில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுமானவையாக உள்ளன. ஆயினும் சில சட்டங்கள் மட்டும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால் அனைத்து மதத்தினருக்கும் விதி விலக்காக அவர்களின் மத நம்பிக்கை படி செய்து கொள்ள மிகச்சில சட்டங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிவிலக்கின் படி முஸ்லிம்கள் தங்களின் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் இஸ்லாமியச் சட்டத்தின் படி செய்து கொள்ள அனுமதிப்பது தான் முஸ்லிம் தனியார் சட்டமாகும்.
முஸ்லிம்கள் தங்களின் மத நம்பிக்கைப் படி இதனைச் செய்வதில் மற்ற எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இருப்பினும் முஸ்லிம்களின் இந்த உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பாஜக, ஆர்.எஸ்.எஸ்  போன்ற சங்பரிவார அமைப்புகள் துடித்து கொண்டிருக்கின்றன.
சங்பரிவாரத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் உச்சநீதிமன்றத்தில் தலாக் (விவாகரத்து) வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமியச் சட்டத்திற்குள் நுழைவது முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகுமா? என்ற கேள்வியோடு மத்திய அரசின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
உடனே பரிந்துரை என்கிற பெயரில் பாஜக அரசு முஸ்லிம் விரோதப் போக்கைக் காட்டும் விதமான அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையைப் பார்க்கின்ற போது  ‘ஆடு நனையுதே என்று ஓநாய் அழுகின்ற” பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
முத்தலாக் என்பது சமத்துவத்திற்கு எதிரானது, பெண்களின் சுயமரியாதையைப் பாதிக்கக்கூடியது என்பதாக தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமியப் பெண்களின் நலனில் பாஜகவிற்கு உதித்திருக்கிற அக்கறையை இங்கு கவனிக்க வேண்டும்.
குஜராத், முஸாஃபர்  நகர் உட்பட பல்வேறு கலவரங்களில் ஆயிரக்கணக்கான பெண்களைக் கருவறுத்தவர்கள், அகதிகளாக ஊரை விட்டே ஓட ஓட விரட்டியவர்கள் இன்று தலாக் பற்றி கவலை கொள்வது அப்பட்டமான அயோக்கியத்தனாமாகும்.
ஒரு நேரத்தில் முத்தலாக என்பது இல்லை என்பது உண்மைதான். சவூதி எகிப்து உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்ல அனுமதியில்லை. நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியிலும் இதற்கு அனுமதி இல்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தவறுதலாக இடம்பெற்ற இச்சட்டத்தை முஸ்லிம் சமுதாயத்தின் ஒப்புதலோடு மாற்றியமைத்தால் அதில் முஸ்லிம்களுக்கு மறுப்பு இல்லை.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள விவாகரத்து உரிமையை ஒட்டு மொத்தமாகப் பறிக்க பாஜக அரசும் நீதிமன்றமும் முயல்வதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. இது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்பதுதான் முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தாகும்.
மற்ற சமுதாயம் போல் விவாகரத்து வழக்குக்கு ஐந்து பத்து ஆண்டுகள் அலைவது போல் முஸ்லிம்கள் அலைய தயாரில்லை.
விவாகரத்து தாமதம் ஆவதால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதையும், தவறான செயல்களில் ஈடுபடுவதையும் சிந்திக்கும் யாரும் இஸ்லாம் கூறும் விவாகரத்து முறைதான் சரியானது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
மேலும் போகிற போக்கில் தலாக் சொல்வது இஸ்லாத்தில் இல்லை.
கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை எனில் இரு வீட்டாரும் இணைந்து அவர்களை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களால் முடியாத நிலையில் ஜமாத்தார்கள் தலையிட்டு இணைத்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதுவும் பயனளிக்கவில்லை எனில் நல்ல முறையில் பிரிந்து விட வேண்டும்.
இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால் இரு சாட்சிகள் முன்னிலையில் விவாக ரத்து செய்ய வேண்டும். அதன் பின்னர் ஜமாஅத்தார்கள் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு கணவனிடமிருந்து கணவனின் வசதிக்கு ஏற்ப பாதுகாப்புத் தொகை பெற்றுத்தர வேண்டும்.
குழந்தைகள் இருந்தால் அதன் பராமரிப்புச் செலவு முழுவதும் கணவனைச் சேர்ந்ததாகும். குழந்தைக்கு பாலூட்டுவதற்காகக் கூட மனைவிக்கு தக்க சன்மானம் வழங்க வேண்டும். இன்னும் பல விஷயங்கள் இதன் பின்னணியில் உள்ளன.
இது தான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டமாகும்.
இவற்றில் எதையும் கவனிக்காமல் முஸ்லிம்களிடம் கருத்தும் கேட்காமல் அவசர அவசரமாக இந்த அறிக்கையைச் சமர்ப்பித்து பாஜக தனது ஃபாஸிச சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக முஸ்லிம்களின் மத உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நிறைவேற்ற பாஜக முயல்கிறது என்பது தான் உண்மை.
எனவே பாஜக தனது அத்துமீறலை நிறுத்திக் கொள்ள வேண்டும், அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளில் கைவைக்கக் கூடாது என இஸ்லாமிய சமுதாயம் எச்சரிக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தைப் பெற்று முத்தலாக் முறையை நீக்க முன்வந்தால், நபிகள் நாயகத்தின் வழிமுறைக்கு மாற்றமான இந்த முத்தலாக்கை நீக்குவதை முஸ்லிம்கள் மறுக்க மாட்டார்கள்   என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
M.முஹம்மது யூசுப்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Thursday, 6 October 2016

நாடு முழுவதும் வரும் ஜனவரி முதல் பிறப்பு, இறப்பு சான்றுகள் ஆன்லைனில் பெறலாம்: அதிகாரிகள் தகவல்.


நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக  அலைந்து திரிகின்றனர். இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்காக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற மாநகராட்சிகளில் ஆன்லைன் மயமாக்கப்பட்டாலும் சான்றுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை நேரில் சென்றுதான் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றுகள் கணினி மூலமாகவும், தட்டச்சு செய்யப்பட்டும் வழங்கப்படுகிறது. இப்படி பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த சிக்கல்களை போக்க மத்திய அரசு சார்பில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் சென்னையில் மட்டும் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மத்திய அரசு சார்பில் நாடுமுழுவதுமாக ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்கு டெல்லியை தலைமையிடமாகக்கொண்டு ஒரே கணினி மென்பொருள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும். இவ்வாறு கூறினர்

கணினி உதவியுடன் விசா உண்மை தன்மையை சோதித்து அறிய பயனுள்ள லிங்க் உங்களுக்காக வழங்குகிறார்.


கணினி உதவியுடன்
விசா உண்மை தன்மையை சோதித்து அறிய பயனுள்ள லிங்க்  உங்களுக்காக வழங்குகிறார்.
மற்ற தமிழருக்கு உதவிடும் மனம் இருந்தால் நீங்களும் ஷேர் செய்யலாம்.

2. SAUDI IQAMA VISA CHECK LINk
---------------------------
https://visa.mofa.gov.sa/visaServices/PrintVisa

3. QATAR VISA CHECK ONLINE
-------------------------
https://www.moi.gov.qa/VsaWeb/Actions

4. OMAN VISA CHECK ONLINE
--------------------------
http://www.rop.gov.om/english/onlineservices_visastatus.asp

5. BAHRAIN VISA ONLINE CHECK
--------------------------
http://lmra.bh/portal/en/home

6. MALAYSIA VISA ONLINE CHECK
--------------------------
https://eservices.imi.gov.my/myimms/enqApplSts

7. SINGAPORE VISA ONLINE CHECK
VISIT VISA CHECK :-
------------------------------------------
https://save.ica.gov.sg/save-public/index.xhtml;jsessionid=pNgbWJ1QYhBG54lc2r9rLhrCgNKnSP6nf32LWDyC6cQytL01ZhTb!-727631320

WORK PERMIT CHECK
------------------------------
:-https://wponline.mom.gov.sg/WPOLLoginController?action=WPOLLoginAction&actionType=WPOLNonLogin

EPASS SPASS CHECK:-
-----------------------------
https://eponline.mom.gov.sg/epol/PEPOLUAMT012DisplayAction.do

ரூ 2 லட்சம் அரசு மானியத்தில் வீடு கட்டவேண்டுமா..!! இதபடியுங்க முதலில்..!


பொது மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோசனா திட்டத்தில் கீழ் அனைவரும் சொந்த வீடு என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டம்.
இந்தத் திட்டத்தில் பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர் அனைவரும் பயனடையலாம். வீட்டினைப் புதுப்பிக்கவும் இதன் மூலம் கடன் பெறலாம்.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நகரம் மற்றும் சிறு நகரங்கள் என்ற வகையில் 721 பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும்போது 1 லட்சம் ரூபாயில் இருந்து 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஊரக வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கினால் இந்த மானியம் கிடைக்கும்

சிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் சிட்ரஸ் பழங்கள்.


சிறுநீரகக் கற்கள் என்பது பல்வேறு மினரல்கள் கலந்து கரைய முடியாத சிறு சிறு கல்லாய் மாறிவிடும், இவை சிறுநீரில் வெளியேற முடியாமல் அடைத்துத் தாங்க முடியாத வலியை உண்டாக்கும்.
பெரும்பாலும் கால்சியம் ஆக்ஸலெட் என்ற தாதுதான் சிறுநீரக கற்களாய் உடலில் தோன்றும். சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும். சிறுநீரகக் கற்கள் உருவாகும் ஆபத்தில் இருப்பவர்கள் கீரைகள், ஆசஸலேட் உள்ள உணவுகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் அதிகமாக நீர் அருந்துதல் மிக முக்கியம்.
சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும் அவ்வாறு உருவாகிய கற்களைக் கரையச் செய்யும் ஆற்றல் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சிட்ரஸ் பழங்களிலுள்ள ஹைட்ராக்ஸி சிட்ரேட் என்ற பொருள் சிறு நீரகக் கற்கள் உருவாகக் காரணமான கால்சியம் ஆக்ஸலேட்டைக் கரையச் செய்யும் என அமெரிக்காவிலுள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tuesday, 4 October 2016

சமையல் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம்!


சமையல் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம்!
சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அரசின் மானியங்களைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை  என அறிவித்த மத்திய அரசு, பின்பு சமையல்  எரிவாயு மானியம் பெற ஆதார் அவசியம் எனக் கூறியது.
ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
எனவே, செப்டம்பர் இறுதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசு காலக்கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் சமையல் எரிவாயு மானியத்திற்கு ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதன்படி, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, அதற்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து, அரசின் மானியத்தை பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதி செய்தி விவகாரம். மன்னிப்பு கேட்குமா பாலிமர் டிவி?


நேற்று பாலிமர் டிவியில் கோவையில் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதி கைது என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈராக், சிரியாவில் உள்ள தீவிரவாத இயக்கம் தமிழகத்திலும் காலூன்றிவிட்டதோ என அனைவரும் அச்சப்பட்டு இருக்கும் நிலையில் இதுவொரு பொய்யான செய்தி என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோவை யூசூப் அவர்கள் இதுகுறித்து பாலிபர் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது கடைசி வரை பாலிமர் நிர்வாகத்தினர் மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது. 
உண்மையில் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள், ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக மட்டுமே காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அவர்கள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கைது என்ற செய்தியை கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஸ்குரோலில் ஓடவிட்ட பாலிமர் டிவி, விடுவிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கவில்லை என்று கோவை யூசூப், பாலிமர் டிவி நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவித்த ஆடியோ ஒன்று வெகுவேகமாக தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த முஸ்லீம் சகோதரர் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உண்மையில் கைது செய்யப்பட்டவர் ஐ.எஸ்,தீவிரவாதிகள் என்றால் அதற்குரிய ஆதாரத்தை தெரிவியுங்கள். அல்லது. தவறுதலாக செய்தி வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் என்பதுதான். இதை பாலிமர் டிவி நிர்வாகம் செய்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி.


தேவையான பொருட்கள்  :
இறால் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை  :
* இறாலைத் தோல் நீக்கி, சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். 
* சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
* பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்துடன், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். 
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும். 
* பின் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும். 
* மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து கிளறவும். 
* இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். 
* இத்துடன் கழுவி வைத்த இறாலைப் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 
* மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிடவும். இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* அதிக கிரேவி பதம் வேண்டும் என்பவர்கள் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 
* பத்து நிமிடத்தில் நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் தொக்கு தயார். 
* இதனை இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்து உண்ணலாம்.

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் உட்கட்சி மோதலில் கொலை? சக நிர்வாகி தீக்குளித்ததால் அம்பலம்!!


கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் உட்கட்சி மோதலில் கொலை? சக நிர்வாகி தீக்குளித்ததால் அம்பலம்!!
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் உட்கட்சி மோதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் கடந்த மாதம் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலையைக் கண்டித்து இந்து முன்னணியினர் வெறியாட்டம் போட்டனர்.
கோவையில் பூட்டப்பட்ட கடைகளை உடைத்து இந்து முன்னணியினர் கொள்ளையடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. துடியலூர் மகாலட்சுமி பேக்கரிக்குள் நுழைந்தும் அக்கும்பல் சூறையாடினர்.
அப்போதே இந்து முன்னணியினரிடையேயான உட்கட்சி மோதலால் தான் இக்கொலை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் பாஜகவினர் உள்ளிட்டோர் மத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டினர். சென்னையில் தடையை மீறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் போராட்டமும் நடைபெற்றது.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என கூறியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் என்பவர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, சசிகுமார் கொலை வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்பதற்கு பயந்து தீக்குளித்ததாக கூறியுள்ளார். இதனால் சசிகுமார் உட்கட்சி மோதலில்தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.


தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இரு அரசாணைகள் பிறப்பித்தன. அதேபோல, சென்னை மாநகராட்சிகளும் அறிவிப்பாணை வெளியிட்டது.
முன்னதாக தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தவில்லை என்றும் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கவில்லை என்றும் எனவே, இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பிப்பதாக இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (4–ந் தேதி) பிறப்பிப்பதாக நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டு இருந்தார். 
இந்த வழக்கில் இன்று  நீதிபதி என்.கிருபாகரன்  உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்..   அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.டிசம்பர் 30 ந்தேதிக்குள் உள்ள்ளாட்சி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார். மேலும் தேர்தலுக்காக புதிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். எனவும் உத்தரவிட்டு உள்ளார்

கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள்...


கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி…? வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் ஆரம்பமாகும். அப்படி கோடையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரக கற்கள். இந்தியாவில் மட்டும் சிறுநீரக கற்களால் கிட்டத்தட்ட 5.7 மில்லியன் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
மற்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் கோடையில் தான் சிறுநீரக கற்கள் அதிகம் ஏற்படும். அதிலும் கோடையில் அதிகப்படியான வெயிலினால் 40% அதிகமாக சிறுநீரக கற்கள் வருவதற்கு முக்கிய காரணிகளாகும். அதுமட்டுமின்றி, கோடையில் கொளுத்தும் வெயிலினால் உடலில் இருந்து அதிகப்படியான நீரானது வியர்வையின் வழியே வெளியேறுகிறது.
இருப்பினும் பெரும்பாலான மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்காமல், உடலில் நீர் வறட்சி ஏற்படுகிறது.  தண்ணீர் அதிகம் குடிக்கவும், கோடையில் பகலிலும், இரவில் படுக்கும் முன்னும் தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதோடு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். கோடையில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், அவை சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். எனவே கோடையில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடியுங்கள்.
கோடையில் தாகத்தை தணிக்க எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதன் மூலம், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கோடையில் ஆக்ஸலேட் என்னும் ஆசிட் அதிக அளவில் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீரகத்தில கால்சியம் ஆக்ஸலேட் சிறுநீரக கற்களை உருவாக்கும்.
இந்த ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களாவன சோடா, ஐஸ் டீ, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் போன்றவை. காப்ஃபைனைக் குறைக்கவும். காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும். கோடையில் உணவில் உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். அப்படி உப்பை அதிகம் சேர்த்தால், அதுவும் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.
இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் உள்ள பியூரின்ஸ் என்னும் பொருள் யூரிக் ஆசிட்டாக மாற்றும். கோடையில் அதிக அளவில் சாலட்டுகளை எடுத்துக் கொளளலாம். இதனால் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

நொடிக்கு 24 எம்பி வேகமளிக்கும் டாப் 10 அன்லிமிட்டெட் பிஎஸ்என்எல் திட்டங்கள்..


பிஎஸ்என்எல் அதிவேக டேட்டா திட்டங்களை நாடு முழுக்க பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ரிலையனஸ் ஜியோ அறிமுகத்திற்குப் பின் பிஎஸ்என்எல் தனது சேவைக் கட்டணங்களை குறைத்து வருகின்றன.
பல்வேறு திட்டங்களில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகின்றது. பிஎஸ்என்எல் அதிவேக இண்டர்நெட் திட்டங்களைப் பொருத்த வரை அதிகபட்சமாக நொடிக்கு 24 எம்பி வரை வேகம் கிடைக்கின்றது. மேலும் இத்துடன் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் அழைப்புகளும் வழங்கப்படுகின்றது.
பயனர்கள் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மேலும் போஸ்ட்பெயிட் பிராட்பேண்ட் திட்டங்களைப் பயன்படுத்துவோர் மாதம் முழுக்க 1000 இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். பிஎஸ்என்எல் ULD 1891, BBG ULD 2641, BBG காம்போ மற்றும் ULD 2799 போன்ற பிராட்பேண்ட் திட்டங்களின் வேகம் நொடிக்கு 4 முதல் 24 எம்பி வரை வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் டாப் 10 தலைசிறந்த அன்லிமிட்டெட் வேகம் கொண்ட பிஎஸ்என்எல் திட்டங்கள் சார்ந்த தகவல்களை இங்குப் பார்ப்போமா.
BBG Combo ULD 999 மாதம் ரூ.999 செலுத்தும் போது நொடிக்கு 4 எம்பி என்ற வேகம் பெற முடியும். இதில் அதிகபட்சம் 10 ஜிபி வரை பயன்படுத்த முடியும். 10 ஜிபி அளவைக் கடந்த பின் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பி எனக் குறையும்.
இத்துடன் 400 இலவச பிஎஸ்என்எல் அழைப்புகளையும் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை அனைத்து நெட்வர்க் கால்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
BBG ULD 1275 இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தில் நொடிக்கு 4 எம்பி என்ற வேகத்தில் சுமார் 30 ஜிபி இண்டர்நெட் பயன்படுத்த முடியும். 30 ஜிபி பயன்படுத்தியதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பி என்ற வேகத்திற்கு மாறி விடும்.
ரூ.1,275 மதிப்புள்ள இந்தத் திட்டத்தில் இரவு அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகளும் வழங்கப்படுகின்றது. மற்ற அழைப்புகளுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுகின்றது
BBG Combo ULD 1441 பிஎஸ்என்எல் BBG Combo ULD 1441 திட்டத்தில் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தினை பெற முடியும். இதில் மாதம் ஒன்றிற்கு 25 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது, இந்த வரம்பு நிறைவுற்றதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பியாக குறைந்து விடும். மேலும் அனைத்து பிஎஸ்என்எல் எண்களுக்கும் 500 நிமிடங்கள் இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
BBG Super Speed Combo 1745 VDSL மாதம் ரூ.1,745 கட்டணம் வசூலிக்கப்படும் இந்தத் திட்டத்தில் பயனர்கள் நொடிக்கு 8எம்பி என்ற வேகத்தில் சுமார் 40 ஜிபி இண்டர்நெட் பெற முடியும்.
இந்த வரம்பு நிறைவுற்றதும் இண்டர்நெட் வேகம் 1 எம்பியாக குறைந்து விடும். இந்த அன்லிமிட்டெட் திட்டத்தில் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றது
BBG Speed Combo ULD 2295 இந்தத் திட்டத்தில் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தில் 80 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது. இதன் பின் வேகம் 1 எம்பியாகக் குறைக்கப்படும். ரூ.2,295 வசூலிக்கப்படும் இந்தத் திட்டத்தில் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகள் கிடைக்கின்றது
BBG ULD 2645 இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் 175 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தில் வழங்கப்படுகின்றது. பின் இண்டர்நெட் வேகம் நொடிகத்கு 1 எம்பியாக மாற்றப்படும். இந்தத் திட்டத்தில் எவ்வித அழைப்புச் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
BBG Combo ULD 2799 இந்தத் திட்டத்தில் நொடிக்கு 4 எம்பி என்ற வேகத்தில் இண்டர்நெட் சேவையினை 80 ஜிபி வரை வழங்கப்படுகின்றது. பின் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 2 எம்பியாக மாறிவிடும். இதில் 250 பிஎஸ்என்எல் அழைப்புகள் வழங்கப்படுகின்றது. இத்துடன் வாடிக்கைாயன இலவச அழைப்புகளும் பொருந்தும்
BBG Speed Combo ULD 2841 ரூ.2,841 செலுத்தி இந்தத் திட்டத்தை ஆக்டிவேட் செய்யும் போது மாதம் ஒன்றிற்கு 175 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 8எம்பி என்ற வேகத்தில் வழங்கப்படுகின்றது. அதன் பின் வேகம் 1 எம்பியாகக் குறைக்கப்படும். இத்துடன் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது
BBG Super Speed Combo 2845 VDSL சூப்பர் பிராட்பேண்ட் திட்டத்தில் 80 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 16 எம்பி என்ற வேகத்தில் பெற முடியும். பின் வேகம் நொடிக்கு 1 எம்பியாக மாறிவிடும். இத்துடன் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
BBG Super Speed Combo 3445 VDSL இந்தத் திட்டத்தில் நொடிக்கு 24 எம்பி என்ற வேகத்தில் மாதம் முழுக்க சுமார் 80 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது. இதன் பின் வேகம் 1 எம்பியாக குறைந்து விடும். மேலும் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது
 

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா?


இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தூங்கி எழுந்தவுடம் காபி அல்லது டீயில் தான் விழிப்பார்கள். இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய அற்புதங்களை அறிந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். அது என்னவென்று கீழே பார்க்கலாம்.
ஒரு பெரிய டம்ளரில் 300 மி.லி அளவிலான நீர் நீங்கள் எழுந்தவுடன் பருகுவதால் உங்கள் சிறுநீர்கள் அற்புதமான அளவில் நச்சுக்களை வடிக்கட்ட ஆரம்பிக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கும். உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கெமிக்கல்களை நீக்க இது உதவும். ஒட்டுமொத உடல் செயல்திறனை ஊக்குவிக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.
நமது உடலில் படர்ந்து பெரிதாய் இடம் பெற்றிருக்கும் உடல் உறுப்பு சருமம் தான். இதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நீங்கள் சீரான அளவில் நீர் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதை சரியாக பின்பற்றுவதால் சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஒருநாள் நீங்கள் சரியாக நீர் குடிக்காமல் இருந்தாலும், குடல் இயக்க செயற்பாட்டில் தாக்கங்கள் உண்டாகும். இதனால் மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உடனாகும். காலை எழுந்ததும் நீர் குடிப்பதால் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஒரு மாதம் தொடர்ந்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து பாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன அற்புதங்கள் உண்டாகின்றன என்பதை நீங்கள் உணர முடியும்.

Saturday, 1 October 2016

கறிவேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!

      பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
 கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
 கொழுப்புக்கள் கரையும்:
 காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
 இரத்த சோகை:
 இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
 சர்க்கரை நோய்:
 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
 இதய நோய்:
 கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
 செரிமானம்:
 நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
 முடி வளர்ச்சி:
 கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
 சளித் தேக்கம்:
 சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
 கல்லீரல் பாதிப்பு:
 நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். 
 மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை. தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள். குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி


சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேத்துறது தான். ஆனா வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிறது. இதனால் உப்புகள் எல்லாம் சிறுநீரகத்தில் தங்குகிறது இதனால்தான் கல் உருவாகிறது.
நமது இரத்ததில் உள்ள உப்பு சத்து மற்றும் தேவையற்ற பாக்டீரியா நுழைவதை தடுக்கும். இங்கே மிகவும் எளிமையான கிடைக்ககூடிய கொத்தமல்லியை கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க முடியும்
சிறுநீரகத்தில் உள்ள கற்களை எவ்வாறு அகற்றுவது என்பதனை பார்ப்ப்போம்...
கொத்தமல்லி சாறு தயாரிக்கும் முறை:
ஒரு கப் ளவுள்ள கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பிறகு ஆறவைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான பாட்டிலில் ஊற்றி அதனை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.
இதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நாளடைவில் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும். இவ்வாறு தொடர்ந்து குடிக்கும்போது வித்தியாசத்தை நன்கு உணர முடியும்.
அனைவரும் அறிந்த கொத்தமல்லி சிறந்த மருத்துவ மூலிகையாகும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யவதில் இதன் பங்கு அற்புதமானது. மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. நீங்களும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.