ரேஷன் - புகார் எண் அறிவிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத் துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டத்திற்கு 3 தேவைக்கான அரிசி கையில் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், தேவைப்படும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் நியாய விலை அங்காடிகளுக்கு உடனுக்குடன் நகர்வு செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் புகார் அளிக்க வேண்டிய எண்களையும் அறிவித்துள்ளார்.
044 28592828 , 9445190660, 944519061, 944519062
No comments:
Post a Comment