அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கள்ளக் குழந்தையான ஈரான் நாட்டின் மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத்தடை அகற்றப்பட்ட காரணத்தினால் அவர்களும் சந்தையில் கச்சா எண்ணெய் விற்க ஆரம்பித்து விட்டார்கள் . சவூதி அரேபியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா போன்ற நாடுகள் ஈரானிடம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஈராக் , லிபியா போன்ற நாடுகளில் பொய்யான காரணங்களை கூறி படையெடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்த அமெரிக்காவிடமும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது .
எமன் எல்லையில் ஈரான் ஹூசிஈன்களுக்கு ஆயுத உதவிகளை செய்து சவூதிக்கு எதிராக போரை தூண்டிய காரணத்தினால் நாட்டின் பாதுகாப்பு கருதி போருக்காக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது . .......
இது போன்ற காரணங்களினால் இந்த நாடு நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது . இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக விசிட் விசா , பிஸினஸ் விசா , இக்காமா , போக்குவரத்து விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனை பலரும் மிக கடுமையாக விமர்சிக்கின்றனர் .
அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் வழி முறைகளை சரியாக புரிந்தவர்கள் இஸ்லாமிய ஆட்ச்சியாளர்களை விமர்சனம் செய்யமாட்டார்கள். இவ்வாறு விமர்சனம் செய்வது கவாரிஜ்களின் வழிமுறைக்கு ஒப்பானது.
இந்த நாட்டின் மூலம் தனிமனிதர்களும் , இஸ்லாமிய சமூகமும் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எண்ணிலடங்கா பலன்களை அடைந்துள்ளனர்.
இன்பங்களை அனுபவித்தவர்கள் துன்பத்திலும் பங்கெடுக்க வேண்டும். குறைந்த பட்சம் விமர்சிக்காமல் அமைதி காக்கட்டும் . ஷேக் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ் ) கூறினார்கள் இந்த ந்நாட்டிற்கு எதிரானவர்கள் சத்தியத்திற்கு எதிரானவர்கள் , தவ்ஹீதுக்கு எதிரானவர்கள்.
பதிப்புரிமை: நன்றி: யசீர் ஹமீத்
No comments:
Post a Comment