சிலர் வீட்டில் சாப்பிடுவதை விட ஹோட்டல் சாப்பாடுகளை விரும்பி சாப்பிடுவர்.
அவர்களை கவர்ந்து இழுப்பது ஹோட்டல் சாம்பார் தான். அந்த சாம்பார் எப்படி தயார் செய்கின்றனர் என பார்ப்போமா..!
1.துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
2.வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
3.பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி+தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.பின் அரைத்த விழுது +உப்பு+1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5.பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
6.தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.
7.இந்த சாம்பார்இ ட்லி,தோசை,வெண்பொங்கல்,ஊத்தாப்பம் என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு..!
1.சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
2.சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்….! இவ்வளவுதாங்க..
2.சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்….! இவ்வளவுதாங்க..
No comments:
Post a Comment