Friday, 13 May 2016

ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமனம்.

புதுடெல்லி,

  இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் இந்திய வீரர்கள் உள்பட உலகின் பல நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் அணிக்கும் நல்லெண்ண தூதுவர் ஒருவரை அந்தந்த நாடுகளின் பிரபலங்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் இந்திய அணியை ஊக்குவிக்கும் விதமாக நல்லெண்ண தூதுவராக ஏ.ஆர். ரகுமான்  நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் இந்த பொறுப்பில் இருந்துள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது.

No comments:

Post a Comment