காவி விசுவாசமா?? காவி பயமா???
(மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி #கோபால_கவுடா மறுத்துள்ளார். அதற்கான காரணம் எதையும் நீதிபதி கோபால கவுடா கூறவில்லை)
❌ 24 ஆண்டுகள் ஓடி விட்டன. உலகையே குலை நடுங்க வைத்த பாபர் மசூதி இடிப்பைச் செய்தவர்கள் யார் என்பது -கோவணம் கட்டாத கோலி விளையாடும் சிறுவன் கூட அறிந்த சேதியாகும். ஆனால், நம் நாட்டு நீதிமன்றங்களுக்கு மட்டும் தெரியாமல் போனது தான் (#கேவளம்) ஆச்சரியம்.
💥 ஒன்று மட்டும் உண்மை; இந்தப் பிரச்சினையில் குற்றவாளிகள் மட்டும் உரிய தண்டனைக்கு ஆளாகாமல் தப்ப விடப்பட்டு விடுவார்களேயானால், நீதிமன்றத்தின் மீதே மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது முற்றாகவே சீர்குலைந்து போகும்.
✔ இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சாதாரண மானவையல்ல. இந்திய குற்றவியல் சட்டம் 147, 153ஏ, 153பி, 295ஏ, 505, 120பி என்று நினைக்கவே கேவலமான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
☝ குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சாதாரணமானவர்களுமல்ல; பிஜேபியின் உயர் மட்டத் தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 48 பேர்கள் மீது ரேபரேலி சி.பி.அய். நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வன்முறையின் எதிர் விளைவாக மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 247 பேர். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விட்டனர்.
💥 ஆனால் இந்த எதிர் விளைவுகள் கலவரத்திற்கு மூல காரணமாக இருந்த #பாபர்_மசூதி இடிப்புக் #குற்றவாளிகள் மட்டும் #தண்டிக்கப்படவில்லை என்பது கடைந்தெடுத்த மோசடியல்லவா! மும்பைக் கலவரத்திற்கு காரணம் என்று சொல்லி #யாகூப்மேனன் அவசர கதியில் #தூக்கிலிடப்பட்டு விட்டார். அது இன்னும் சர்ச்சையில் தான் இருந்து வருகிறது.
❌ ஆனால், பாபர் மசூதி இடிப்பில், கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட் எல்.கே. அத்வானியோ இந்தியாவின் துணைப் பிரதமராகி விட்டார் முரளி மனோகர் ஜோஷியோ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக அலங்கரித்தார். உமாபாரதியும் மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டு விட்டார்.
📌 நீதிபதி லிபரான் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை பாபர் மசூதியில் குற்றவாளிகள் என்று 68 பேர்களைப் பட்டியலிட்டது. அதில் ம
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயியும் இடம் பெற்றிருந்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயியும் இடம் பெற்றிருந்தார்.
❌ அடேயப்பா, நாடாளுமன்றத்தையே நிலை குலைய வைத்து விட்டனர் பிஜேபி உறுப்பினர்கள்; இத்தகைய #சிகாமணிகள் தான் நாடாளுமன்றத்தை #முடக்கலாமா?, ஜனநாயகக் கடமையை மறக்கலாமா என்று #நீலிக்_கண்ணீர் வடிக்கின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து விட்டு வாஜ்பேயியை எப்படி குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கலாம் என்று இதோபதேசக் கேள்வியை எழுப்புகிறார்கள்???
💥 இந்த வழக்கை விசாரிப்பதில் நீதிபதிகள் தயக்கம் காட்டுகிறார்கள் - நான் விசாரிக்க மாட்டேன்; வேறு அமர்வுக்கு நகர்த்திடுக என்பதெல்லாம், நீதியின் உயர்ந்த தன்மைக்கு உகந்தது தானா?
💥 இப்படி பட்டவர்களை நீதிதுறையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வேண்டும்.
நன்றி : விடுதலை நாளிதழ்

No comments:
Post a Comment