Friday, 8 January 2016

இந்தியாவிற்கு பாதுகாப்பு வழங்குவதே மோடி அரசின் முதல் பணி; முக்தார் அப்பாஸ் நக்வி பேச்சு


11:25 PM | ஜனவரி 08, 2016
பல்கார்,

மகாராஷ்டிராவில் உள்ள பல்கார் மக்களவை தொகுதியில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பேசியவை பின்வருமாறு:-

மக்களை அடிமட்டத்தில் இருந்து ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. தீவிரவாதம் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் அமைதிக்கே மோடி அரசு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment