Monday, 11 January 2016

இந்தியாவில் வருகிற மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது




இந்தியாவில் வருகிற மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று மீண்டும் டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்று ஜாகீர்கான் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை குறித்து கூறுகையில் ‘‘இந்திய துணைக்கண்டத்தில் சுழற்பந்து வீச்சு பெரிய காரணியாக இருக்கும். போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் இந்தியா மற்றும் துணைக்கண்ட அணிகள் பெரிய சவாலாக இருக்கும். இந்தியா இந்த தொடரில் வெற்றி பெற்று இந்திய கொடி பறக்கும் என்பது உறுதி.

டி20 கிரிக்கெட் மிகவும் அற்புதமானது. இது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை கூடுதலாக கொடுக்கிறது. டி20 கிரிக்கெட் வந்தபின் நாம் ஏராளமான மாற்றங்களை பார்க்க முடிகிறது. பேட்ஸ்மேன்கள் மாறுபட்ட அதிரடியாக விளையாட முயற்சிக்கிறார்கள். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச முயற்சிக்கிறார்கள். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது” என்றார்.

No comments:

Post a Comment