Saturday, 30 July 2016

சவுதி-குவைத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு: சுஷ்மா


சவுதி மற்றும் குவைத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சவுதி மற்றும் குவைத்தில் உள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சம்பளமும் வழங்கப்படாததால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இதையடுத்து இந்திய தொழிலாளர்களுக்கு தூதரகம் மூலம் உதவுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் நமது சகோதர சகோதரிகள் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். இதனால் அவர்கள் கடும் துன்பங்களை சந்தித்து வருகிற்னர். குவைத்தில் உள்ள சூழ்நிலை சமாளிக்கக்கூடிய அளவிலேயே உள்ளது. சவுதியில் நிலைமை மோசமாக உள்ளது.
எனவே, வேலை இழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள அதிகாரிகளுடன் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய மந்திரி வி.கே.சிங்கும் சவுதி செல்ல உள்ளார். அங்குள்ள நிலைமையை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய தூதரகம் சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது தொடர்பான புகைப்படங்களும் டுவிட்டரில் வெளியாகி உள்ளன.

மதுரை விமான நிலையத்தில் நடக்கும் அட்டுழியங்கள்!!!

மதுரை விமான நிலையத்தில் நடக்கும் அட்டுழியங்கள்!




காசு பறிக்கும் அதிகாரிகள் என்ற போர்வையில் இருக்கும் திருடர்கள்....
மனிதாபிமானமற்ற மதுரை ஏர்போர்ட் பிச்சைக்கார நாய்கள்...
துபாயில் இருந்து அல்லல் பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு நல்ல கம்பேனி டிவி கூட வாங்க பணம் இல்லாமல், வெறும் கையோடு வரக்கூடாது என்று சைனா டிவி நம்ம ஊரு மதிப்புக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள டிவி ஒன்று வாங்கி வந்த திருச்சியை சேர்ந்த நம் சகோதரிடம்
நம் மதுரை ஏர்போர்ட் பணம் திண்ணி அதிகாரி ரூபாய் 7000 ஆயிரம் கேட்க அவரோ அழுது புலம்பி கெஞ்சி கதறி காழில்விழாத குறையா 2000 அல்லது 3000வரை தருவதாக போரடிப்பார்த்தார்
விட்டானா அந்த வெளிநாட்டு துயரை அறியாத அதிகாரி ரூபாய் 7000 கொடு இல்லை என்றால் விட்டுவிட்டு ஓடு என்றான்
இவரோ பணம் இல்லாமல் உனக்கு இந்த டிவியை தந்துவிட்டு போவதற்கு இங்கேயே
உடைத்துவிட்டு போகிறேன் என்று உடைத்து  எரிந்துவிட்டு வந்துவிட்டார்
இதை நாம் சும்மா விடுவதா அயல்நாட்டில் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள் நம் நாட்டில் நம் பணத்தை சுரண்டுகிறார்கள்
இதே போல் இனியும் நடக்காமல் இருக்க பகிருங்கள் நண்பர்களே
இடம் மதுரை ஏர்போர்ட் spice jet
TV China elockta 250 Dubai money
நன்றி - மதுரை மைந்தன்.மற்றும் மேலப்பாளையம் ஹூஸைன்

கான்பூரில் தன்னுடைய கிட்னியை தமது ஹிந்து தோழிக்கு தானம் செய்த முஸ்லிம் பெண்மனி


கான்பூரில் தன்னுடைய கிட்னியை தமது ஹிந்து தோழிக்கு தானம் செய்த முஸ்லிம் பெண்மனி
தன்னுடைய வாழ்நாளை கூட பொருட்படுத்தாமல் தனது தோழியை வாழ வைத்த  சகோதரி....
மதங்களை கடந்து மனித நேயத்தை போதிக்கும் இஸ்லாம்....

பொது சிவில் சட்டத்தின் சாதக,பாதகங்களை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

பொது_சிவில்_சட்டம்_ஓர்_ஆய்வு
பாகம் -1


பொது சிவில் சட்டத்தை சட்ட ஆனையத்தின் ஆய்வுக்காக ஆளும் மத்திய பாஜக அரசு அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நீண்டகாலமாக சொல்லிவருகிறது.
பொது சிவில் சட்டத்தின் சாதக,பாதகங்களை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
ஆகையால் அதை தொடர் பதிவாக பதிகிறோம் இன்ஷா அல்லாஹ்...
இதை அனைவரும் படித்து அறிந்து கொள்ளுங்கள்...மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..
✍🏿இந்த கட்டுரையை எழுதிய சகோதரர் பிஜே அவர்களுக்கு வல்ல இறைவன் அருள் புரிவானாக...
1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், "பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995  ஜூலை இதழில் பீஜே அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.
ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.
இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும் அரசியல் சாசனத்தின் மேற்கோள்கள், அ.ச. நடராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு, பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள, "இந்திய அரசியல் சாசனம்' (மூன்றாம் பதிப்பு) எனும் நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.    - ஆசிரியர்
#பொது_சிவில்_சட்டம்_ஓர்_ஆய்வு
நாட்டின் உயர்ந்த அதிகார பீடமான உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய உத்தரவு சிறுபான்மை மக்களுக்கு அச்ச உணர்வையும் நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது.
பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலும், அரசியல் சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைக் கண்டு கொள்ளாமலும் தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட நிலையிலும் மேலோட்டமான பார்வையில் கூறப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
வரம்பு ஏதுமில்லாத அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது. அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத் தான் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், "முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்' என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
"அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்'' என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
"குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்'' என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படை.
நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட இந்து, முஸ்லிமாக மாறினால், அது பற்றிய வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், "இனி மேல் இஸ்லாத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று தீர்ப்பு வழங்குவது எவ்வளவு கேலிக்குரியதோ அந்த அளவு கேலிக்குரியதாகவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...

விழிப்புணர்வு பதிவு!!இந்த ஆன்லைன் மோசடியில் நீங்களும் சிக்கியிருக்கிறீர்களா ??


விழிப்புணர்வு பதிவு!!
இந்த ஆன்லைன் மோசடியில் நீங்களும் சிக்கியிருக்கிறீர்களா ??
இன்றைய உலகில் மோசடி என்பது எளிதில் நடக்க கூடிய ஒன்றாக உள்ளது. தினம் தினம் புதிய தொழில்நுட்பம் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். உலகின் பிரபல ஆன்-லைன் நிறுவனமான 'அமேசான்' பெயரில் இணைய மோசடி ஒன்று பிரபலமாகி வருகிறது.
ஸ்மார்ட் போன் என்றாலே அனைவரும் ஒரு நிமிடம் கனவுலகிற்கு செல்வது போல மாய தோற்றம் ஒன்று உருவாகி வருகிறது. இதனை பயன்படுத்தி ஒரு மோசடி கும்பல், தகவல் திருட்டு முதல் பண திருட்டு வரை அனைத்து விதமான DATA (தகவல்கள்) களை திருடி அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.
அப்படி என்ன மோசடி அது? சமீபத்தில் நாம் நிறைய பகிர்ந்து வரும் ஒரு வாட்ஸ் அப் (WhatsApp) மெசேஜ் தான் அது. அதாவது 'அமேசான்' நிறுவனம் ரூ.14999 மதிப்புள்ள சாம்சங் j7 மொபைலை 97% தள்ளுபடியுடன் வெறும் ரூ.499க்கு விற்பனை செய்வதாக அந்த விளம்பரத்தில் உள்ளது. இதனை அனைவரும் ஆவலுடன் கிளிக் செய்தவுடன் நமது ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது பின்னர் இந்த விளம்பரத்தை நமக்கு தெரிந்த 8 பேருக்கு அனுப்ப கோரிக்கை வருகிறது.
இவ்வாறு அனைவரும் செய்யும் பட்சத்தில் ஹக்கர் (Hacker) எனப்படும் தகவல் திருடர்கள், நம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போனை அவர்களது வசதிற்கு கொண்டு செல்கிறார்கள். பின்னர் தினம் தினம் நாம் சேகரிக்கும் நமது தகவல்களாகிய புகைப்படங்கள், வங்கி கணக்குகள் என அனைத்தும் கண்ணாடி போல் அவர்களுக்கு வெளிச்சமாகும். இதனை 'அமேசான்' பெயரில் செய்வதால் அவர்களுக்கு மேலும் நம்பிக்கை பிறக்கின்றது.
பேராசையால் நெருங்கியவர்களுகும், சுற்றதார்களுக்கும் செய்யும் இந்த தவறான ஒரு தகவல் பகிர்வு அவர்களிடம் நாம் நம்மை அடகு வைப்பது போன்றதாகும்.
நன்றி:நியூஸ்7

Friday, 29 July 2016

வரப்போகிறது இந்தியாவிலும் இ பாஸ்போர்ட்:

இந்தியா:

     லோக் சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நாட்டின் வெளிவுறவுத் துறை அமைச்சர் வி்.கே.சிங் அளித்த பதிலில், ''இ-பாஸ்போர்ட்டை நம் நாட்டில் செயல்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது'' என்றார்.
     இ-பாஸ்போர்ட் நம்மை பற்றிய தகவல் சேமித்து வைக்கும் பெட்டகம் போல செயல்படும். போலி பாஸ்போர்ட்டுகளிடம் இருந்து விடுபெற இது உதவும்.
     இ-பாஸ்போர்ட்டுடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டு அதில் நம் பாஸ்போர்ட்டில் அச்சிட வேண்டிய அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் இது கொடுக்கும்.
     மிக விரைவில் குடிமக்களுக்கு இதை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது, இந்திய அரசாங்கம். இதற்கான எலக்ட்ரானிக் சிப்களை தயாரிக்க (ISP) இந்தியா செக்யூரிட்டி பிரஸ்க்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    அறுபது நாடுகளுக்கு மேல் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் இப்பொழுது இ-பாஸ்போர்ட் இந்தியாவிற்கும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source(நன்றி): விகடன்

தமிழகத்தின் பல கோவில்களுக்கு தானமளித்த ஆற்காடு நவாபுகள்!


'முஸ்லிம்கள் இந்துக்களின் கோவில்களை இடித்து பள்ளி கட்டினார்கள்' என்ற பொய்யை பல ஆண்டு காலமாக நாம் படித்து வருகிறோம்.
ஆனால் விஜய் டிவியின் "டிடி"என மக்களால் அழைக்கப்படும் சகோதரி திவ்ய தர்ஷினி அவர்களின் இந்த நிகழ்ச்சி அனைத்து பொய்களையும் சுக்குநூறாக  உடைத்தெறிகிறது.
#முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்...
1.தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் முகமது அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.
2. திருச்சி செய்ன்ட் ஜோஸப் கல்லூரி, பிஷப் கல்லூரி, ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.
3. தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகம் ஆற்காடு நவாபு அவர்களின் சொந்த வீடாகும். அதனையும் தானமாக தந்துள்ளார்.
4. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பக் குளம் ஆற்காடு நவாபால் தானமாக அளிக்கப்பட்டது. வருடா வருடம் இந்த கோவிலில் அவரை அழைத்து முதல் மரியாதை இன்று வரை கொடுத்து வருகின்றனர்.
5. தற்போதுள்ள மெட்ராஸ் யுனிவர்சிடியும் ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.
தங்களின் சொந்த வீட்டையும் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள தங்களின் சொத்துக்களையும் இந்து கோவில்களுக்கும் அரசு கட்டிடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தானமாக கொடுத்தது முஸ்லிம்கள். ஆனால் நமது வரலாறு பாடத் திட்டங்களில் சொல்லிக் கொடுப்பதோ இதற்கு  நேர் மாற்றமாக..உண்மையான வரலாற்றை திரித்து,மறைத்து சொல்லிக்கொடுக்கப்பட்டு,விஷத்தை ஊட்டுகிறார்கள்...
விஜய் டிவியின் டிடி தற்போது ஆற்காடு நவாபுகளின் சரித்திரத்தை பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்களே இது.
ராம கோபாலன்களும், ஹெச் ராஜாக்களும் இந்த உண்மைகளை எல்லாம் படித்து தெளிவு பெறுவார்களாக!
தமிழகம் என்றுமே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் என்பதனையும் இந்துத்வாவாதிகளுக்கு இதன் மூலம் சொல்லிக் கொள்கிறோம்.
நன்றி - சுவனப்பிரியன்

நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்!


இன்றைய மக்கள் தங்களது உடல்ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து, சம்பாதிக்கும் பணத்தை ஆரோக்கியமான உணவுகளுக்கு செலவழிக்கின்றனர். இருப்பினும் இரவில் தூக்கத்தைத் தொலைத்து அவஸ்தைப்படுகின்றனர். உடல் ஆரோக்கியம் என்று வரும் போது நல்ல நிம்மதியான தூக்கம் என்பது அவசியம்.
அதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 6-8 மணிநேர இரவு தூக்கம் என்பது இன்றியமையாதது. அமெரிக்காவில் வாழும் பெரும்பாலானமக்கள் போதிய தூக்கத்தைப் பெற முடியாமல், அதன் காரணமாகவே பல நோய்களால் கஷ்டப்படுகின்றனர். மேலும் இரவில் தூக்கம் வருவதற்காக மாத்திரைகள், மது, பால், சுடுநீர் குளியல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
ஆனால் இரவில் படுத்ததும் தூங்குவதற்கு ஓர் எளிய இயற்கை வழி ஒன்று உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். அந்த வழியைக் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அதன்படி செய்தால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

முதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில் தொட வேண்டும். அதுவும் மேல்வாய் பற்களின் பின்புறத்தை நாக்கால் தொட வேண்டும். இந்த நிலையிலேயே இந்த பயிற்சி முழுவதையும் செய்ய வேண்டும்.
நாக்கை சரியான நிலையில் தொட்ட பின்பு, மூச்சை வாயின் வாயின் வழியாக வெளியேற்ற வேண்டும்.
அடுத்து வாயை மூடிக் கொண்டு, மூக்கின் வழியாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, 7 வரை எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின் மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இது தான் இந்த மூச்சு பயிற்சியின் ஒரு சுழற்சி. இந்த மூச்சு பயிற்சியை இரவில் தூங்கும் முன் தொடர்ந்து 4 முறை செய்து வந்தால், இரவில் படுத்ததும் தூக்கம் வந்துவிடும்.
இந்த மூச்சு பயிற்சியின் போது, மூச்சை எப்போதும் வாயின் வழியாகத் தான் வெளியிட வேண்டும். இந்த முறையால் ஆழ்ந்த நித்திரையை வேகமாக பெறுவதோடு, டென்சன், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன?


வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள் கொண்டுள்ளது.
இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஒட்டத்தை சீராக்குவதில் இருந்து, பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க வைப்பது வரை பல நன்மைகள் தரவல்லது இந்த இயற்கை சிரப்.
இனி, வெங்காயம், தேன் கொண்டு தயாரிக்கப்படும் சிரப்பை எப்படி தயாரிப்பது? இதனை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என பார்க்கலாம்...
வெங்காயம் - 1தேன்
வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்...,
வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J.
மெல்லிசாக வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.ஒவ்வொரு ஸ்லைஸ் வெங்காயத்திலும் தேனை ஒரு டீஸ்பூன் அளவு தெளிக்கவும்.ஒரு ஸ்லைஸ் வெங்காயத்தின் மீது மற்றொன்று என அடுக்கவும்.24 மணிநேரம் இதை ஊறவிடுங்கள்.மறுநாள் நீங்கள் ஊறவைத்த இந்த பாத்திரத்தில் சிரப் போன்ற நீர் தங்கியிருக்கும்.இதை குடித்து வரவும்.தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் சீக்கிரம் குணமடையலாம்.இதில் இருக்கும் ஆண்டி-கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க பயனளிக்கும்.செரிமானத்தை ஊக்கவிக்கும் தன்மை கொண்டது இந்த சிரப்.நீரிழிவுக்கு சிறந்த மருந்து இது. இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவும்.
இருமல் உள்ளவர்கள், இருமலை தடுக்க / குறைக்க ஒரு டீஸ்பூன் இதைக் குடித்து வரலாம்.

இஸ்லாமியர்களின் நலன் நாடும் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ்....

    
  கடந்த ரமலானில் இஸ்லாமியர்களுக்கு பல சலுகைகள அறிவித்து அதை நிறைவேற்றினார்...
அதே போல் கொடுத்த இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றி முஸ்லிம்களின் நலன் நாடும் முதல்வர் என நற்பெயர் எடுப்பார் என முஸ்லிம் மக்களால் எதிர் பார்க்கப்படுகிறது...
மற்ற மாநில முதல்வர்களை விட தான் ஒரு முன்னுதாரனமாக நடந்து கொண்டு நற் பெயர் எடுக்க வேண்டும்...


Thursday, 28 July 2016

சவுதிக்கு உம்ரா யாத்திரை வந்தவர்கள் விசா கெடுவிற்குள் வெளியேற உத்தரவு.

சவுதி 

சவுதிக்கு உம்ரா யாத்திரை வந்தவர்கள் விசா கெடுவிற்குள் வெளியேற உத்தரவு.
SR100,000 fine, Two years’ Jail for Helping Umrah Overstayers:
   சவுதி அரேபியா நாட்டிற்கு சுமார் 6 மில்லியன் புனித யாத்ரீகர்கள் வருகை தந்திருந்த இந்த வருட உம்ரா சீசன் நிறைவுற்றதை தொடர்ந்து அனைத்து உம்ரா யாத்ரீகர்களும் விசா தேதி முடிவு கெடுவிற்குள் சவூதி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.
      விசா முடிந்தும் சட்டவிரோதமாக தங்கும் நபர்களுக்கு அடைக்கலம் தரும் அனைவருக்கும் 1 லட்சம் சவூதி ரியால் வரை அபராதத்துடன் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், சட்ட விரோத அடைக்கலம் தருபவர் வெளிநாட்டு பிரஜையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை காலத்திற்குப் பிறகு அவரது நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்றும் சவூதி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.
    நோயாளிகள் தகுந்த ஆவணங்களை வழங்கினால் மட்டுமே அவர்களது விசா காலம் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் காலம் வரை நீட்டிக்கப்படும் எனவும் விளக்கப்பட்டுள்ளது.
    With the end of the Umrah season, the Passport Department has advised pilgrims to return home on schedule and warned that all those who give shelter to the overstayers will be subject to a fine up to SR100,000, jail for two years and will be deported if they are expats.
Around six million pilgrims visited the holy cities of Makkah and Madinah during this season.
Maj. Talal Al-Shalhoub, spokesman of the Passport Department said on Monday that the pilgrims are expected to return to their respective home countries before the end of the visa period.
Al-Shalhoub said residents and citizens should be aware of their obligations toward the state. Providing accommodation for Umrah overstayers or keeping them in safe place to avoid hands of law is an offense under the Saudi law.
“Citizens and residents will be held accountable for such offenses,” he stressed.
The spokesman also pointed out that Umrah pilgrims who over stay their visas in the Kingdom due to medical reasons will be considered for extension of visas provided their reasons are genuine. Arrangements have to be made for their return as and when the period of illnesses are over, he added. He said the Passport Department coordinates with all relevant government agencies in facilitating the return of the pilgrims to their respective countries of origin.
It is said overstayers can destabilize the security and destroy the economy of the country.
If a large number of them were to overstay their visas, they would start looking for jobs and they would be willing to do jobs for which they have no skills. They will compete with expatriate workers who enter the country legally. The overstayers will send all of the monies they earn back to their home countries.
With regard to security destabilization, the authorities do not have any reliable information about overstayers and where they live because they do not have resident permits. If an overstayer commits a crime, it is difficult to catch him because his whereabouts are unknown.
Source: #Arab_News
Dated: 27.07.2016

சேக்தாவூத் மீது நடவடிக்கை எடுக்க கோரும் தமிழ்நாடு முஸ்லிம்லீக்….


சட்டமன்றதேர்தலில் சீட்டு,அரசாங்க வேலை, மருத்துவகல்லூரி சீட்டு வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி இருப்பதாக தமிழ்மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் சேக் தாவூத் மீது தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அந்த கட்சியின் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது கட்சயின் சார்பில் பார்ட்டுகளை தெரிவிப்பதாக கூறினார். உலமாக்களின் ஓய்வூதியத்தை 1000 ரூபாயில் இருந்த 1500 ஆக உயரத்தி வழங்கிய முதலமைச்சர் ஜெயல்லிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறினார். ரமலான் காலங்களில் 3000 பள்ளிவாசல்களுக்கு 4ஆயிரத்து 600 மெட்ரிக் டன் அரிசியை வழங்கும் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக அயராது பாடுபட இருப்பதாகவும் முஸ்தபா கூறினார். அதிமுகவின் ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் மூலம் நாடு முழுவதும் சென்று பரப்புரை செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார.மேலும் கடந்த காலங்களில் அதிமுக அரசின் பெயரை பயன்படுத்தி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூது மீது பலர் காவல்துறையில் புகார் அளித்து இருப்பதாகவும் அவர் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திருப்பூரில் பள்ளிவாசலை மூட வேண்டும் இல்லை என்றால் இழுத்து பூட்டுவோம் - இந்துத்துவ தீவிரவாதிகள் & மாவட்ட நிர்வாகம்.


திருப்பூரில் இந்துத்துவ அமைப்புகள் தூண்டுதலின் பெயரில் பள்ளிவாசலை வெள்ளி கிழமை இழுத்து மூட வேண்டும் இல்லை என்றால் பூட்டுவோம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு !!

திருப்பூரில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பள்ளிவாசல்களை இந்துத்துவ அமைப்புகள் குறி வைத்து மூட வேண்டும் என்ற வேலையை செய்து வருகிறது இதற்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகிறார்கள் ஏற்கெனவே திருமுருகண் பூண்டி , குருவாயுரப்பன் நகர் , செஞ்சி தோட்டம் என தொடர்ந்து தற்போது 15 வேலம்பாளையம் பகுதியில் மகா லட்சுமி நகர் பள்ளிவாசல் கடந்த ஐந்து வருடங்களுகாக நடந்து வருகிறது எந்த இடைஞ்சல் இல்லாமல் இதை தொடர்ந்து அது முறையாக வக்பு செய்ய பட்டு உள்ளது இப்போது !!
இந்து முண்ணனி தூண்டதல் பெயரில் குடியுருப்போர் சங்கம் என்ற பெயரில் பள்ளி வாசல் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளது இதன் தீர்ப்பு கடந்த மாதம் கொடுக்க பட்டது அதில் என்ன அனுமதி வாங்க பட்டதோ அதற்கு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட பட்டுள்ளது ஆனால் மாநாகராட்சி பல முறை பள்ளிவாசல் நிர்வாகிகள் அனுமதி கோரியும் வழங்க வில்லை இதை தொடர்ந்து கடந்த வாரம் ஆர் டி ஓ பள்ளியை மூட வேண்டும் என கூறி வந்ததை அடுத்து இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக எஸ் டி பி ஐ அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு பொது மக்கள் என கூடி பெரிய பதற்றத்தை தொடர்ந்து அதிகாரிகள் இஸ்லாமிய நிர்வாகிகளை அழைத்து நீங்கள் முறையாக நீதிமன்றம் மூலம் அணுகி ஒரு தீர்ப்பு பெறுங்கள் அது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என உறுதி அளித்தனர் !!
அதற்கு பின்னர் நீதிமன்றம் மாநகராட்சி என படி படியாக நடவடிக்கைகள் எல்லாம் பள்ளி நிர்வாகமும் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் எடுத்து கொண்டு இருக்கும் போது திடீரென இரண்டு நாட்கள் முன் இந்து முண்ணணி அதிகமாக ஆட்களை திரட்டி கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று பள்ளிவாசலை உடனடியாக மூட வேண்டும் என மனு அளித்து உள்ளனர் பின்னர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது வழக்கு போட்டுள்ளனர் இதை அடுத்து நேற்று இரவு மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிவாலுக்கு நோட்டிஸ் கொடுத்து உள்ளனர் அதில் வெள்ளி கிழமைக்குள் பள்ளிவாசலை மூட வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சி மூடும் என்று கூற பட்டுள்ளது இதனை தொடர்ந்து !!
அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் தலைவர் மஜித் தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக எஸ் டி பி ஐ ஜமாத்தே இஸ்லாமி ஜமாஅத்துல் உலமா என அனைத்து இஸ்லாமிய அமைப்பு கட்சிகளின் நிர்வாகிகள் கூடி தொடர்ந்து திருப்பூரில் பள்ளிவாசல்கள் மீது அவதூறு கூறி முடக்க நினைக்கும் இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து வெள்ளி கிழமை மாலை இன்சா அல்லாஹ் 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்ய பட்டுள்ளது !!
நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை ஆணை வாங்குவது தொடர்பாக இன்று அல்லது நாளை தடை ஆணை பெறும் பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது !!
அல்லாஹ்வின் பள்ளியை காக்க இன்னொரு பாபர் மசுதியை இழக்காமல் இருக்கு நம் உரிமையை பெற ஒன்று கூடுவோம் திருப்பூரில் இன்சா அல்லாஹ் !!

துபாயில் நோல் கார்டுகளை பயன்படுத்தி பூங்கா அருங்காட்சியக நுழைவு_கட்டணம் செலுத்தலாம்:

துபாய்:

      துபாயில் சாலை மற்றும் போக்குவரத்துத்துறையின் (RTA) கீழ் இயங்கும் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், தண்ணீரில் செல்லும் பேருந்து வகை படகுகள் (Water Buses), டேக்ஸிகள், வாகன நிறுத்தம் (Vehicle Parking) என அனைத்திற்கும் ஓரே நோல் கார்டுகள் (NOL Cards) மூலம் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறையிலுள்ளது. இது மேலும் பல்வேறு சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் நோல் அட்டைகள் வரும்காலத்தில் மின்-பணப்பையாக (e-wallet) மாற்றத்தக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
     தற்போது நோல் கார்டுகளை கொண்டு பூங்கா (Parks) மற்றும் அருங்காட்சியக (Museum) அனுமதி சீட்டுக்களை பெறவும், வாகனங்களுக்கு உள்ளது போல் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நோல் அட்டைகள் என்றில்லாமல் ஒரே அட்டையை கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் அதற்குத் தேவையான முன்பணம் நிரப்பப்பட்டிருக்க (Prepaid) வேண்டும் எனவும் துபை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு நுழைவு வாயில்கள் (Smart Gates) ஏற்படுத்தப்படும்.
     மேலும், சுமார்ட் துபை (Smart Dubai) திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மின்-சேவை (e-services) திட்டங்களும் மொபைல் சேவை (Smart Services) திட்டங்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 351 மின்-சேவைகளில் 204 சேவைகள் மொபைல் சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Source: Gulf News

இலங்கையில் முதல் முறையாக முஸ்லீம் பெண் விமானி! வாழ்த்துவோம் சகோதரியை!

இலங்கை, 
காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் இலங்கையின் "முதல் முஸ்லிம் பெண் விமானியாவார்" 
முயற்சியில் முதற் கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்) இல் இனைந்து ஒரு வருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார். 
கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார் நேற்று சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். 

Wednesday, 27 July 2016

கடலின் நட்ட நடுவில் ஒரு நாடு நம்ப முடியுமா..? உள்ளே சென்று பாருங்கள் நம்பலாம்.


நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை; இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்.
இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு. இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?
அப்படி அந்தப் போர் தொடங்கியபோது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது. கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள். போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். 1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்.
இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார். அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.
கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது. ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போனபோது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள்.
1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை. சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார். தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.
ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக்கொண்டுதான் வர வேண்டும்.

இஸ்லாமிய பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்கலவையில் கடும் அமளி...


மத்திய பிரதேசத்தில் ரயில்வே நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மத்திய பிரதேசத்தில் மண்ட்சவுர் ரயில்வே நிலையத்தில் இரண்டு இஸ்லாமிய பெண்கள் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக கூறி அவர்கள் மீது இந்து தல் என்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, இஸ்லாமிய பெண்கள் தொடர்பான தாக்குதல் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டார். ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக மத்தியப்பிரதேச மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் நக்வி நம்பிக்கை தெரிவித்தார். 
இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் வைத்திருந்தது எருமை இறைச்சி தான் என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் புபீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய உறுதி அளித்தார். 

கோமாதாவுக்கு ஜே என்று கத்தியபடி 2 முஸ்லீம் பெண்களை சரமாரியாக உதைத்த கும்பல்..!


மண்டசூர், மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டுக் கறியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீஸாரின் செயலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதை வேடிக்கை பார்த்த பொதுமக்களும் தடுக்க முயலாமல் செல்போனில் படம் எடுத்தபடி இருந்தனர். போலீஸாரோ அரை குறை மனதுடன் தாக்கியவர்களை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால் பல சமயங்களில் அவர்கள் வேடிக்கை பார்த்தபடி சும்மாவே நின்றிருந்தனர். இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அந்தப் பெண்களை காலால் உதைத்தும், கையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் மோசமாக நடந்து கொண்டது.
அந்த இரு பெண்களும் விற்பனை செய்வதற்காக 30 கிலோ மாட்டுக் கறியுடன் ரயிலில் வந்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு சிலர் பசு கறியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக போலீஸார் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டனர்.
விடாமல் தாக்குதல்
போலீஸார் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றபோதும் கூட அக்கும்பல் அப்பெண்களை தொடர்ந்து விடாமல் தாக்கிய வெறித்தனம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கோமாதாவுக்கு ஜே
தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி கோஷமும் போட்டபடி தாக்கினர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த அராஜக தாக்குத் நடந்தது.

உடற்பயிற்சியில் நடைபயிற்சி சிறந்தது.


உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
1. நடக்கும் போது, ஒரு பக்கம் தலைய சாச்சி கிட்டு, செல்போன்ல பேசிகிட்டு நடக்க வேண்டாம். முடிந்தால் செல்போனை வீட்டுல வச்சிட்டு வாங்க. தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து, கைவீசம்மா கைவீசு என்று நடக்க வேண்டும்.
2. சரியான நடைப்பயிற்சியில் வியர்ப்பது இயல்பு. எனவே இறுக்கமான, பாலியெஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்து போகாமல், வியர்வையை உறிஞ்ச ஏதுவாக, தள‌ர்வான காட்டன் ஆடைகளை அணியவும்.
3. கால்களை மூடும் விதமாக, மென்மையாக பாதங்களை இறுக்காமல் ஷீ அணிந்து கொள்வது நல்லது.
4. மூளையில் ஏற்படும் செரோடினின் பகிர்ந்தளிப்பு, உடலில் என்சைம்களின் சுரப்பு…உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இதயத் துடிப்பு சீராகி, ப்ரோஸ்டோகிளான்டின்களின் சுரப்பு மூலம், மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகேஷன் கிடைத்து, தசைகளின் இலகுவாகி, உடலுக்கு தேவையான சக்தி சேமித்து வைக்கப்பட்டுள்ள கார்போஹைட்ரேட்டிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
5. பிரிஸ்க் வாக் மூலம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த ஓட்டம் மூலம் ஆக்சிஜன் சுழற்சி ஏற்பட்டு, சுமார் 6 கலோரிகள் செலவழிக்கப்படுகிறது.
6. முதல் 5 நிமிடங்களில் உடலுக்கு உற்சாகம், 10 முதல் 20 நிமிடங்களில் உடல் வெப்பமடைதல், தோலுடன் சேர்ந்துள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வெப்பம் வெளியேறி, உடல் வியர்க்க துவங்கும். சக்தியளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு, சுவாசம் அதிகரிப்பு நடைபெறும்.
7. சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் உடல் லேசாகி, கொழுப்பு சத்து எரிந்து, இன்சுலின் சுரப்பு சீராகும்.
8. ஒரு மணி நேரத்தில், நமது நடையின் வேகத்தை குறைக்க, இதயத் துடிப்பு சீராகி, வியர்வைகள் அடங்கி, அதன் பின்னரும் ஒருமணி நேரம் கலோரிகள் செலவாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை.
9. அதிக பருமனானவர்கள், இதயம் பலகீனமானவர்கள், ஆஸ்துமா பிரச்சினைகள் உள்ளவர்கள், எலும்பு மற்றும் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்….அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை பெற்று நடைபயிற்சியை தொடரலாம். 

சிக்கன் சாப்பிடுவதால் வரும் சிக்கல்கள்.


குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பும் உண்ணும் உணவு சிக்கன். சிக்கனை அதிகம் சாப்பிடுவதால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.
கடைகளில் ‘லாலிப்பாப்பு’க்கு அடம் பிடிக்கும் குழந்தைகள் ஓட்டலிலும் ‘லாலிபாப்’ கேட்டு அடம் பிடிப்பதை பார்க்க முடியும்.
கோழி இறைச்சியை லாலிபாப் மிட்டாய் வடிவில் தயாரித்து வழங்குகிறார்கள். முள் இல்லாமல் சாப்பிட பஞ்சுபோல் இருக்கும் இந்த வெரைட்டிக்குத்தான் குழந்தைகள் அடம் பிடிக்கும்.
குழந்தைகள் மட்டுமல்ல எல்லா வயதினரையும் கவரும் வகையில் ஒரு சிக்கனை 20க்கும் மேற்பட்ட வகைகளாக ஓட்டல்களில் தயாரித்து விடுகிறார்கள். 
சிக்கன்65, சில்லிசிக்கன், கார்லிக்சிக்கன், பட்டர்சிக்கன், பெப்பர்சிக்கன், சிக்கன் மஞ்சூரியன், நாட்டிசிக்கன், சிக்கன் ரோல், சிக்கன் கறி, செட்டிநாடு சிக்கன், சிக்கன் கபாப்,கேரளசிக்கன் ரோஸ்ட், சிக்கன் தவா, சிக்கன் வறுவல், சிக்கன் பொரிப்பு, கறிவேப்பிலை சிக்கன், சிக்கன் பரத்தா, லெமன் பெப்பர் சிக்கன் , ஸ்காலியன் சிக்கன், தந்தூரிசிக்கன்.... இன்னும் பல!
அசைவ உணவு பிரியர்கள் ஓட்டல்களில் மெனு கார்டை பார்த்து ஆர்வத்துடன் வகை வகையாக ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடுவதுண்டு. மக்களின் சிக்கன் ஆர்வத்தை பார்த்து ‘கேஎப்சி’ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் கால்பதித்து விட்டன. நம்ம ஊரு நாட்டுக்கோழியை அதற்குரிய மசாலாக்கள் போட்டு சமைத்தால் நாலு ஊருக்கு இறைச்சி வாசனை சும்மா தூக்கும்! அதேதான் ஆட்டிறைச்சியும்! ஆனால் இப்போது கொழுப்பு அதிகம் என்று அதை கைவிட்டுவிட்டோம்.
பிராய்லர் சிக்கன் அப்படி அல்ல. கடித்தால் எலும்புகளும் கீரைத்தண்டுகள் போல் இருக்கிறது. இறைச்சியும் பஞ்சு மிட்டாய் போல் தான் இருக்கிறது. அதனால் அதன் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகம். சுவையூட்டிகள் சேர்ந்து சுவையும் அதிகரிப்பதால் ‘சிக்கன்’ சுண்டி இழுக்கிறது.
குறைந்த முதலீடு, நல்ல வருமானம் என்பதால் பிராய்லர் வளர்ப்பும் அமோகமாகி வருகிறது. இந்தியாவில் சுமார்16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழிலாக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் டன் சிக்கன் சாப்பிடுவதாக புள்ளி விபரம் கூறுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இது குறைவு தான்.
ஆனால் சிக்கன் சாப்பிடுவதால் பல சிக்கல்கள் வருகிறது என்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது. பிராய்லர் வளர்ப்பில் ‘ஸ்டிராய்’ என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு கேடு விளைவிப்பவை.
கோழிகள் விரைவில் வளர வேண்டும் என்பதற்காக இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சராசரியாக 28-ல் இருந்து 45 நாட்களுக்குள் பிராய்லர் கோழிகள் அசுரவளர்ச்சி அடைந்து இறைச்சிக்கு தயாராகிவிடுகிறது. அதற்கு மேல் கோழிகளை வளர்த்தால் நஷ்டம் தான் ஏற்படும் என்கிறார்கள். மருந்தால் மகத்தான வளர்ச்சி அடையும் இந்த கோழி இறைச்சியை சாப்பிடுவது உடல்பருமனை ஏற்படுத்துகிறது. உடலின் வழக்கமான இயக்கதன்மையை மாற்றுகிறது. இதனால் உடலில் பல கோளாறுகள் உருவாக காரணமாகிறது. முக்கியமாக பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைவதற்கும் காரணமாக இருக்கிறது.
வழக்கமாக கோழிகள் இறைச்சி பருவத்தை அடைய 3 முதல் 5 மாதம் ஆகும். ஆனால் விரைவான மகசூலுக்காக உணவு முறை, வேதிப்பொருள் ஊட்டல்போன்ற முறைகளை கையாள்கிறார்கள். கோழிப்பண்ணைகளின் வளர்ச்சியும் அவசியம். அதைவிட மக்கள் உடல் நலம் மிக முக்கியம்.
இதை கருத்தில் கொண்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கோழி வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி ஆய்வு செய்து பிராய்லர் வளர்ப்பில் புதிய முறைகளை புகுத்தலாம். மக்கள் விரும்பி சாப்பிடும் உணவால் மக்களின் உடலுக்கு ஆபத்து அதிகரித்தால் மக்கள் திரும்பி பார்க்காமல் செல்லும் காலம் வந்துவிடும். எனவே மக்கள் மீது அக்கறையும், கோழி வளர்ப்பில் கவனமும் அவசியம்.

குழந்தைகளை குறிவைக்கும் போதை சாக்லெட்...உஷார்.


குழந்தைகளுக்கு சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.
ஒரு சிட்டுக்குருவியின் முன்னால் நாலைந்து தங்க மோதிரங்களையும், சிறிது தானியங்களையும் வீசி எறிந்தால், அது தானியங்களின் பக்கம்தான் திரும்பும்.
நமக்கு வேண்டுமானால் தங்க மோதிரம் பெரிதாக இருக்கலாம். ஆனால் சிட்டுக்குருவிக்கு தங்க மோதிரம் ஒரு பொருட்டே அல்ல; அதற்கு தேவை தானியம். அதுதான் அதற்கு உணவு.
இதேபோல் தேவைகள், விருப்பங்கள் என்பது உயிரினங்களுக்கு இடையே மட்டுமின்றி, மனிதர்களுக்கு இடையேயும் மாறுபடக்கூடியது.
குறிப்பாக வயதுக்கு ஏற்ப தேவைகளும், விருப்பங்களும் மாறுபடுகின்றன. 8 வயது சிறுமியை கடைக்கு அழைத்துச் சென்று உனக்கு தேவையானதை வாங்கிக் கொள் என்றால், அவளுடைய முதல் தேர்வு சாக்லெட் ஆகத்தான் இருக்கும்.
ஏனெனில் சாக்லெட் குழந்தைகளின் விருப்பமான தின்பண்டம். சாக்லெட்டை பிடிக்காத சிறுவர்-சிறுமிகளே கிடையாது. இதனால்தான் உணவுப்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சாக்லெட்டுகளை விதவிதமான வடிவங்களிலும் வண்ணங்களிலும், சுவைகளிலும் தயாரிக்கின்றன.
சாக்லெட்டுகள் மீதான குழந்தைகளின் இந்த மோகத்தை சிலர் தங்கள் வியாபார உத்திக்காக தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.
சாக்லெட்டுகளில் கஞ்சா போன்ற போதை வஸ்துகளை கலந்து விற்பனை செய்து, சிறுவர்களை அதற்கு அடிமை ஆக்குகிறார்கள்; நாட்டின் வருங்கால தூண்களை நாசமாக்குகிறார்கள்.
இந்த போதை சாக்லெட் விவகாரம் சமீபத்தில் தமிழகத்தை உலுக்கி எடுத்துவிட்டது. பள்ளிக்கூட மாணவர்களை குறி வைத்தே இந்த வகை சாக்லெட்டுகள் விற்கப்படுகின்றன.
சென்னை நகரில் சில பள்ளிக்கூடங்களின் அருகே உள்ள கடைகளில் கஞ்சா அல்லது போதை மருந்து கலந்த சாக்லெட்டுகள் விற்கப்பட்டதும், அவற்றை மாணவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததும் சமீபத்தில் அம்பலமானது.
கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மூளை நரம்புகளை கடுமையாக பாதிக்கும். போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதில் இருந்து மீள்வது கடினம். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவேண்டும்.
குழந்தைகள் நாட்டின் வருங்கால தூண்கள். அவர்கள் சாக்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கலந்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை அரசாங்கம் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது. 
இந்த போதை சாக்லெட்டுகள் பற்றி குழந்தைகளுக்கு சரிவர தெரிவதில்லை. வழக்கமாக சாப்பிடும் தின்பண்டம் போல் இந்த சாக்லெட்டுகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் இவை வீட்டில் பயன்படுத்தப்படும் சர்க்கரை மற்றும் மென்டால், குளுக்கோஸ், கலர் பொடி ஆகியவற்றுடன் போதை வாஸ்துகள் சேர்க்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது.
இதுபோன்று போதை தரக்கூடிய சாக்லெட்டுகளை வாங்கி சாப்பிடுவதால் மாணவ-மாணவிகளுக்கு ஒருவித மந்த நிலை ஏற்படும். சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டு வாந்தி, பேதியும் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் மனவளர்ச்சி குன்றவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதோடு அவர்கள் தவறான வழிகளில் செல்ல நேரிடும்.
எனவே பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது பணம் கொடுப்பதை (பாக்கெட் மணி) முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே நல்ல சத்தான தின்பண்டங்களை பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பவேண்டும். கூடுமானவரை சாக்லெட் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் அழுது அடம்பிடித்து கேட்கும்பட்சத்தில் நல்ல தரம்வாய்ந்த கம்பெனியின் சாக்லெட்டுகளை வாங்கிக்கொடுங்கள். அவ்வாறு சாக்லெட் வாங்கும்போது தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனமாக பார்த்து வாங்குங்கள். அதற்கும் மேலாக சாக்லெட்டுகளில் அதிக நிறமேற்றப்பட்டிருந்தால் அதை வாங்காதீர்கள்.
சில வகை சாக்லெட்டுகளில் ஆங்கிலத்தில் ‘பான்கேன்டி’ என எழுதப்பட்டு இருக்கும். அப்படி எழுதப்பட்டு இருந்தால் அது போதை சாக்லெட் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அப்படி இல்லையெனில், அந்த சாக்லெட்டை நுகர்ந்து பார்க்கும்போது போதை பாக்கு வாசனை தெரியும். அதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். இதுபற்றியெல்லாம் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.
பொதுவாக குழந்தைகள் சாக்லெட்டுகளை விரும்பி கேட்கும்போது பெற்றோர்களும், உறவினர்களும் அந்த சாக்லெட்டின் காலாவதி காலம், அந்த சாக்லெட் தரமானதுதானா? என்பதையெல்லாம் பார்க்காமல் வாங்கிக் கொடுக்கின்றனர்.
காலாவதியான சாக்லெட்டை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அது தெரியாமல் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவத்துக்காக பணத்தை வீணாக செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இனிப்பான எல்லா பண்டங்களும் குழந்தைகளுக்கு பிடிக்கும். அது உடலுக்கு நல்லதா? அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியதா? என்று அவர்களுக்கு தெரியாது. எனவே குழந்தைகளுக்கு சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் கட்டுமானப்பணி, ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல இடங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வட மாநில தொழிலாளர்களின் வருகைக்கு பிறகு நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் புகையிலை பொருட்கள் கிடைக்கின்றன.
கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் வரும் புகையிலை பொருட்கள் தெருக்களில் உள்ள சாதாரண பெட்டிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் கிடைப்பதால் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் புகையிலை பழக்கத்திற்கு மட்டுமில்லாமல் கஞ்சா, போதை சாக்லெட் போன்றவற்றுக்கும் அடிமையாவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

Tuesday, 26 July 2016

Google Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்! எதற்கு தெரியுமா?


கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப்படும் ஆப்ளிகேஷன்களின் அளவை குறைக்க கூகுள் புதிய வழிமுறையை (algorithm) கொண்டு வந்துள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் உள்ள பிளே ஸ்டோரில் பதிவேற்றப்படும் ஆப்ளிகேஷன்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு வரை 64 பில்லியன் ஆப்ளிகேஷன்கள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பெரிய அளவிலான ஆப்ளிகேஷன்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதால், பதிவிறக்கம் செய்யப்படும் போது கடினமாக இருக்கும். இதனால் இந்த அளவை குறைக்கு முயற்சியில் கூகுள் களமிறங்கி உள்ளது.
இதற்காக ஒரு புதிய algorithm ஒன்றை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் ஆப்ளிகேஷன்களின் அளவை குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
bsdiff என பெயரிடப்பட்டுள்ள இந்த algorithm கொண்டு குறைந்த அளவில் ஆப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது, பதிவிறக்கம் செய்யும் போது பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ளிகேஷன்கள் பாதியாக குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தொழிநுட்பம் முழு ஆப்ளிகேஷனில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், சிலவற்றை மட்டுமே அப்டேட் செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!


உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது.
எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் நன்மைகள் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதன் நன்மைகள் தெரிந்தால், நீங்கள் எலுமிச்சையின் தோலை தூக்கிப் போடமாட்டீர்கள். சரி, எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெறுவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.
எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வாருங்கள். கீழே அந்த எலுமிச்சை தண்ணீரின் செய்முறை மற்றும் அதில் உள்ள நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எலுமிச்சை - 6தண்ணீர் - 1/2 லிட்டர்தேன் - தேவையான அளவு

* முதலில் எலுமிச்சைகளை பாதியா வெட்டிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த நீரை 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, 10-15 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அந்நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய டம்ளரில் அந்நீரை ஊற்றி, அத்துடன் தேன் கலந்து பருக வேண்டும்.
* எஞ்சிய நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, மற்ற வேளைகளில் பருகலாம்.

இந்த எலுமிச்சை நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலின் நோயெர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

நீங்கள் மிகுந்த சோர்வை உணர்பவராயின், தினமும் காலையில் எழுந்ததும் இந்த எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் பருகுங்கள். இதனால் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

செரிமான பிரச்சனைகள் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் அதை சரிசெய்யும் மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

தினமும் காலையில் எலுமிச்சை நீரைக் குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

முக்கியமாக எலுமிச்சை நீர் உடலின் pH அளவை நிலைப்படுத்தும்.

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, இது ஓர் அற்புதமான பானம். காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதற்கு பதிலாக, இந்த எலுமிச்சை நீரைப் பருகி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நீங்கள் மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் உங்களின் மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும்.

இந்த எலுமிச்சை நீரை மீண்டும் சூடேற்றிப் பருகலாமா என்ற சந்தேகம் எழும். நீங்கள் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் மிகவும் குளிர்ச்சியான நிலையில் பருகாதீர்கள். ஒருவேளை வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பின் பருகுங்கள்.

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்: சவுதியில் ஜாகீர் நாயக் பேட்டி.

ஜெட்டா: 

பதிவு: ஜூலை 25, 2016 22:18
தீவிரவாத்தை ஊக்குவிப்பதாக விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், சவுதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
மீடியாக்கள் தான் என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வர பயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்திய அரசு அதிகாரிகூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை. 
நான் எப்போதும் வன்முறையை தூண்டும் பேச்சு பேசியது கிடையாது. எப்போதும் மனித நேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன். இந்திய ஊடகங்கள் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கின்றன. பிரதமர் மோடி இந்து-முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்றால், நான் அதில் முழுமையாக செயல்பட தயார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவம்; பொருளாதார சீர்திருத்தத்தை பாதித்தது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை.


புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை கடுமையாக பாதித்தது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்படும் சமூக ரீதியான பதற்றங்கள் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை பாதிக்கும். எனவே தற்போதைய அரசு தனது கொள்கைகளில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், நாட்டில் அர்த்தமுள்ள பொருளாதார மாற்றங்களை செய்ய வேண்டுமானால், சமூக அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்பது முன் நிபந்தனையாகும். 
எந்த வித சமூகரீதியான பதற்றங்களும் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை கடுமையாக பாதிக்கும். நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார புள்ளி விவரங்களில் மட்டும் இல்லை. சமூக நல்லிணக்கத்தின் மேம்பாட்டிலும் உள்ளது என்றார். இன்றைய திறந்த பொருளாதாரத்திற்கு இந்தியாவுக்கு வித்திடக் கூடிய பட்ஜெட்டை கடந்த 1991ம் ஆண்டு மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். ஆனால் கடந்த 1992ம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை உருவாக்க முடியாமல் தடுத்து விட்டது என்று வேதனை தெரிவித்தார்.
பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள், சமூக பதற்றங்கள் ஆகியவை நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கின. இதுகுறித்து மன்மோகன் சிங் மேலும் கூறுகையில், 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் அத்வானி தலைமையில் நடைபெற்றது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. நாட்டின் சமூக நல்லிணக்கம் குலைய அது காரணமாக அமைந்து விட்டது. இதனால் பொருளாதார ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்ல முடியாத சூழல் உருவானது என்று மன்மோகன் சிங் வேதனை தெரிவித்தார். 
1984ல் ராஜிவ் வெற்றியின் போதுதான் காங்கிரஸ் மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இது நாட்டில் பல்வேறு மாற்றங்களையும் செய்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது என்றும் அவர் சுட்டி காட்டினார்.

தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்..ஏ- களின் தொலைப்பேசி மற்றும் அலைபேசி எண்கள் மற்றும் மெயில் ஐடி உங்கள் பார்வைக்கு !!


உங்கள் ஊர் எம்.எல்.ஏ செல் எண் மெயில் ஐடி
Consitition No. Constituencies Name Member Name Party Contact No. Email Id
1 Gummidipoondi Thiru K.S. Vijaya Kumar AIADMK 94452 79999mlagummidipoondi@tn.gov.in
2 Ponneri (SC) Thiru P. Balaraman AIADMK 93826 98074mlaponneri@tn.gov.in
3 Tiruttani Thiru P.M. Narasimhan AIADMK
94433 86356mlatiruttani@tn.gov.in
4 Thiruvallur Thiru V.G. Raajendran DMK 98410 37747 044-24475556mlatiruvallur@tn.gov.in
5 Poonamallee (SC) Thiru T.A. Elumalai AIADMK 96006 27999 97509 76555mlapoonamallee@tn.gov.in
6 Avadi Thiru K. Pandiarajan AIADMK 98408 79559mlaavadi@tn.gov.in
7 Maduravoyal Thiru P. Benjamin (Hon. Minister) AIADMK 9884 995440mlamaduravoyal@tn.gov.in
8
Ambattur Thiru V. Alexander AIADMK 98410 33211mlaambattur@tn.gov.in
9
Madavaram
Thiru S. Sudharsanam
DMK
94440 16596
99400 16596
044-25531222
044-25531333
mlamadavaram@tn.gov.in
10
Tiruvottiyur
Thiru K.P.P. Samy
DMK
94440 35377
mlatiruvottiyur@tn.gov.in
11
Dr. Radhakrishnan Nagar
Selvi J Jayalalithaa
(Hon. Chief Minister)
AIADMK
044-24991222
mladrradhakrishnannagar@tn.gov.in
12
Perambur
Thiru P. Vetriivel
AIADMK
98417 21234
mlaperambur@tn.gov.in
  
13
Kolathur
Thiru M.K. Stalin
(Hon. Leader of the Opposition)
DMK
8220034343
044-24356600
mlakolathur@tn.gov.in
14
Villivakkam
Thiru B. Ranganathan
DMK
98400 22088
044-26701133
mlavillivakkam@tn.gov.in
15
Thiru-Vi-Ka-Nagar (SC)
Thiru P. Sivakumar @ Thayagam Kavi
DMK
98410 60863
mlathiruvikanagar@tn.gov.in
16
Egmore (SC)
Thiru K.S. Ravichandran
DMK
98400 22250
mlaegmore@tn.gov.in
17
Royapuram
Thiru D. Jayakumar
(Hon. Minister)
AIADMK
92821 02950
mlaroyapuram@tn.gov.in
18
Harbour
Thiru P.K. Sekar Babu
DMK
98410 40026
mlaharbour@tn.gov.in
19
Chepauk-Thiruvallikeni
Thiru J. Anbazhagan J.
DMK
94440 35553
044-24347245
044-24344941
mlachepauk@tn.gov.in
20
Thousand Lights
Thiru Ku. Ka. Selvam
DMK
94440 10618
mlathousandlights@tn.gov.in
21
Anna Nagar
Thiru M.K. Mohan
DMK
93848 77779
mlaannanagar@tn.gov.in
22
Virugambakkam
Thiru Virugai V.N. Ravi
AIADMK
93837 70505
mlavirugambakkam@tn.gov.in
23
Saidapet
Thiru Ma. Subramanian
DMK
91767 00000
mlasaidapet@tn.gov.in
24
Thiyagaraya Nagar
Thiru B. Sathyanarayanan
AIADMK
98410 26424
mlathiyagarayanagar@tn.gov.in
25
Mylapore
Thiru R. Nataraj
AIADMK
98404 84411
mlamylapore@tn.gov.in
26
Velachery
Thiru Vagai Chanderasekar
DMK
90032 19505
mlavelachery@tn.gov.in
27
Sholinganallur
Thiru S. Aravind Ramesh
DMK
98400 61354
mlashozhinganallur@tn.gov.in
28
Alandur
Thiru T.M. Anbarasan
DMK
94440 10354
mlaalandur@tn.gov.in
29
Sriperumbudur (SC)
K. Palani
AIADMK
98843 53649
mlasriperumbudur@tn.gov.in
30
Pallavaram
Thiru I. Karunanithi
DMK
94440 02029
95000 30009
mlapallavaram@tn.gov.in
31
Tambaram
Thiru S.R. Raja
DMK
98400 26066
mlatambaram@tn.gov.in
32
Chengalpattu
Tmt. M. Varalakshmi
DMK
98400 22883
044-27454805
mlachengalpattu@tn.gov.in
33
Thiruporur
Thiru M. Kothandapani
AIADMK
94443 55368
mlathiruporur@tn.gov.in
34
Cheyyur (SC)
Dr. R.T. Arasu
DMK
97898 18399
mlacheyyur@tn.gov.in
35
Madurantakam (SC)
Thiru S. Pugazhenthi
DMK
94434 44923
90032 77693
mlamadurantakam@tn.gov.in
36
Uthiramerur
Thiru K. Sundar
DMK
9444075122
mlauthiramerur@tn.gov.in
37
Kancheepuram
Thiru C.V.M.P. Ezhilarasan
DMK
94435 47676
mlakancheepuram@tn.gov.in
38
Arakkonam (SC)
Thiru S. Ravi
AIADMK
98430 25123
mlaarakkonam@tn.gov.in
39
Sholinghur
Thiru N.G. Parthiban
AIADMK
98401 33673
94434 38016
04172-262281
262222
mlasholingur@tn.gov.in
40
Katpadi
Thiru Durai Murugan
DMK
94445 29999
0416- 2242941
044-24470886
mlakatpadi@tn.gov.in
41
Ranipet
Thiru R. Gandhi
DMK
94432 22770
mlaranipet@tn.gov.in
42
Arcot
Thiru J.L. Eswarappan
DMK
94432 65161
mlaarcot@tn.gov.in
43
Vellore
Thiru P. Karthikeyan
DMK
94433 26684
0416-2226684
mlavellore@tn.gov.in
44
Anaikattu
Thiru A.P. Nandakumar
DMK
96266 56666
mlaanaikattu@tn.gov.in
45
Kilvaithinankuppam (SC)
Thiru G. Loganathan
AIADMK
97512 32311
mlakilvaithinankuppam@tn.gov.in
46
Gudiyatham (SC)
Tmt. C. Jayanthi Padmanabhan
AIADMK
9884928936
mlagudiyattam@tn.gov.in
47
Vaniyambadi
Dr. (Tmt) Nilofer
(Hon. Minister)
AIADMK
94433 29062
044- 26423726
mlavaniyambadi@tn.gov.in
48
Ambur
Thiru R. Bala Subramani
AIADMK
98948 33033
mlaambur@tn.gov.in
49
Jolarpet
Thiru K.C. Veeramani
(Hon. Minister)
AIADMK
94433 41745
mlajolarpet@tn.gov.in
50
Tirupattur
Thiru A. Nallathambi
DMK
98948 30020
mlathirupatur@tn.gov.in
51
Uthangarai (SC)
Tmt. N. Manoranjitham
AIADMK
94865 64353
mlauthangarai@tn.gov.in
52
Bargur
Thiru C.V. Rajendiran
AIADMK
94432 68844
mlabargur@tn.gov.in
53
Krishnagiri
Thiru T. Senguttuvan
DMK
94432 66282
94425 66383
mlakrishnagiri@tn.gov.in
54
Veppanahalli
Thiru P. Murugan
DMK
99440 06633
mlaveppanahalli@tn.gov.in
55
Hosur
Thiru P. Balakrishna Reddy
(Hon. Minister)
AIADMK
94432 54520
mlahosur@tn.gov.in
56
Thalli
Thiru Y. Prakaash
DMK
94432 78852
98450 13880
mlathalli@tn.gov.in
57
Palacode
Thiru Anbalagan K.P.
(Hon. Minister)
AIADMK
94440 12777
94432 61223
mlapalacode@tn.gov.in
58
Pennagaram
Thiru P.N.P. Inbasekaran
DMK
94431 58971
95536 30004
mlapennagaram@tn.gov.in
59
Dharmapuri
Thiru P. Subramani
DMK
94437 55331
mladharmapuri@tn.gov.in
60
Pappireddipatti
Thiru P. Palaniappan
AIADMK
94430 56522
mlapappireddippatti@tn.gov.in
61
Harur (SC)
Thiru R. Murugan
AIADMK
94435 13355
mlaharur@tn.gov.in
62
Chengam (SC)
Thiru M.P. Giri
DMK
94875 57999
mlachengam@tn.gov.in
63
Tiruvannamalai
Thiru E.V. Velu
DMK
94890 59091
mlatiruvannamalai@tn.gov.in
64
Kilpennathur
Thiru K. Pitchandi
DMK
94432 19999
04175-223643
mlakilpennathur@tn.gov.in
65
Kalasapakkam
Thiru V. Panneerselvam
AIADMK
96551 09251
98430 38848
mlakalasapakkam@tn.gov.in
66
Polur
Thiru K.V. Sekaran
DMK
94433 22264
mlapolur@tn.gov.in
67
Arni
Thiru S. Sevoor Ramachandran
(Hon. Minister)
AIADMK
94433 28045
mlaarani@tn.gov.in
68
Cheyyar
Thiru K. Mohan
AIADMK
96777 05159
mlacheyyar@tn.gov.in
69
Vandavasi (SC)
Thiru S. Ambeth Kumar
DMK
88070 26688
94431 04285
mlavandavasi@tn.gov.in
70
Gingee
Thiru K.S. Masthan
DMK
9443073085
mlagingee@tn.gov.in
71
Mailam
Dr. R. Masilamani
DMK
94430 80191
04147-222932
mlamailam@tn.gov.in
72
Tindivanam (SC)
Tmt. P. Seethapathy
DMK
84893 96363
mlatindivanam@tn.gov.in
73
Vanur (SC)
Thiru M. Chakrapani
AIADMK
96009 36829
mlavanur@tn.gov.in
74
Villuppuram
Thiru C.Ve. Shanmugam
(Hon. Minister)
AIADMK
94433 26779
mlaviluppuram@tn.gov.in
75
Vikkiravandi
Thiru K. Rathamani
DMK
94434 39356
mlavikravandi@tn.gov.in
76
Tirukoilur
Thiru K. Ponmudy
DMK
94438 59983
04146-240364
mlatirukkoyilur@tn.gov.in
77
Ulundurpet
Thiru R. Kumaraguru
AIADMK
94432 68259
94432 68257
mlaulundurpettai@tn.gov.in
78
Rishivandiyam
Thiru K. Karthikeiyan
DMK
94431 01268
mlarishivandiyam@tn.gov.in
79
Sankarapuram
Thiru T. Udhaya Suriyan
DMK
94434 97724
mlasankarapuram@tn.gov.in
80
Kallakurichi (SC)
Thiru A. Prabhu
AIADMK
90476 84777
04151-233456
mlakallakurichi@tn.gov.in
81
Gangavalli (SC)
Thiru A. Maruthamuthu
AIADMK
94434 69961
mlagangavalli@tn.gov.in
82
Attur (SC)
Thiru R.M. Chinnathambi
AIADMK
94867 73264
mlaattur@tn.gov.in
83
Yercaud (ST)
Tmt. G. Chitra
AIADMK
94887 09233
mlayercaud@tn.gov.in
84
Omalur
Thiru S. Vetrivel
AIADMK
94432 34523
mlaomalur@tn.gov.in
85
Mettur
Thiru S. Semmalai
AIADMK
94441 04773
mlamettur@tn.gov.in
86
Edappadi
Thiru Edappadi K. Palaniswami
(Hon. Minister)
AIADMK
94431 46857
mlaedappadi@tn.gov.in
87
Sankari
Thiru S. Raja
AIADMK
94434 57193
mlasankari@tn.gov.in
88
Salem (West)
Thiru G. Venkatachalam
AIADMK
94432 34115
0427- 2387779
mlasalemwest@tn.gov.in
89
Salem (North)
Thiru R. Rajendran
DMK
94433 20715
mlasalemnorth@tn.gov.in
90
Salem (South)
Thiru A.B. Sakthivel
AIADMK
94432 66985
mlasalemsouth@tn.gov.in
91
Veerapandi
Tmt. P. Manonmani
AIADMK
94437 77367
94875 37367
mlaveerapandi@tn.gov.in
92
Rasipuram (SC)
Dr. (Tmt.) V. Saroja
(Hon. Minister)
AIADMK
9445675801
93400 32299
93447 72869
mlarasipuram@tn.gov.in
93
Senthamangalam (ST)
Thiru C. Chandrasekaran
AIADMK
94432 49526
mlasenthamangalam@tn.gov.in
94
Namakkal
Thiru K.P.P. Baskar
AIADMK
94433 69996
mlanamakkal@tn.gov.in
95
Paramathi Velur
Thiru K.S. Moorthiy
DMK
94433 56856
mlaparamathvelur@tn.gov.in
96
Tiruchengodu
Tmt. Pon. Saraswathi
AIADMK
88833 56666
mlathiruchengodu@tn.gov.in
97
Kumarapalayam
Thiru P. Thangamani
(Hon. Minister)
AIADMK
98427 40154
98427 40154
mlakumarapalayam@tn.gov.in
98
Erode (East)
Thiru K.S. Thennarasu
AIADMK
94437 60009
mlaerodeeast@tn.gov.in
99
Erode (West)
Thiru K.V. Ramalingam
AIADMK
90131 81177
89033 66399
0424-2272929
mlaerodewest@tn.gov.in
100
Modakkurichi
Thiru V.P. Sivasubramani
AIADMK
99429 91000
mlamodakkurichi@tn.gov.in
n
108
Udhagamandalam
Thiru R. Ganesh
INC
94436 69698
mlaudhagamandalam@tn.gov.in
109
Gudalur (SC)
Thiru M. Thiravidamani
DMK
94439 00711
04262-220909
mlagudalur@tn.gov.in
110
Coonoor
Thiru A. Ramu
AIADMK
94433 75713
mlacoonoor@tn.gov.in
111
Mettupalayam
Thiru O.K. Chinnaraj
AIADMK
94430 54933
mlamettuppalayam@tn.gov.in
112
Avanashi (SC)
Thiru P. Dhanapal
(Hon. Speaker)
AIADMK
99524 97272
mlaavanashi@tn.gov.in
113
Thiruppur (North)
Thiru K.N. Vijeyakumar
AIADMK
93442 02567
mlatiruppurnorth@tn.gov.in
114
Tiruppur (South)
Thiru S. Gunasekaran
AIADMK
99423 89992
mlatiruppursouth@tn.gov.in
115
Palladam
Thiru A. Natarajan
AIADMK
98429 15800
mlapalladam@tn.gov.in
116
Sulur
Thiru R. Kanagaraj
AIADMK
99435 34795
mlasulur@tn.gov.in
117
Kavundampalayam
Thiru V.C.Arukutty
AIADMK
98422 07679
mlakavundampalayam@tn.gov.in
118
Coimbatore (North)
Thiru P.R.G. Arunkumar
AIADMK
94431 69634
mlacoimbatorenorth@tn.gov.in
119
Thondamuthur
Thiru S.P. Velumani
(Hon. Minister)
AIADMK
89730 35555
0422-2622728
044-24938566
mlathondamuthur@tn.gov.in
120
Coimbatore (South)
Thiru Amman K.Arjunan
AIADMK
98941 68104
mlacoimbatoresouth@tn.gov.in
121
Singanallur
Thiru N. Karthik
DMK
94438 19231
mlasinganallur@tn.gov.in
122
Kinathukadavu
Thiru A. Shanmugam
AIADMK
99430 17789
mlakinathukadavu@tn.gov.in
123
Pollachi
Dr. Pollachi V. Jayaraman
(Hon. Deputy Speaker)
AIADMK
94430 37044
mlapollachi@tn.gov.in
124
Valparai (SC)
Tmt. V. Kasthuri Vasu
AIADMK
98426 13222
04259-286797
mlavalparai@tn.gov.in
125
Udumalaipettai
Thiru K. Radhakrishnan
(Hon. Minister)
AIADMK
95247 77501
126
Madathukulam
Thiru R. Jayaramakrishnan
DMK
94430 50235
127
Palani
Thiru I.P. Senthil Kumar
DMK
91761 33333
94431 74488
128
Oddanchatram
Thiru R. Sakkarapani
DMK
94422 07777
129
Athoor
Thiru I. Periyasamy
DMK
95853 66666
130
Nilakkottai (SC)
Thiru R. Thangathurai
AIADMK
94430 21310
131
Natham
Thiru M.A. Andiambalam M.A.
DMK
94439 17272
132
Dindigul
Thiru C. Sreenivasan
(Hon. Minister)
AIADMK
94861 33333
133
Vedasandur
Dr. V.P.B. Paramasivam
AIADMK
98421 51160
134
Aravakurichi
135
Karur
Thiru M.R. Vijayabhaskar
(Hon. Minister)
AIADMK
98946 62211
136
Krishnarayapuram (SC)
Tmt. M. Geetha
AIADMK
91592 44777
90476 44777
137
Kulithalai
Thiru E. Ramar
DMK
94421 52245
138
Manapparai
Thiru R. Chandrasekar
AIADMK
94431 68475
139
Srirangam
Tmt. S. Valarmathi
(Hon. Minister)
AIADMK
98424 70989
140
Tiruchirappalli (West)
Thiru K.N. Nehru
DMK
98424 66666
0431-2740095
141
Tiruchirappalli (East)
Thiru N. Natarajan
(Hon. Minister)
AIADMK
98424 05000
142
Thiruverumbur
Thiru Anbil Mahesh
Poyyamozhi
DMK
98407 02222
143
Lalgudi
Thiru A. Soundarapandian
DMK
99422 35277
144
Manachanallur
Tmt. M. Parameswari
AIADMK
86754 46056
145
Musiri
Thiru M. Selvarasu
AIADMK
97905 36949
146
Thuraiyur (SC)
Thiru S. Stalin Kumar
DMK
97878 15511
147
Perambalur (SC)
Thiru R. Thamizhselvan R.
AIADMK
98422 44917
148
Kunnam
Thiru R.T. Ramachandran
AIADMK
98945 70008
149
Ariyalur
Thiru S. Rajendiran
(Chief Govt. Whip)
AIADMK
94423 58989
150
Jayankondam
Thiru J.K.N. Ramajeyalingam
AIADMK
99658 85157
90033 85467
88835 77504
151
Tittagudi (SC)
Thiru V. Ganesan
DMK
94434 45168
152
Vridhachalam
Thiru V.T. Kalaiselvan
AIADMK
94432 10657
153
Neyveli
Thiru Saba. Rajendran
DMK
94432 53251
154
Panruti
Tmt. P. Sathya
AIADMK
98423 22552
98423 11811
155
Cuddalore
Thiru M.C. Sampath
(Hon. Minister)
AIADMK
94431 36395
156
Kurinjipadi 
Thiru M.R.K. Panneer Selvam
DMK
94433 71590
157
Bhuvanagiri
Thiru Durai K. Saravanan
DMK
94432 48220
158
Chidambaram
Thiru K.A. Pandian
AIADMK
94431 51922
159
Kattumannarkoil (SC)
Thiru N. Murugumaran
AIADMK
94436 65991
04144-261991
160
Sirkalli (SC)
Thiru P.V. Bharathi
AIADMK
99655 60025
161
Mayiladuthurai
Thiru V. Rathakrishnan
AIADMK
94436 06873
162
Poompuhar
Thiru S. Pavunraj
AIADMK
94435 74056
163
Nagapattinam
Thiru M. Thamimun Ansari
AIADMK
95000 62792
164
Kilvelur (SC)
Thiru U. Mathivanan
DMK
94424 47622
165
Vedaranyam
Thiru O.S. Manian
(Hon. Minister)
AIADMK
94440 78111
04369-234567
166
Thiruthuraipoondi (SC)
Thiru P. Adalarasan
DMK
80568 14947
167
Mannargudi
Thiru T.R.B. Rajaa
DMK
98408 45678
168
Thiruvarur
Thiru M. Karunanidhi
DMK
044-28115225
169
Nannilam
Thiru R. Kamaraj
(Hon. Minister)
AIADMK
98424 13434
170
Thiruvidaimarudur (SC)
Dr. Govi. Chezhiaan
DMK
94441 62050
171
Kumbakonam
Thiru G. Anbalagan
DMK
94433 83283
0435-2414838
172
Papanasam
Thiru. R. Doraikkannu
(Hon. Minister)
AIADMK
94435 27180
173
Thiruvaiyaru
Thiru Durai. Chandrasekaran
DMK
94433 25777
174
Thanjavur # 
175
Orathanadu
Thiru M. Ram Chandran
DMK
99449 71366
176
Pattukkottai
Thiru V. Sekar
AIADMK
98432 39090
177
Peravurani
Thiru M. Govindarasu
AIADMK
94437 15231
178
Gandarvakottai (SC)
Thiru B. Arumugam
AIADMK
97511 14233
179
Viralimalai
Dr. C. Vijaya Baskar
(Hon. Minister)
AIADMK
94433 88155
97509 66601
04339-212145
180
Pudukkottai
Thiru Periyannan Arassu
DMK
76396 62233
04322-221929
181
Thirumayam
Thiru S. Regupathy
DMK
99431 36888
04322-222221
182
Alangudi
Thiru Siva V. Meyyanathan
DMK
98426 25119
183
Aranthangi
Thiru E. Rathinasabapathy
AIADMK
94432 20942
184
Karaikudi
Thiru KR. Ramasamy
INC
94433 74221
185
Thiruppattur
Thiru KR Periakaruppan
DMK
94433 68479
04577-267322
186
Sivaganga
Thiru G. Baskaran
(Hon. Minister)
AIADMK
94865 45109
187
Manamadurai (SC)
Thiru S. Mariappan Kennady
AIADMK
95662 94549
188
Melur
Thiru P. Periyapullan @ Selvam
AIADMK
98432 70541
189
Madurai (East)
Thiru P. Moorthy
DMK
98421 22446
190
Sholavandan (SC)
Thiru K. Manickam
AIADMK
94430 56394
96296 24331
191
Madurai North
Thiru V.V. Rajan Chellappa
AIADMK
94442 34620
95976 58715
0452-2370789
192
Madurai (South)
Thiru S.S. Saravanan
AIADMK
99424 17649
193
Madurai (Central)
Thiru Palanivel Thiaga rajan
DMK
94423 27251
194
Madurai (West)
Thiru K. Raju
(Hon. Minister)
AIADMK
94449 67431
94439 27555
0452-2536559
2539755
195
Thiruparankundram *
196
Thirumangalam
Thiru R.B. Udhayakumar
(Hon. Minister)
AIADMK
99439 11167
197
Usilampatti
Thiru P. Neethipathi
AIADMK
94433 70871
198
Andipatti
Thiru Thangatamilselvan
AIADMK
98421 27696
04554-27666
199
Periyakulam (SC)
Dr. K. Kathirkamu
AIADMK
98421 75055
200
Bodinayakanur
Thiru O. Panneerselvam
(Hon. Minister)
AIADMK
95662 13535
99942 88595
201
Cumbum
Thiru S.T.K. Jakkaiyan.
AIADMK
94443 66663
0452-2683693
202
Rajapalayam
Thiru S. Thangappandian
DMK
93645 44107
203
Srivilliputhur (SC)
Tmt. M. Chandraprabha.
AIADMK
93674 10981
96556 58203
204
Sattur
Thiru S.G. Subramanian
AIADMK
99430 27281
205
Sivakasi
Thiru K.T. Rajenthra Bhalaji.
(Hon. Minister)
AIADMK
94433 43799
04562-232799
206
Virudhunagar
Thiru A.R.R. Seenivasan.
DMK
98430 52844
207
Aruppukottai
Thiru K.K.S.S.R. Ramachandran.
DMK
98424 45899
04562-43299
208
Tiruchuli
Thiru Thangam Thenarasu
DMK
93622 01622
04566-288205
292333
209
Paramakudi (SC)
Dr. S. Muthiah
AIADMK
94434 66699
04564-229990
210
Tiruvadanai
Thiru S. Karunaas
AIADMK
88707 08333
044-23766222
211
Ramanathapuram
Dr. M. Manikandan
(Hon. Minister)
AIADMK
98409 47777
212
Mudukulathur
Thiru S. Pandi
INC
94431 61004
213
Vilathikulam
Tmt. K. Uma Maheswari.
AIADMK
98429 81512
214
Thoothukudi
Tmt. P. Geetha Jeevan
DMK
94424 45210
94436 57799(PA)
215
Tiruchendur
Thiru Anitha R. Radhakrishnan
DMK
94886 36363
04639-251113
216
Srivaikundam
Thiru S.P. Shunmuganathan
(Hon. Minister)
AIADMK
94887 33338
217
Ottapidaram (SC)
Thiru R. Sundararaj
AIADMK
77080 84096
89034 62751
218
Kovilpatti
Thiru Kadambur Raju
(Hon. Minister)
AIADMK
94422 05002
219
Sankarankovil (SC)
Tmt. M. Rajalakshmi
(Hon. Minister)
AIADMK
97915 61576
220
Vasudevanallur (SC)
Thiru A. Manoharan
AIADMK
94431 34143
221
Kadayanallur
Thiru Muhammed Abubacker. K.A.M.
Indian Union Muslim League
95000 35786
222
Tenkasi
Thiru S. Selvamohandos Pandian
AIADMK
89035 71888
223
Alangulam
Dr. (Tmt) Poongothai
DMK
73737 87333
224
Tirunelveli
Thiru A.L.S. Lakshmanan
DMK
94865 90666
0462-2576966
225
Ambasamudram
Thiru R. Murugaiah Pandian
AIADMK
94433 70312
04634-251466
226
Palayamkottai
Thiru T.P.M. Mohideen Khan
DMK
94431 41771
0462-2322475
227
Nanguneri
Thiru H. Vasantha Kumar
INC
98400 33350
228
Radhapuram
Thiru I.S. Inbadurai
AIADMK
98411 54054
229
Kanniyakumari
Thiru S. Austin
DMK
96771 48888
230
Nagercoil
Thiru N. Suresh Rajan
DMK
97907 66663
04652-232110
231
Colachel
Thiru J.G. Prince
INC
94426 29700
232
Padmanabhapuram
Thiru T. Mano Thangaraj
DMK
94443 50150
233
Vilavancode
Tmt. S. Vijayadharani
INC
93613 21204
234Killiyoor
Thiru S. Rajesh Kumar
INC
94431 03539
04651-267999
235
Nominated (Anglo-Indian) Dr. (Tmt.) Nancy Ann Cynthia Francis Nominated 944347227