Sunday, 12 June 2016

ஜனாஸா தொழுகையை தெரிந்து கொள்வோம் ! !


📕ஜனாஸா தொழுகையை தெரிந்து கொள்வோம் ! !
✔ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது ?
✔முதல் தக்பீருக்குப் பின்,
✔முதல் தக்பீர் கூறிய பின்.,
✔ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும்.
✔ஆதாரம் :- புகாரி 1335
✔ இரண்டாம் தக்பீருக்கு பின்,
✔ இரண்டாம் தக்பீர் கூறிய பின்.,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
✔ஆதாரம்  நூல் :- பைஹகி 4 - 39
✔மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்.,
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.
اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ
وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْب
َ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ
وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر
 
அல்லாஹும்மபிர் லஹு வர்ஹம்ஹு வஆபிஹி வபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்னத்த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி.
✔ஆதாரம் :- முஸ்லிம் 1600.
✔பொருள் :-  இறைவா !
இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக !
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக !
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக ! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக ! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக !
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக !
இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக !
இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக..!
இதை மற்றவர்களும் படித்து பயன் பெற அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்  அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உதவி செய்வானாக.,
✔ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
↔ ஜஸாக்கல்லாஹ் கைர்.,
↔ என்றும் மார்க்கப்பணியில் ...,
தொழுகையை நிலைநாட்டுவோம் ! ! !

No comments:

Post a Comment