ஹஜ் யாத்ரீகர்கள் ஜமாரத் எனும் ஷைத்தானுக்கு கல்லெறியும் சமய சடங்கை பாதுகாப்புடன் நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதன்படி முறைப்படுத்தப்பட்ட நேரங்களில் ஹஜ் யாத்திரை குழுக்கள் கல்லெறிய அனுமதிக்கப்படுவர் என்றாலும் கீழ்க்காணும் தினங்களில் குறிப்பிட்ட நேரத்தில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஹஜ், உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.
துல்ஹஜ் பிறை 10 ஆம் நாள்: காலை 6 மணி முதல் காலை 10.30 மணி வரை.
துல்ஹஜ் பிறை 11 ஆம் நாள்: பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை.
துல்ஹஜ் பிறை 12 ஆம் நாள்: காலை 10.30 மணி முதல் பகல் 2 மணி வரை.
ஹஜ் யாத்ரீகர்கள் முறைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட தடத்தில் அனுமதிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், புனித கஃபத்துல்லாஹ்வில் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஜமாஅத் தொழுகைக்கு முன்னும் பின்னும் ஒரு மணி நேரம் "தவாஃப் அல் குதூம்" செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், ஹஜ் யாத்ரீகர்கள் புனிதப் பள்ளிக்குள் நுழையும் போது இஹ்ராம் ஆடையுடனும், கை பட்டியுடனும், அடையாள அட்டைகளுடனும் இருக்க வேண்டும் எனவும் இவற்றை 90 முதவாக்கள் (mutawwifs ) 3 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Arab News
No comments:
Post a Comment