Thursday, 25 August 2016

பிரான்ஸ் கடல்கரையில் பர்தாவோடு நின்ற முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த சோக நிலை..!


பிரான்சில் உள்ள நைஸ் நகரில் சில மாதங்கள் முன்னர் பாரிய தாக்குதல் இடம்பெற்று இருந்தது யாவரும் அறிந்த விடையம். முஸ்லீம் தீவிரவாதிகள் வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வந்து சரமாரியாக சுட்டுத் தள்ளிய கொடூரச் சம்பவம் மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை எனலாம்.
இன் நிலையில் நேற்றைய தின நைஸ் நகரில் உள்ள கடல்கரை ஒன்றில். முகத்தை மறைத்துக்கொண்டு பர்தா அணிந்துகொண்டு ஒரு பெண் அங்கே உட்கார்ந்து இருந்துள்ளார். இதனை அடுத்து, அருகில் இருந்த ஏனைய சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தார்கள். சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க.
அங்கே விரைந்து வந்த ஆயுதப் பொலிசார், உடனடியாக பர்தாவை களற்றுமாறு உத்தரவிட்டார்கள். வேறு வழி இன்றி அவர் உடனே தனது பர்தாவை களற்றினார். அவரை பரிசோதித்த பின்னர் பொலிசார் அங்கிருந்து விலகச் சென்றார்கள். இருப்பினும் குறிப்பிட்ட பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என பிரான்ஸ் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment