”வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தியதை அடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துவருகிறது. மேலும் தொலைதொடர்பு நிறுவனங்களில் ரூ.1,099 அன்லிமிடெட் 3 ஜி சேவையை வழங்கும் முதல் நிறுவனம் பி.எஸ்.என்.எல்.தான்’ என்று, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
Reliance, Airtel, Vodafone போன்ற தனியார் கம்யூனிகேஷன் நிறுவனங்கள் அதிக சலுகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களை அதிகரிப்பதால், அவர்களுடன் சந்தையில் இணையாக வளரும் விதமாக, அனைத்து இடங்களிலும் வலுவான டவர் ரேஞ்ச்சைக் கொண்டிருக்கும் பி.எஸ்.என்.எல் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் டேட்டா கட்டணங்களை 67% குறைத்துள்ளது. லேண்ட்லைனில் 49 ரூபாய்க்கு, தினமும் இரவு 9 முதல் காலை 5 வரையிலும், ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாக அளித்தும் வருகிறது. தற்போது 1099 ரூபாய் அன்லிமிடெட் 3G வழங்குகிறது பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனம்.
No comments:
Post a Comment