சேலத்தில் இருந்து சவூதிக்கு வேலைக்கு சென்ற பெண் சித்திரவதை செய்யப்படுவதாக வாட்சப்பில் வீடியோ வெளியானதை தொடர்ந்து தனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் சன்னியாசி குண்டு பாத்திமா நகரை சேர்ந்த பர்வீன் பானு குடும்ப சூழல் காரணமாக சவுதிக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக சம்பளம் தராமல் சித்ரவதை செய்வதாக பர்வீன் பானு வாட்சப் மூலமாக வீடியோ அனுப்பியதை தொடர்ந்து, நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் அந்த வீடியோவை ஒளிபரப்பினோம். இந்நிலையில் பர்வீன் பானுவின் தாயார் தன்னுடைய மகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பர்வீனை மீட்க சென்ற தன்னுடைய மருமகன் குறித்த தகவல் எதுவும் தெரியாததால், அவரையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment