கடந்த ஆண்டு மெக்கா ஹஜ் பயணத்தின்போது, ஈரானியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஹஜ் பயணிகள் நெரிசலில் சிக்கி பலியானார்கள்.இச்சம்பவத்திற்கு ஈரான் சவுதி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது. இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டிய ஈரான் இந்த ஆண்டு மக்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்து உள்ளது.
இந்த வருடம் ஈரான் தனது குடிமக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதி அரேபியாவிற்கு அனுப்பாது என இரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய அதிகாரிகள் ஈரானிய ஹஜ் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக கூறி உள்ளார்.
சிரியா மற்றும் ஏமன் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த இரு பிராந்திய போட்டி நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால் ஈரான் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment