தமிழ்நாட்டின் திருச்சியில் வரும் 31 ஆம் தேதியன்று மாநில அளவிலான ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ ஒன்றை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்த தடை விதிக்க வேண்டுமென, தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும், அதன் அமைப்பாளரான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைவர் பக்கிர் முஹம்மத் இந்த மாநாட்டை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு அவர் தரப்பின் பதில் என்ன என்பது குறித்தும், தமிழ்நாட்டின் தர்காக்களை இடிக்கச் சொல்லி தாங்கள் பிரச்சாரம் மேற்கொள்வது ஏன் என்பது குறித்தும் விரிவாக விளக்கியிருக்கிறார்.
அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
No comments:
Post a Comment