Saturday, 26 December 2015

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு அதிக முக்கியத்துவம்: சர்டாஜ் அஜிஸ்


2:54 AM | டிசம்பர் 27, 2015


இஸ்லாமாபாத், டிச. 27-
இந்தியா - பாகிஸ்தான் இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலை குறைக்கும் விஷயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் வானொலி ஒன்றில் பேசிய சர்டாஜ், ”இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிறகு, வெளியுறவுச் செயலாளர்கள் அளவிலான சந்திப்பு ஜனவரி மத்தியில் நடைபெற முடிவு எட்டப்பட்டது.” என்றார்.,

மேலும், இந்த பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளிடையேயான எல்லாம் பிரச்சனையும் உடனடியாக தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கவில்லை. பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பும் வழியில், பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தான் சென்றார். லாகூர் நகரில் அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார்.” என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment