Saturday, 22 October 2016

வேலைவாய்ப்பு செய்திகள்


*வேலைவாய்ப்பு செய்திகள்*இந்த செய்தி நமக்கு பயன்படவில்லை என்றாலும் வேலை தேடும் ஒருவற்கு பயன்படலாம்! forward to all groups.

1. COMPANY NAME : TIETO HIRING SOFTWARE DEVELOPERS
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  3 YEARS
SALARY : 15,000 TO 45,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK :
http://www.freshersliveupdates.com/2016/09/tieto-hiring-software-developers.html?m=1

2. COMPANY NAME : IBM
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  4 YEARS
SALARY : 20,000 -  45,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/ibm-technical-interview-questions.html?m=1

3. COMPANY NAME : RELIANCE INDUSTRIES (JIO) Ltd
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  3 YEARS
SALARY :  1,50,000 – 2,25,000 P.A
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/reliance-industriesjio-ltd-walk-in-any.html?m=1

4. COMPANY NAME : TECH MAHENDRA
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  8 YEARS
SALARY : 20,000 -  40,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/tech-mahindra-hiring-freshers.html?m=1

5. COMPANY NAME : JIO HR SERVICES PVT . LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  8 YEARS
SALARY :  90,000 – 1,25,000 P.A.
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/jio-hr-services-pvt-ltd-walk-in-any.html?m=1

6. COMPANY NAME : ADITYA BIRLA MANAGEMENT CORPORATION PVT LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  2 YEARS
SALARY :  NA
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/aditya-birla-management.html?m=1

7. COMPANY NAME :  PC TECHNOLOGY PVT. LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  4 YEARS
SALARY :  15,000  -  35,000 PM
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/pc-technology-pvt-ltd-walk-in-for.html?m=1

8. COMPANY NAME :  FIRST AMERICAN (India) PVT LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  2 YEARS
SALARY : 1,00,000 – 2,00,000 P.A
LOCATION : ALL OVER TAMILNADU
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/first-american-india-pvt-ltd-walk-in.html?m=1

9. COMPANY NAME :   AMAZON
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : FRESHERS
SALARY : Rs 3 – 4 LPA
LOCATION : ALL OVER INDIA
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/amazon-hiring-software-developer-hiring.html?m=1

10. COMPANY NAME :  ACCENTURE
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE :  0 – 1 Years
SALARY : 15,000 TO 45,000
LOCATION : MUMBAI
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/accenture-walk-in-any-graduate-freshers.html?m=1

11. COMPANY NAME :  TCS
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE :  0 – 1 Years
SALARY : 15,000 TO 45,000
LOCATION : ALL OVER INDIA
LINK:
http://www.freshersliveupdates.com/2016/08/tcs-walk-in-any-graduate-freshers-2016.html?m=1

*இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும்**வேலை வாய்ப்பு செய்திகள்* *இந்த செய்தி நமக்கு பயன்படவில்லை என்றாலும் வேலை தேடும் ஒருவற்கு பயன்படலாம்!*So forward to all groups.

விரைவில் வருகிறது 2,000 நோட்டு

மும்பை: 

ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது. தற்போது அதிகபட்ச மதிப்பாக ஆயிரம் ரூபாய் நோட்டும், இதற்கு அடுத்து 500 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் உள்ளது. கருப்பு பண புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.
இதற்கேற்ப, ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு புழக்கத்தை தடுக்க வேண்டும், இவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2,000 நோட்டை வெளியிட உள்ளது.
மைசூருவில் உள்ள அச்சகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் புழக்கத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 
1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் 10,000 மதிப்பிலான ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிட்டது. ஆனால், இவை முறையே 1946 மற்றும் 1978ம் ஆண்டுகளில் வாபஸ் பெறப்பட்டன.

Wednesday, 19 October 2016

வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்..? கொண்டாடத் தயாராகும் அதிமுக தொண்டர்கள்..!!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு லண்டன் சிறப்பு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் என தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளை பரவிவரும் நிலையில், பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்து பேசும்போது புகைப்படங்களை வெளியிட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது.
மேலும், சிங்கப்பூரிலிருந்து வந்த பெண் டாக்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை சிங்கபூரில் வைத்து சிகிச்சை அளித்தால் பூரண குணமடைய முடியும் என தெரிவித்த நிலையில், அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததாகவும், முதல்வர் ஜெயலலிதா கடல் கடந்து செல்ல விரும்பாதவர் எனவும், அவர் தீபாவளிக்கு வீட்டில் இருந்தால் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறிறித்து அப்போலோ மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமாரிடம் ஆலோசித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், முதல்வரின் வீட்டில் லிப்ட் அமைக்கும் பணியும், அங்கு வைத்து சிகிச்சை அளிக்க ஏதுவாக அப்போலோ மருத்துவமனையிலிருந்து சிகிச்சை கருவிகள் போயஸ் தோட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தீபாவளிக்கு முன் வரும் 27ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் கொண்டாட தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Topics: Online Tamil News

டேட்டா செலவை குறைக்கும் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் குறித்த தகவல்கள்:


உலகில் இன்று அதிக நபர்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பல புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சீனா, இந்தியாவை அடுத்து அதிக நபர்கள் வாழும் நாடு ஃபேஸ்புக் நாடு தான் என்று கூறப்படும் அளவுக்கு அதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் மில்லியன் கணக்கில் அதிகமாகி வருகின்றனர்.
இதேபோல் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனமும் அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள ஒரு புதிய வசதிதான் மெசஞ்சர் லைட். 
ஃபேஸ்புக் உபயோகப்படுத்த இண்டர்நெட் தேவை என்றாலும் டெக்ஸ்டாப்பில் அல்லது ஸ்மார்ட்போனில் இதை பயன்படுத்த கண்டிப்பாக ஓரளவுக்கு ஸ்பீடான நெட்வொர்க் தேவை. ஆனால் ஒருசில நிறுவனங்களில் இது கிடைக்காது. மேலும் பழைய மாடல் போன்களில் என்னதான் ஸ்பீடான நெட்வொர்க் சிம்-ஐ போட்டாலும் ஸ்பீடு கிடைக்காது.
வேகமில்லாத இண்டர்நெட்டில் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட். இந்த மெசஞ்சர் லைட் குறித்த விபரங்க்ளை தற்போது பார்ப்போம்
1. எதை எதை ஷேர் பண்ணலாம்
இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் புகைப்படங்கள், டெக்ஸ்ட் வரிகள் மற்றும் இணையதள லிங்குகளை மட்டுமே ஷேர் செய்ய அனுமதிக்கும். வேறு எதையும் நீங்கள் இதில் ஷேர் செய்ய முடியாது.
2. வாய்ஸ் கால் வசதி இல்லை
ஃபேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வாய்ஸ் கால் வசதி அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சேட் மட்டுமே செய்ய முடியும். வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் இதில் அனுமதி இல்லை. இதனால்தான் குறைந்த வேக இண்டர்நெட் கனெக்ஷனிலும் இது வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3. பிசினஸ் மெசஞ்சரும் இல்லை:
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் பிசினஸ் மெசஞ்சரை அறிமுகம் செய்தது. இந்த வசதி தொழிலதிபர்களுக்கும் பிசினஸ் செய்பவர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்த நிலையில் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட்-ல் இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. 
4. ஆண்ட்ராய்டு போனுக்கு மட்டுமே பயன்படும்:
உலகில் உள்ள பெரும்பாலானோர் ஃபேஸ்புக்கை ஆண்ட்ராய்டு ஆப் மூலமே பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளிவந்த சர்வே ஒன்று தெளிவாக கூறியுள்ளது. எனவே ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் பயன்பாட்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மட்டுமே முதல்கட்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. போக போக இனி வேறு மாடல்களிலும் இது அறிமுகப்படுத்தப்படலாம்
5. இந்தியர்கள் பயன்படுத்த முடியுமா? 
சரி, இந்தியாவில் தான் ஸ்லோவான இண்டர்நெட் கனெக்ஷன் அதிகம் உள்ள இடம். ஆனால் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் வசதியை இப்போதைக்கு இந்தியர்கள் பயன்படுத்த முடியாது. கென்யா, துனிஷியா, மலேசியா, இலங்கை மற்றும் வெனின்சுலா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எப்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த சரியான தகவல் இதுவரை இல்லை எனினும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா - ஏர்டெல் கூட்டணி: சிக்களில் ஜியோ!!



இந்தியாவின் மிகப்பெரிய 
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல் மீண்டும் தொலைதொடர்பு சாதனங்கள் நிறுவனமான நோக்கியாவுடன் கூட்டணி வைக்கிறது.
சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அடுத்த 20 வருடங்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை ஏர்டெல் கைப்பற்றியுள்ளது.
இப்போது ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியில் கடினமான தன்மையை கொடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஏர்டெல்- நோக்கியா கூட்டணி நிகழ்த்தப்பட்டுள்ளது. 
புதிய சேவை வட்டங்கள்:
ஏற்கனவே சேவைகளை வழங்கும் ஆறு வட்டங்களை (மும்பை, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப், கேரளா) தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் குஜராத், பீகார், மற்றும் உ.பி. கிழக்கு ஆகிய 3 புதிய வட்டங்களில் அதன் சேவைகளை விரிவடைய செய்கிறது.
கவரேஜ்:
நாட்டில் இணைய தரவு பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்த கவரேஜ் அனுமதிக்கும் 4ஜி தொழில்நுட்ப விரிவாக்கத்தை நிகழ்த்தி வருகிறது.
வேகமான மொபைல் இணையம்:
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய பயன்படுத்தல் சேவையானது நம் அனைவருக்கும் ஒரு சமமான வேகத்திலான மொபைல் இணைய அணுகலை வழங்க அனுமதிக்கும்.
2ஜி, 3ஜி வலையமைப்பு விரிவாக்கம்: 
மரபுவழி 2ஜி அடிப்படை நிலையங்கள் உட்பட ஏர்டெல் நிறுவனத்தின் எட்டு 3ஜி பிரதேசங்கள் நவீனமயமாக்கப்படும் என்று நோக்கியா குறிப்பிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம்: 
பார்தி ஏர்டெல் நாட்டில் அதன் ஸ்பெக்ட்ரம் தடத்தை விரிவாக்கும் 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை கைப்பற்றியுள்ளது. அதன் இருப்பை அதிகமாக்க உதவும் 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 230 மெகாஹெர்ட்ஸை முழுவதும் பெற மொத்தம் ரூ.14,244 கோடி செலவு செய்துள்ளது.

Tuesday, 18 October 2016

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது முன்னாள் பிரதமர் தேவகவுடா.


மங்களூர், அக்.17 பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடா தெரிவித்தார்.
இதுகுறித்து மங்களூரில் சனிக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நமதுநாட்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டுள்ளனர். எனவே, பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். நான் பிரதமராக இருந்தபோது, மக்களின் குறைகளைத் தீர்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்தினேன். விவசாயிகள் வஞ்சிக்கப்பட் டுள்ளனர்.
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு மக்களிடையே எழுச்சியை உருவாக்க விரைவில் பிரசாரப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினை கைமீறிச் சென்று கொண் டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக அமைதி சீர்குலைந்துள்ளது. அங்கு அமைதி திரும்ப வேண் டியது அவசியமாகும். அதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்

முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு 3 நாள் நோன்பு :


முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் 3 நாட்கள் நோன்பு மேற்கொண்டுள்ளனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 25 பேர் இன்று முதல் 3 நாட்கள் நோன்பு இருந்து வருகின்றனர். மேலும், அப்போலோ மருத்துவமனை முன்பு 20 பள்ளி மாணவர்கள் முதல்வர் குணமடைய வேண்டி திருக்குரான் ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முதல்வர் குணமடைய வேண்டி அதிமுக மகளிரணி சார்பில் அப்போலோ மருத்துவமனை முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல முதல்வர் குணமடையவேண்டி திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் 20க்கும் மேற்பட்டோர்  அப்பல்லோ மருத்துவமனை முன்பு தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினர்.