Wednesday, 3 August 2016

கத்தார் நாட்டில் பலியான தொழிலாளி; உடலை தாயகம் கொண்டு உதவுமாறு கோரிக்கை:

கத்தார்:

    கத்தார் நாட்டில் விபத்தில் பலியான, கடலூரை சேர்ந்த தொழிலாளியின் உடலை உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
   கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி பணி முடிந்து திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானார்.
    இந்நிலையில் ராஜாவின் மரணம் குறித்து, அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்த தனியார் நிறுவனம் உடலை அனுப்ப 40 நாட்கள் ஆகும் என கூறியது. இந்நிலையில் ராஜாவின் உடலை உடனடியாக கொண்டு வர கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுத்துள்ளனர்:

No comments:

Post a Comment