Tuesday, 23 August 2016

மாணவர்களுக்கு மழை கவசம் !விதி எண் 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட பள்ளி கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்.


மாணவர்களுக்கு மழை கவசம் !

விதி எண் 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட பள்ளி கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்..
1. நடப்பாண்டில் 5 புதிய தொடக்க பள்ளி, 3 தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், 19 நடுநிலைப்பளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
2. நடப்பாண்டில் ரூ. 60.79 கோடி மதிப்பில் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்
3. சென்னை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர் பகுதியில் தலா ஒரு தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்லி தொடங்கப்படும்
4. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , விழுப்புரம், வேலுற், கடலூர், நாகை, தஞ்சை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்படும்.
5.  மலைப்பகுதிகளில்  8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள் வழங்கப்படும்
6. மாணவர்களுக்கு வரைபட பயிற்சி தாள்,  கணித உபகரண பெட்டிகள் , அறிவியல் உபகரண பெட்டிகள், வாசிப்பு திறன் மேம்பாட்டு புத்தகங்கள் வழங்கப்படும்.
7. நடுநிலை பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணினி வழி கற்றல் மையம் உருவாக்கப்படும்
8. அறிவியல், கணித பாடங்களை எளிமையாக பயில அசைவூட்ட காணொலி தொகுப்புகள் வழங்கப்படும்
9. மாணவர், ஆசிரியர் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவி அறிமுகப்படுத்தப்படும்
10. மாணவர்கள் புதிய முறையில் கல்வி
கற்பதற்கு ஏதுவாக வகுப்பறையில் உள்ள சுவர்களில் பாடம் தொடர்புடைய வண்ணச்
சுவர் சித்திரங்கள் வரையப்படும்.
11. தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக்
கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக்
கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள்  ஏற்படுத்தப்படும்.
12.  நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

No comments:

Post a Comment