Wednesday, 29 June 2016

வளரும் குழந்தைகளுக்கு நெய் சாதம் கொடுங்கள்! 


வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்க வேண்டும். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது.
தேவையான பொருட்கள்
பொன்னி அரிசி - கால் கிலோ
நெய் - 100 கிராம்
பட்டை - 3 துண்டுகள் (சிறியது)
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பூண்டு - 7 பல்
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முந்திரி, திராட்சை - தேவைக்கு
செய்முறை
அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
அடுத்து அதில் வடிகட்டிய அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறவும்.
இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும்.
சுவையான நெய் சாதம் தயார்.
இதனுடன் சைடு டிஸ்சாக குருமா, ரைத்தா தொட்டுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment