Saturday, 27 February 2016

சவூதி மன்னர் சல்மான் சிறு குறிப்பு‬.!


அந்த காலத்தில் மன்னர்கள் கொடை வள்ளல்கள் என கதையில்தான் கேட்டு உள்ளேன் ஆனால் இன்று கண்முன்னே பார்கிறேன் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அள சவூத் அவர்களின் உருவில்.
மார்க்கம் மற்றும் நவீன அறிவியல் படித்த சல்மான் அவர்கள் 1963 ஆண்டு பிப்ரவரி மாதம் அர் ரியாத் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அவர் பொறுப்பேற்றபோது அர் ரியாத் என்பது சவூதியில் ஒரு சாதாரண நடுத்தர நகரமாக இருந்தது அதை தன்னுடைய ஆட்சி திறமையால் உலகத்தரம் வாய்ந்த நகரமாக (Mid-Sized Town to Major Urban Metropolis) மாற்றினார், தற்போது நாட்டின் தலைநகரமாக திகழ்கிறது,
இவருடைய திட்டமிட்ட நகர வடிவமைப்பால் நகரில் சாலைகள் பறந்து விரிந்து ஒரு நேர்கோடு போல் இன்றும் காட்சி அளிக்கின்றன.
நகரில் பிச்சை எடுப்பதை தடைசெய்து மறுவாழ்வு மைய்யங்களை நிறுவி அதன் மூலம் பிச்சை எடுப்பவர்களை பிடித்து மறுவாழ்வு அளித்தார்.
பாலைவன மையப்பகுதியான அர் ரியாத் மாநகரை உருவாக்க இயற்கை சார்ந்த பெரும் சிரமங்களை சந்தித்தார் இருப்பினும் அர் ரியாத்தை வர்த்தக மற்றும் வணிக ரீதியாக மத்திய கிழக்கு ஆசியாவில் பணக்கார நகரமாக தரம் உயர்த்தினார்.
நகரை கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், வணிகம் என அனைத்திலும் தன்னிறைவு பெற வைத்தவர், குறிப்பாக உலகிலேயே மிக பெரிய பெண்கள் பல்கலைகழகமான நூறா பல்கலைகலகத்தை நிறுவ அப்போதைய மன்னர் அப்துல்லாஹ்விடம் அடித்தளமிட்டவர் இவர்தான்.
இன்னும் ஏராளம் உள்ளன...!!!!!
இவரின் மார்க்கம் மற்றும் ஆட்சி திறமையை கண்டு வியக்கிறேன்.
எல்லா_புகழும்_இறைவன்_ஒருவனுக்கே‬

No comments:

Post a Comment