Sunday, 28 February 2016

விஜயகாந்துடனான கூட்டணி பேச்சு சுமூகமாக இருந்தது: பிரகாஷ் ஜவடேகர்.

Updated on February 28, 2016

   ​விஜயகாந்துடனான கூட்டணி பேச்சு சுமூகமாக இருந்தது: பிரகாஷ் ஜவடேகர்
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமூகமானதாக இருந்தது என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைப்பது குறித்து விஜயகாந்துடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த சந்திப்பில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர். 
விஜயகாந்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், இந்த சந்திப்பு சமூகமானதாக இருந்ததாகவும், இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர், தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு பிரதமர் மோடி 2 ஆயிரம் கோடி ரூபாய் அளித்ததாலேயே, 14 லட்சம் பேர் பயனடைந்ததாக கூறினார். 
ஆனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் நற்பெயர் சம்பாதித்து கொள்ளவதாகவும் அவர் பேசினார்

No comments:

Post a Comment