Monday, 25 January 2016

சீமான் அறைகூவலை ஏற்றது TNTJ : விவாதத்திற்கு தயார் - TNTJ அதிரடி அறிவிப்பு.....!!


எந்த மதத்தின் நூல்களையும் விட திருக்குறளே உலக பொதுமறை என்றும் இதற்காக தாம் எந்த மதத்தினருடனும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார்.
சீமானின் அறைகூவலை ஏற்று விவாதத்திற்கு தாம் தயாராக இருப்பதாகவும், திருக்குறளில் நல்ல கருத்துக்கள் இருப்பதுப்போல் காலத்துக்கு ஒவ்வாத, அறிவுக்கு பொருந்தாத, நடைமுறைப்படுத்தமுடியாத, சீமானே எதிர்க்கிற பல்வேறு கருத்துக்கள் அடங்கியுள்ளதை தக்க ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக சீமானுக்கு விவாதத்திற்கான ஒப்பந்தம் போடுவதற்கு TNTJ அழைப்பு விடுத்துள்ளது.
TNTJ யின் அறிவிப்பை ஏற்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விவாதத்திற்கு முன் வர வேண்டும்.
கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுடன் விவாதம் செய்து வெற்றி, கிறித்தவர்களுடன் விவாதம் செய்து வெற்றி, இந்து முன்னணிக்கு விவாதத்திற்கு அழைப்பு விடுத்து TNTJ நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் விவாதத்திற்கு வருவார் என்றால் தாம் விவாதத்திற்கு வரமாட்டேன் என்று இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலனை தலைதெறிக்க ஓட விட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீமானின் அறைகூவலை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment