Sunday, 27 December 2015

மக்கா மஸ்ஜிதுல் ஹரமில் பாங்கு சொல்லிவந்த முஅத்தின் மரணம்!




Dec 27/12/2015

புனித ஹரமின் முஹத்தின்களில் ஒருவரான  முஹம்மது சிறாஜ் அவர்கள் ஹரமில் எழுப்பிய இறுதி பாங்கோசை
மிக சிறப்பு வாய்ந்த பணிகளில் ஒன்று தான் முஹத்தின் பணி சாதரண பள்ளிகளிலேயே முஹத்தினாக பணியாற்றுவது சிறப்பு வாய்ந்த பணியாக கருதபடும்போது, உலகில் இறைவனை வணங்குவதற்காக முதல் முதலில் எழுப்பபட்ட ஆலயத்தில் முஹத்தினாக பணியாற்றுவதின் சிறப்பை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஆம் மக்காவில் அமைந்துள்ள புனித ஹரமின் முஹத்தின்களில் ஒருவர் தான் முஹம்மது சிறாஜ் அவரது உலகவாழ்வு 25.12.2015 நிறைவுக்கு வந்தது.
புனித ஹரமின் புனித பணியில் இருந்த முஹம்மது சிறாஜ் அவர்களின் மண்ணறையும் மறுமையும் சிறக்க நாம் பிரார்த்திப்போம்.
முஹம்மது சிறாஜ் அவர்கள் மரணத்திற்கு முன்பு இறுதியாக ஹரமில் எழுப்பிய பாங்கோசையை தான் நீங்கள் காட்சியில் காண்கின்றீர்கள்

No comments:

Post a Comment