Monday, 28 December 2015

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் எதிரொலி விஜயகாந்த் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Post by : 28/12/2015


தஞ்சை

 தஞ்சையில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தபோது, பயணிகள் நிழலகத்தில் மின்னொளி பலகையில் இருந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அந்த படத்தை பார்த்தால் கோபமாக வருகிறது. அதை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் தொண்டர்களிடம் கூறியதால் அந்த படம் அகற்றப்பட்டு உடைக்கப்பட்டது என்றும், இதனால் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தஞ்சை சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் ரெங்கசாமி போலீசில் புகார் கூறியிருந்தார்.

இதையொட்டி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. 8 நிர்வாகிகள் மற்றும் 50 நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமாரும் புகார் அளித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment