முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22 ந்தேதி இரவு காய்ச்சல் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் சென்றார்.
அப்போது, முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு சென்று பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் ஆளுநர் கேட்டறிந்தார்.
முதலமைச்சருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும் , அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment