Tuesday, 6 September 2016

வெளிநாட்டில் பணிபுரியும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி !!!


எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 300 அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது என இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
மேலும் பல நாடுகளுடன் இது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்காக குறித்த குறைந்தபட்ச ஊதியத்தினை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment