சமூக வலைதளங்களில் பயங்கரவாத குழுக்கள் செயல்படுவதைக் கண்காணிக்கும் வகையில், தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை, அதிக அளவிலான பயங்கரவாதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதால், அவற்றைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, ரூ 32 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப ஆய்வுக்கூடம், சமூக வலைதளங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் வைத்துள்ள கணக்குகளையும், அவர்களின் பதிவுகளையும் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment