Friday, 19 August 2016

சவுதி அரேபியாவில் பணியாற்றும், வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர தடை உட்பட புதிய கட்டுப்பாடு:


சவுதி அரேபியாவில் பணியாற்றும், வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர தடை உட்பட புதிய கட்டுப்பாடு:
  சவுதி General Directorate of Passports தலைமைகத்தை மேற்கோள் காட்டி சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) நேற்று  வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
    வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள், சவுதி அரேபியாவில், எந்த எந்த நிறுவனத்தின் மூலம் பணிக்குச் சேருகிறார்களோ (கஃபீல்) அந்த நிறுவனத்திலிருந்து விதிமுறைகளுக்கு எதிராக வெளியேறினால், இனிமேல் அபராதமாக சவுதி ரியால்(SR) 10000 செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் மற்றும் நாடு கடத்தப்படவும், நாட்டுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடையையும் சந்திக்க நேரிடும்.
   ஓடிப்போகும் வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் என சவுதி பிரஜைகளை, பாஸ்போர்ட் முகமை அறிவுறுத்தியுள்ளது.
அதை அவர்கள் கடைபிடிக்காவிட்டால், அவர்களும் சவுதி ரியால்(SR) 10000
அபராதம் கட்டவும்,மற்றும் 6 மாதம்  சிறை தண்டனையை அனுபவிக்கவும் நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
     இப்படி வெளியே தொழிலாளர் பற்றி Sponsore(அரபி) Online மூலம் தொழில்துறை அமைச்சகத்திற்கு புகார் தெவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இப்படி வெளியே தொழிலாளர்  தங்களுக்கு ஏற்பட்ட  பிரச்சனையில் மற்றும்  கொடுமைகள் ஆதரத்துடன் நிரூப்பித்தால் மட்டுமே பிழையில் இருந்து தப்பிக்க முடியும்.
  இதற்கிடேயே ஸ்பான்ஸர்ஷிப் எனப்படும் முகமை அடிப்படையில் பணிக்கு அமர்த்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அது ஒருவித அடிமைத்தனம் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Source: Arab Times

No comments:

Post a Comment