மாமன்னரிடம் மன்னர்.
இரமலானில் சிறப்பு வாய்ந்த இறுதி பத்து தினங்களில் ஹரமைனில் இபாதத்தை நிறைவேற்றுவதற்காக மதீனா முனவ்வரா நகருக்கு மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் வருகை புரிந்துள்ளார். மஸ்ஜிதுன்னபவிக்கு வருகை தந்த மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் மாமன்னர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லாவில் நின்று பணிவாக ஸலாமை எத்திவைத்து விட்டு சில மணித்துளிகள் முனாஜாத் செய்தார்கள்.பின்னர் ரவ்லதுல் ஜன்னாவில் தொழுகையை நிறைவேற்றினார்கள். அவர்களுடன் கண்ணியமான இமாம்கள் அஷ்ஷெய்கு அப்துல் ரஹ்மான் ஸுதைஸி அஷ்ஷெய்கு ஹுதைபி மற்றும் அஷ்ஷெய்கு அல் முஅன்னா. அஷ்ஷெய்கு ஸலாஹுல் பத்ரு حفظهم الله ஆகியோர் இருந்தார்கள். மதீனா முனவ்வரா நகரின் மேம்பாட்டு திட்டத்துக்கான வரைவுகளை காணொளி மூலம் துவக்கி வைத்தார்கள்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த நாளான குர்ஆன் அருளப்பட்ட லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ளும் விதமாக ரமலானின் இறுதி 10 நாளும் மக்காவில் தங்குகிறார்.
81 வயதிலும் ஈமானில் உறுதியானவராகவும், தாம் ஓர் மன்னர் என்பதை விடவும் அல்லாஹ்வுடைய அடிமை என்பதையே பிரதிபலித்து வருகிறார்.
No comments:
Post a Comment