Sunday, 24 April 2016

உத்தரப்பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் கலவரம் – துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி


அலிகார் : 
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். நேற்று மாலை இங்கு மாணவர்களிடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.
ஒரு பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழக அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினார்கள். அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் அலுவலகம் பயங்கரமாக பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். என்றாலும் கலவரம் கட்டுக்குள் அடங்கவில்லை.
உடனே போலீசார் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு மாணவர் குண்டு பாய்ந்து பலியானார்.
இந்த கலவரத்தால் அலிகாரில் பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்

No comments:

Post a Comment