Saturday, 30 April 2016

ஷார்ஜாவில் பிரபல தொலை தொடர்பு துறையின் (எதிசலாத் ) பெயரில் போலி அழைப்பு விடுத்து பரிசுத் தொகை அறிவித்து பணம் பறித்த கும்பல் 21 பேர் கைது:

ஷார்ஜா:
ஏப்ரல் 30 :2016


ஷார்ஜாவில் பிரபல தொலை தொடர்பு
துறை சேவை வழங்குநர் (எடிசலாட்) இருந்து அழைப்பதாக கூறி போலி அழைப்பு விடுத்து பரிசுத் தொகை அறிவித்து பணம் பறித்த கும்பல் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
    இவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள்
துல்லியமாக சந்தேகம் வராதமுறையில்
அழைத்து Dh200,000  பரிசு தொகை மற்றும் ஐபோன் 6 பெறும் பொருட்டு உடனடியாக Dh5,000 முதல் Dh10,000 இடையே ஒரு தொகையினை வாடிக்கையாளர்கள் பரிமாற்ற  தொகைகள் கட்டி இந்த பரிசை பெறலாம் என்று கூறி பலரை ஏமாற்றியுள்ளனர்.
  எனவே ஷார்ஜா போலீஸ் உயர் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஃபைசல் பின் நாசர் குற்றப் புலனாய்வுத் துறை துணை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 999 அல்லது 06-5632222 அல்லது கட்டணமில்லா எண் Najeed
800 151 அல்லது 7999 எண்ணுக்கு  எஸ்எம்எஸ் வழியாக
புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
 இணையத்திலும் புகார் செய்யலாம்
www.shjpolice.gov.ae/najeed
செய்தி:(Gulf news newspaper)

No comments:

Post a Comment