தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்வமுடன் ஈடுபட்டது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் பெய்த கன மழையால் 16 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர், சென்னை மாநகர், புறநகர் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வழக்கமாக வெள்ள பாதிப்பு களின்போது அரசும், சில சமூக, தன்னார்வ தொண்டு அமைப்பு களும் மட்டுமே நிவாரணப் பணி களில் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சிகள் பெயரளவுக்கு சில இடங் களில் நிவாரண உதவிகளை வழங்குவதோடு நிறுத்திக்கொள் வார்கள். ஆனால், இந்த முறை பெரும்பாலான அரசியல் கட்சிகள் போட்டுக்கொண்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை காண முடிந்தது.
அதிலும் குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத் எனும் தொண்டு நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால உதவிகள் வழங்கியதுடன் 33 கோடி செலவில் நிவாரன தொகைகள் மற்றும் உணவு , உடைகள் வழங்கி மனிதநேயத்தால் மக்களை மலைக்க வைத்துள்ளது.
இதில் ஹைலைட் என்ன வென்றால் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தேர்தலில் ஓட்டும் சீட்டும் நோட்டும் கேட்காது என்பதுதான்.
வெள்ள நிவாரணப் பணிகுறித்த பாலிமர் செய்தி
No comments:
Post a Comment