Sunday, 21 February 2016

தாஜ்மகாலை இடித்து தள்ள வேண்டும்: சமாஜ்வாடி கட்சி தலைவர் பேச்சால் சர்ச்சை!


ராம்பூர்: தாஜ்மகாலை இடித்து தள்ள வேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரும், உத்தரபிரதேச நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான அசம்கான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் அவர் பேசுகையில், ''தாஜ்மகால் தற்போது உலகின் அபூர்வ நினைவுச் சின்னமாக இருக்கிறது. ஆனால், மக்கள் விஷம் வாங்கக்கூட பணம் இல்லாமல் இருந்த காலத்தில், அரசு பணத்தை முற்றிலும் தவறாக பயன்படுத்தி, மும்தாஜுக்காக வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்டது. 
அடிமை சின்னம் ஒன்றை இடித்து தள்ள வேண்டும் என்றால், முதலாவதாக தாஜ்மகாலை இடித்து தள்ள வேண்டும். அதன்பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தையும் இடிக்க வேண்டும்.
தாஜ்மகாலை இடித்து தள்ள முடிவெடுக்கப்பட்டால், அதை தலைமையேற்று நடத்துவதில் நான் முதலில் நிற்பேன்'' என்றார்.
சமாஜ்வாடி கட்சி தலைவரின் இந்த பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment