Saturday, 27 February 2016

38,411 பசுமை வீடுகள் வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 17,000 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கூட்டரங்கம், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் 1 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள்; நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகக் கட்டடம்;
கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 41 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்;
அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 87 ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள்;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறும் அலுவலர்கள் தங்குவதற்கு ஏதுவாக, ஓய்வு அரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி அரங்கம், யோகா அரங்கம், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை ஆகிய வசதிகளுடன் 11 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் தங்கும் விடுதி;
அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 வட்டார ஊராட்சி சேவை மையங்கள்;
அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 105 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 762 கிராம ஊராட்சி சேவை மையங்கள்;
கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தேனி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 38 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 31 பாலங்கள்;
கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பேருந்து நிலையங்கள்;
அரியலூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள்;
ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 சமுதாயக் கூடங்கள்;
காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் விற்பனைக் கூடங்கள், மீன் வலைப்பின்னல் கூடங்கள், மீன் ஏலம் விடும் அரங்கம் மற்றும் மீன் கொள்முதல் மையம்;
அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 32 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 302 அங்கன்வாடி கட்டடங்கள், 44 தானியக் கிடங்குகள், 6 பொது விநியோகக் கடைகள், 2 சுகாதார மையங்கள், 3 ஆண்கள் சுகாதார வளாகங்கள், 2 பயிற்சிக் கூடங்கள், 2 விளையாட்டு மைதானங்கள், 4 சமையல் கூடங்கள், 3 நாடக மேடைகள், 2 பேரிடர் மேலாண்மை கட்டடங்கள், 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 3 ஊராட்சிக் கூட்டமைப்பு கட்டடங்கள்;
என மொத்தம் 273 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் 92 லட்சம் உறுப்பினர்களைக்கொண்டு 6 லட்சத்து 8 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் ஊரகப்பகுதிகளில் சுமார் 4 லட்சத்து 23 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இக்குழுக்களுள் 15 முதல் 20 வரை உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் பணிகளை மேற்பார்வையிடுவதற்கும் வழிநடத்துவதற்கும் ஒரு சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர் என்ற அளவில் தமிழ்நாட்டில் சுமார் 20,000 சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்கள் ஊரகப்பகுதிகளில் உள்ளனர். மகளிர் சு­ய உதவிக் குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, உட்கடன் விவரம், கடனை மீளச் செலுத்துதல் போன்ற பணிகளுக்காக பல்வேறு பதிவேடுகளை பராமரிக்கவும், பதிவு செய்யவும், செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் அம்மா கைபேசி திட்டம் என்ற புதிய திட்டம் துவக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக, தமிழகத்தில் உள்ள 20,000 சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அம்மா கைபேசிகளை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, 3 சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு அம்மா கைபேசிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி, துவக்கி வைத்தார்.
அம்மா கைபேசி திட்டத்தின் கீழ் சமுதாய பயிற்றுனர்களுக்கு கைபேசியுடன் சிம் சேவையும் இலவசமாக வழங்கப்படும். சிம் கார்டு பயன்பாட்டிற்கான மாதாந்திர கட்டணத்தை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நவீன கைபேசியில் ஒருவருக்கொருவர் பேசுதல், குறுஞ்செய்திகள் அனுப்புதல், புகைப்படம் எடுத்தல், ஜிபிஆர்எஸ் இணைய தொடர்பு வசதி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதல்–அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 807 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 38,441 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளை வழங்கும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி, துவக்கி வைத்தார்.
2012–2013 மற்றும் 2013–2014ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் அதிக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கி சிறப்பாகச் செயல்பட்டு முதலிடம் பெற்றமைக்கான விருதினை இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மகேஷ் குமார் ஜெயினுக்கும்,
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி 2012–2013ஆம் ஆண்டு இரண்டாம் இடமும், 2013–2014ஆம் ஆண்டு மூன்றாவது இடமும் பெற்றமைக்காக, அவ்வங்கியின் தலைவர் ஆர். இளங்கோவனுக்கும்,
பல்லவன் கிராம வங்கி 2012–2013ஆம் ஆண்டு மூன்றாவது இடமும், 2013–2014ஆம் ஆண்டு இரண்டாவது இடமும் பெற்றமைக்காக, அவ்வங்கியின் தலைவர் எஸ். சுரேஷ் குமாருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர், ஞானதேசிகன், ஷீலா பாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கா. பாஸ்கரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வி. அமுதவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment