பதிவு செய்த நாள்: டிச 29,2015 00:48
மும்பை,:'பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்ட யாரும், அரசியலில் நீண்ட காலம் நீடித்ததில்லை' என, பா.ஜ.,வின் தோழமைக் கட்சியான சிவசேனா விமர்சித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில் வெளியாகியுள்ள தலையங்கம்:பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, எல்.கே.அத்வானி, பாகிஸ்தான் சென்ற போது, அந்நாட்டின் முதுபெரும் தலைவரான, முகம்மது அலி ஜின்னாவின் கல்லறைக்கு சென்றார்; அவரை புகழ்ந்து பேசினார். அதன் பின், அத்வானியின் அரசியல் வாழ்க்கை சரிவை சந்தித்தது; தற்போது, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். பா.ஜ., மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பாகிஸ்தானுடனான உறவை புதுப்பிக்கும் நோக்கில், இரு நாடுகள் இடையே பஸ் போக்குவரத்தை துவக்கினார். இந்தியாவுக்கு வந்த, பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்பை, ஆக்ராவில் வாஜ்பாய் சந்தித்தார். அதன்பின், அவரால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.
தற்போது, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தானுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசியுள்ளார். இதே காரியத்தை, காங்., பிரதமர்கள் செய்திருந்தால், பா.ஜ., தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பரா என, ஒட்டு மொத்த நாடே கேள்வி கேட்கிறது. பாகிஸ்தான், சாபமிடப்பட்ட மண். லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்களின் ரத்தம் உறைந்த பூமி அது. அங்கு சென்ற இந்திய தலைவர் யாரும், நீண்ட காலம் அரசியலில் நீடித்ததில்லை. இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில் வெளியாகியுள்ள தலையங்கம்:பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, எல்.கே.அத்வானி, பாகிஸ்தான் சென்ற போது, அந்நாட்டின் முதுபெரும் தலைவரான, முகம்மது அலி ஜின்னாவின் கல்லறைக்கு சென்றார்; அவரை புகழ்ந்து பேசினார். அதன் பின், அத்வானியின் அரசியல் வாழ்க்கை சரிவை சந்தித்தது; தற்போது, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். பா.ஜ., மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பாகிஸ்தானுடனான உறவை புதுப்பிக்கும் நோக்கில், இரு நாடுகள் இடையே பஸ் போக்குவரத்தை துவக்கினார். இந்தியாவுக்கு வந்த, பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்பை, ஆக்ராவில் வாஜ்பாய் சந்தித்தார். அதன்பின், அவரால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.
தற்போது, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தானுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசியுள்ளார். இதே காரியத்தை, காங்., பிரதமர்கள் செய்திருந்தால், பா.ஜ., தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பரா என, ஒட்டு மொத்த நாடே கேள்வி கேட்கிறது. பாகிஸ்தான், சாபமிடப்பட்ட மண். லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்களின் ரத்தம் உறைந்த பூமி அது. அங்கு சென்ற இந்திய தலைவர் யாரும், நீண்ட காலம் அரசியலில் நீடித்ததில்லை. இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment